Thursday, June 25, 2009

மைக்கேல் ஜாக்சன் மரணம்!




இன்று (ஜூன் 25 2009) மதியம் சுமார் மூன்று மணி (பசிபிக் நேரப்படி) அளவில் மைக்கேல் ஜாக்சன் மரணம் அடைந்தார்!

மதியம் 2:30மணிக்கு அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது! ஆனால், மருத்துவர்கள் வந்து நாடி பார்க்கும்போது மூச்சும் இல்லை நாடியும் இல்லை! இருந்தாலும் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்! அங்கு போராடியும் பயனில்லாமல் மரணம் அடைந்தார்!

பாப் உலகின் கிங் என்று அழைக்கப்படும் மைக்கேல் ஜாக்சனுக்கு 50 வயது!

Monday, June 22, 2009

எங்கேயோ படித்தது!

படிக்க தமாஷாக இருந்தது:


When a panel of doctors was asked to vote on adding a new wing to their hospital, the
Allergists voted to scratch it and the Dermatologists advised against rash moves.

The Gastroenterologists had a gut feeling about it, but the Neurologists thought the administration had a lot of nerve, and the Obstetricians stated they were all labouring under a misconception.

The Ophthalmologists considered the idea short-sighted, the Pathologists yelled, "Over my dead body", while the Pediatricians said, "Grow up!"

The Psychiatrists thought the whole idea was madness, the surgeons decided to wash their hands of the whole thing and the Radiologists could see right through it!

The physicians thought it was a bitter pill to swallow, and the Plastic Surgeons said, "This puts a whole new face on the matter."

The Podiatrists thought it was a step forward, but the Urologists felt the scheme wouldn't hold water. The Anesthesiologists thought the whole idea was a gas and the Cardiologist didn't have the heart to say no.

In the end, the Proctologists left the decision up to some butt hole in Administration.

Tuesday, June 16, 2009

அமெரிக்க டீன் ஏஜர்களின் பொது அறிவு!

போன மாதம் ஒரு நாள் நான் ஆஃபிஸ் போய்க்கொண்டிருந்தபோது எதேச்சையாக ஒரு ரேடியோ ஸ்டேஷனை ட்யூன் செய்தேன்! சாதாரணமாக தமிழ் சினிமா பாட்டுக்கள்தான் கேட்டுக்கொண்டு போவேன்! அன்று ஏதோ ஒரு நினைப்பில் ரேடியோ போட்டேன்!

அப்போது அந்த ஸ்டேஷனில் லோக்கல் ந்யூஸ் என்று ஆரம்பித்தார்கள்! பிறகு ஆர்.ஜே.க்கள் அவர்களுக்குள்ளேயே ஜோக் அடித்துக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தார்கள்!அப்போது ஒருவர் சொன்னார் டல்லாஸில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் (ஹை ஸ்கூல் என்பது நம்மூர் +1 +2 மாதிரி)! சீனியர்கள் (+2 படிப்பவர்கள்) இனிமேல் செல் ஃபோன் எடுத்துக்கொண்டு போகக்கூடாது! குறிப்பாக வகுப்புக்குள் செல் ஃபோன் அனுமதியில்லை என்று சொல்லிக்கொண்டு வந்தார்கள்! கூடவே அந்தப் பள்ளியில் படிக்கும் சீனிய்ரகளையும் பேட்டி எடுத்ததை ஒலிபரப்பினார்கள்!

இதில்தான் காமெடியே! ஒரு மாணவன் “இது அநியாயம்! அக்கிரமம்! செல் ஃபோன் இல்லையென்றால் எங்கள் அப்பா அம்மாவிற்கு நான் எங்கே இருக்கிறேன் என்று எப்படி சொல்வது?”என்று கேட்டான்! அவன் கேட்டதில் நியாயம் இருக்கிறது! போகட்டும்! அடுத்து வந்த ஒரு மாணவி சொன்னதுதான் காமெடி! “அய்யோ! எனக்கு கடிகாரத்தில் மணி பார்க்கவே தெரியாது! செல் ஃபோனில் மட்டும்தான் மணி பார்க்கத்தெரியும்! இனிமேல் நான் எப்படி மணி பார்த்து வீட்டுக்குப் போவேன்?” என்று கேட்டாள் பாருங்கள்!

இது இப்படி இருக்கிறதா? அந்தப் பள்ளியின் லைப்ரரியில் ந்யூஸ் பேப்பர்கள் வரவழைத்து படிக்க வைக்கப் போகிறார்கள் என்று ந்யூஸ் சொல்லிவிட்டு அது ஏன் என்றால் மாணவர்களிடம்படிக்கும் பழக்கம் குறைந்துவிட்டதற்காக என்றும் சொன்னார்கள்! அதைப் பற்றி ஒரு சீனியர் மாணவன் சொன்னது “அடக் கடவுளே! ந்யூஸ் பேப்பரில் செய்தியெல்லாம் கச்சாமுச்சாவென்று இருக்குமே! தவிரவும் அதைப் பக்கம் பக்கமாக புரட்டவேண்டுமே? அதன் ஃபார்மேட்டே தப்பு! அது எனக்கும் பிடிக்காது!” என்று சொன்னான் பாருங்கள்!

ஆர்.ஜே.க்களுடன் ரேடியோ கேட்டுக்கொண்டிருந்த நானும் விழுந்து விழுந்து (காரை விட்டு அல்ல) சிரித்தேன்!

Wednesday, June 10, 2009

ரஹ்மானுடன் முதல் சந்திப்பு!

ரஹ்மானை சந்தித்தது ரொம்ப வித்தியாசமான அனுபவம்! "காதலன்" படம் வந்த புதிதில் அவரை பார்த்தது!அப்போதெல்லாம் முக்கால்வாசி பேர் அவரை திலீப் என்றுதான் கூப்பிடுவார்கள்! நான் முன் குறிப்பிட்ட வட இந்திய பத்திரிக்கை நிருபர், என் சித்தப்பா + நான்! மூவரும் வட பழனியில் உள்ளசுப்பையா நகரில் உள்ள ஏ.ஆர். ரஹ்மானின் வீட்டிற்கு போனோம்!

முதலில் எங்களுக்கு அவர் வீடு தெரியாத்தால் வழியில் விசாரித்துக்கொண்டுதான் போனோம்! பல பேர்களுகு அவர் வீடு தெரியவில்லை (1994-இல்)! ஒரு வழியாகபோய் சேர்ந்தால் வாசலில் பெரிய இரும்பு கேட். Sentry-இல் பல தடியாட்கள் உள்ளே விடமாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள்! கடைசியில் நிருபர் தன் அடையாள அட்டையை காண்பித்ததும் உள்ளே விட்டார்கள்!அப்போது அவர் வீட்டில் வரவேற்பறை என்று ஒன்று ஸ்பெஷலாக ஒன்று கிடையாது! அவர் ஆஃபிஸ் ரூமிலேயே காத்திருந்தோம்! நாங்கள் போனது ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம்! உள்ளே விடும்போதே "அவர் இப்போதான் எழுந்திரிச்சிருக்காரு! கொஞ்சம் வெயிட் பண்ணவேண்டியிருக்கும்!" என்றுதான் சொல்லி அனுப்பினார்கள்! அதனால் அங்கேயே உட்கார்ந்து நாங்கள் மூவரும் பேசிக்கொண்டிருந்தோம் ("What a contrast? அங்கே ராஜாகாலை 8:30 - 5:00 வேலை செய்யறார் ஆஃபிஸ் கணக்கா! இங்கே என்னடான்னா திருடன் மாதிரி ராத்திரி வேலைசெய்யறான்" என்றெல்லாம் பேசிக்கொண்டோம்)!

கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் கழித்து குள்ளமாக ஒல்லியாகவும் இல்லாமல் குண்டாகவும் இல்லாமல் ஒரு இளைஞன் பச்சை கலர் Lacoste டீ ஷர்ட்டுடன் நீல கலர் ஜீன்ஸுமாக - செருப்பு போட்டுக்கொள்ளாமல் - உள்ளே நுழைந்தான் சாரி நுழைந்தார்! கையை குலுக்கி "நான் தான் ரஹ்மான்!" என்றார்! எங்களுக்கெல்லாம் தூக்கி வாரி போட்டது! அது வரை ஃபோட்டோவில்தான் பார்த்திருக்கிறோம் அவரை! இவ்வளவு குள்ளமா (கவனிக்க: ராஜாவும் குள்ளம்தான்!யுவனும் குள்ளம்தான்!) யதார்த்தமா இருக்கிற ஒருத்தரா தமிழ் இசை உலகை திடீரென்று கலக்கிக்கொண்டிருக்கிறாரா என்று ஒரே ஆச்சர்யம்! அதுவும் சினிமா உலகில் ஒரு ஹிட்டுக்கே பந்தா செய்யும் நிலையில் இந்த ஆள் சர்வசாதரணமாக பேசுகிறார். அதுவும் நுனிநாக்கு ஆங்கிலத்தில்! படித்த ஆளுக்கு இங்கே என்ன வேலை என்றெல்லாம்பிறகு பேசிக்கொண்டோம்! Anyway... அவர் எங்களை உள்ளே கூப்பிட்டுக்கொண்டு போனார்! அதுவும் ஒரு பெரிய ஹால் மாதிரிதான் இருந்தது! நாங்கள் எங்கிருந்து வருகிறோம் ஏதாவது சாப்பிடறீங்களா என்று கேட்டுவிட்டு intercom-இல் யாரையோகூப்பிட்டு எங்களுக்கு காஃபி தரச்சொன்னார்! கொஞ்ச நேரம் பேசிவிட்டு "Interview-ன்னா இன்னொரு நாள் வாங்க!இப்போ எனக்கு வேலை இருக்கு!" என்றார்! எப்போது வருவது என்று கேட்டதற்கு "அடுத்த வாரம் வாங்களேன்!"என்றார்! அடுத்த வாரமும் போனோம்! ஆனால் ஒன்றை மறந்துவிட்டோம்! அது பிறகு.......

Tuesday, June 9, 2009

யுவன் ஒரு Ass Hole!

என்னடா இவன் அப்பாவைப் பத்தி எழுதிட்டு பையனைப் பத்தி வேற எழுதப்போறானான்னு தெறிச்சு ஓடறத்துக்கு முன்னாடி....

யாராவது யுவனை நேராகப் பார்த்தால் ஓங்கி பளாரென்று ஒரு அறை விடுங்கள்! இல்லையென்றால், அட்லீஸ்ட் ஒரு ஷூவையாவது வீசுங்க! அந்த பன்னாடை பரதேசிக்கு ஏதாவது புத்தியாவது வரட்டும்!

பின்ன என்னங்க? “பட்டியல்” படத்துல வர்ற “போகப் போக பூமி தெரிகிறதே” பாட்டின் ஆரம்பத்தில் ஒரு Rap பிட்டை வைத்திருப்பார்! “ர்” என்ன, “ன்”! அது "Soul Train"போன்ற ஆல்பத்தில் இருந்து சுட்ட மாதிரி இருக்கும்! அதை விடுங்கள்! சுட்டால் கூட பெரிய விஷயமில்லை! ஆனால் அந்த பிட்டில், ஆங்கில வரிகளில் ச்சும்மா புகுந்து விளையாடியிருப்பான் அவன்! அதில் ஒரு வரியில் “Your ass real fast! Legs like chicken!" என்றெல்லாம் கூட வரும்!
“Ass" என்றால் சுத்தத்தமிழில் “ஆசனவாய்” அல்லது “குண்டி”என்று அர்த்தம்!

சரி, ஏதோ அவனுக்கு இங்லீஷ் தெரியாதுன்னு சும்மா இருந்துட்டோம்! ஆனா பாருங்க, “சென்னை 600008” படத்துல, “வாழ்க்கைய யோசிங்கடா” பாட்டை
ரீ-மிக்ஸ் பண்ணியிருப்பான்! அதுலதான் சூட்சுமமே இருக்கு! அந்தப் பாட்டுல, நடு நடுல சும்மா இருக்கட்டுமேன்னு “...த்தா” அப்படின்னெல்லாம் அடிச்சு விட்டிருக்கான்! அதுவும் கடைசீல, பாட்டு முடியும்போது கேட்டீஙகன்னா, பிரேம்ஜி சொல்றான் “This is 2007! Deal with it. Biatch!"! அதாவது, “இது 2007ம் வருஷம்! அப்படித்தான் சொல்லுவோம்! கேட்டுத்தொலைங்கடா பெண் நாய்களா (அல்லது) விலைமாதர்களா”! என்ன தைரியம் அந்தப்
பன்னாடைக்கு?

அய்யா! நான் சின்னப் பையன் இல்ல கொஞ்சம் பெரியவந்தான்! ஆனா, எந்தக் காலத்திலும் யாரும் அந்த மாதிரி கெட்ட வார்த்தைங்கள சொல்ல கூச்சப்படுவாங்க! கஷ்டப்பட்டு கூலி வேலை செய்யும் ஆசாமிகள் கூட தன் பிள்ளைகளை “...தா ..ம்மா” என்று பேசும் கும்பலிடம் சேர்க்கவிடாமல் வளர்ப்பார்கள்! இப்போ என்னன்னா, படிச்ச நாய்களே இப்படி கேவலமா சொல்லிட்டு திரியுதுங்க!

அந்த் கம்முனாட்டிங்க என்னத்தப் படிச்சானுங்களோ?

Friday, June 5, 2009

மொட்டை என்கிற ம்யூசிக்கல் ஜீனியஸ்

என்னடா எல்லாரும் நம்ம ம்யூசிக்கல் தலையைப் பத்தி எழுதறாங்க நாமளும் எழுதனுமேன்னு வந்தது இந்த போஸ்ட்! அது சரி, அடுத்தவங்களெல்லாம் எழுதறாங்கன்னா அவங்களுக்கு சங்கீத ஞானம் கொஞ்சமாச்சும் இருக்கும்போல! நமக்கெல்லாம் அவ்வளவு இல்லென்னாலும் சில விஷயங்களை புரிஞ்சிக்க முடியுதுங்க!

பாருங்களேன்! இப்படித்தான் சமீபத்தில் அதாவது 1984-இல் (டோண்டு ராகவனின் பழக்கும் எனக்கும் தொத்திக்கிட்டது போல) நான் +1-வது படிக்கையில் என் சித்தப்பா ஒரு ஆடியோ காசெட்டை கொண்டுவந்து கொடுத்தார்! அப்போதுதான் ஃக்வார்டெர்லி எக்ஸாம் முடிந்த சமயம்! அப்போதெல்லாம் ஸ்டீரியோ ஃபார்மேட்டில் பாட்டு வேணும்னா நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு ஆடியோ கடையில்தான் காசெட் ரெக்கார்டிங் செய்வார்கள் (ஸ்டிரியோவிஷன்)! அந்த காசெட்டில் இருந்த பாட்டுக்கள் எல்லாம் ரிலீஸ் ஆகாத பாட்டுக்கள் என்று வேறு சொல்லிக் கொடுத்தார்களாம்! அதனால் எனக்கு anxiety அதிகமானது! A-சைடில் ரீவைண்ட் செய்து போட்டேன்! முதல் பாடலே ஒரு மாதிரி இருந்தது! என்னவோ “வானிலே தேனிலா” என்றெல்லாம் பாடியது! ஆனால் அந்தப் பாட்டில் ஏதோ ஒன்று சரியில்லை அல்லது வித்தியாசமாக இருக்கிறது என்று மட்டும் தெரிந்தது! ஆனால் அந்தப் பாடல் எல்லாம் “காக்கிச் சட்டை” படத்தில் வருமென்றெல்லாம் தெரியாது எனக்கு அப்போ!

எதற்கு சொல்கிறேன் என்றால்! 1985 ஏப்ரலில் அந்தப் படம் வெளிவந்தபோது “ஒளியும் ஒலியும்” நிகழ்ச்சியில் போட்ட ஒரு பாட்டு எங்கேயோ கேட்டமாதிரி இருக்கேன்னு பாத்தால், நம்ம கிட்டே ரொம்ப மாசத்துக்கு முன்னமேயே வந்த காசெட்டில் இருந்துருக்கிறது! இதை என் நண்பனிடம் சொன்னபோது என்னை ”ஏண்டா முன்னமேயே சொல்லலை” என்று உதைக்காத குறையாக திட்டி வாங்கிக்கொண்டு போனான்!

சரி, விஷயத்துக்கு வருவோம்! “வானிலே தேனிலா” பாட்டை நான் பலமுறை கேட்டிருக்கிறேன்! என்னிடம் ஒரு ஓட்டை உடைசல் வாக்மேன் இருந்தது! அதில் பேட்டரி தீரும் வரை அந்தப் பாட்டையே சுமார் 30 வாட்டிகேட்டிருக்கிறேன்! அப்போதுதான் புரிந்த்து ரெண்டு விஷயம்!

மொதல் விஷயம் என்னன்னா! சாதரணமா, ரிதம் பீட் அடிக்கும்போது, தாளக்கட்டில் நான்கோ அல்லது எட்டோ முறை அடிக்கவேண்டும்! அதுதான் சாதரணமாக எல்லோரும் பின்பற்றுவது! ஆனால், நம்ம மொட்டை, அதை மூன்றாக்கியிருப்பார் பாருங்கள்! சூப்பர்! அதாவது “ட ட ட டா” என்று அடிக்காமல் “ட்டா ட டா” என்று அடித்துருப்பார்! அதாவது மொதல் பீட்டையும் ரெண்டாவது பீட்டையும் சேர்த்த மாதிரி அதே சமயம் இரண்டு மாத்திரையில் அடிக்காமல் ஒன்றரை மாத்திரையில் அடித்திருப்பார்! எனக்குத்தெரிந்து மொட்டையின் பாடல்களில் வெளிவந்த முதல் இலக்கண மீறல் என்று நினைக்கிறேன்!

இரண்டாவது விஷயம் என்னன்னா, சாதரணமா, டிரம்ஸ் பீட்டுடன் “ஹை கேப்” என்று சொல்லக்கூடிய டிரம்ஸ் செட்டில் இருக்கும் ஸ்டேண்டு போட்டார்போல இருக்கும் வட்ட இரும்பு தட்டை சேர்த்து தட்டுவார்கள்! சில சமயம் பீட்டை நிரப்புவதற்கும் அதை தட்டுவார்கள்! நம்ம ஆளு, என்ன பண்ணுவார்னா, டிரம்ஸில் ரிதம் பீட்டை வாசித்தால் பாடல் ரொம்ப “hard rock " ஆகிவிடும் என்று bango-வில் ஒரு ஆள் வாசிக்க, இன்னொரு ஆள், “ஹை கேப்பில்” குச்சியால் கூட தட்டி கொஞ்சம் “சாஃப்ட் ராக்” ஸ்டைலில் தட்டுவார்! அது கெடக்கட்டும்! நம்ம “வானிலே தேனிலா” பாட்டை கேட்டீங்கன்னா, ஆரம்ப பல்லவி, அனுபல்லவியில் ட்ரம் பீட்டுடன் “ஹை கேப்” சத்தம் ஒன்றாக கேட்கும்! முதல் “ஸ்டான்ஸா” முடிந்தபிறகு திரும்பி “வானிலே தேனிலா” பாடும்போது கேட்டீங்கன்னா ட்ரம் பீட் முதலில் வரும், அதைத் தொடர்ந்து சுமார் .1 மாத்திரையில் “ஹை கேப்” சத்தம் கேட்கும்! சரி, இப்படித்தான்னு நெனச்சீங்கன்னா, இரண்டாவது “ஸ்டான்ஸாவில்” முடிந்து “வானிலே தேனிலா” பாடும்போது “ஹை கேப்” சத்தம் முதலில் வரும்பிறகு .1 மாத்திரையில் ட்ரம் பீட் வரும்!

ஒரு வேளை, பாட்டில் ஒண்ணும் விஷயம் இல்லைன்னுதான் ஏதாவது வித்தியாசமா இருக்கணும்னு மொட்டை அப்படி செஞ்சாரோ, தெரியாதுங்க! ஆனா, அந்தப் பாட்டை இன்னொரும் வாட்டி கேட்டிங்கன்னா ஏதோ ஒண்ணு ரெண்டு வித்தியாசமா இருக்கறத பாக்கலாம்!

இதே உத்தியை “தென்றலே என்னைத் தொடு” படத்தில் வரும் “கவிதை பாடு குயிலே குயிலே” பாட்டிலும் செய்திருப்பார்!

சும்மாவா சொன்னாங்க? அவரு ஒரு ஜீனியஸ்னு?

Thursday, June 4, 2009

ரஜினியின் வேகம்!

சமீபத்தில் (அதாகப்பட்டது 2008’ல்) நான் பதிந்த “கமலில் வைராக்கியம்” பற்றி சில பேர் மேலும் எழுதச்சொன்னதால், என் மாமனாரின் அனுபவங்களை மேலும் சொ(கொ)ல்கிறேன்!

பிந்தைய பின்னூட்டத்தில் நான் குறிப்பிட்டதுபோல என் மாமனார் எழுபதுகளின் கடைசியிலும் எண்பதுகளின் ஆரம்பங்களில் பல படங்களில் நடித்திருகிறார் (”நிறுத்துங்க இந்த சடங்கை” என்று ஹீரொ உடம்பு முழுதும் ரத்தகாயங்களுடன் நொண்டிக்கொண்டு வரும்போது, “இந்த சம்பந்தமே வேண்டாம் வாடா” என்று இதற்கேன்றே இருக்கும் ராஜக்களின் / சூரியகுமார்களின் / அப்பாஸ்களின் அப்பாவாக வருவார்வகளே!! அந்த மாதிரி ரோல்கள்! இல்லை சில சினிமாக்களின் டாக்டராக வந்து ஹீரோவின் அம்மாவுக்கோ அல்லது அப்பாவுக்கோ ஊசி போடும் ரோல்கள்!)! இப்படி சின்னச்சின்ன வேடங்களில் நடித்ததால் அவர் பலபெரிய ஹீரோக்களுடன் நடித்துவிட்டார்! கமல், ரஜினி, சிவகுமார், லக்ஷ்மி, சரிதா போன்றவர்களுடன்!

ரஜினியின் ஆரம்ப காலத்தில் (79/80/81/82) அவருடன் சில படங்கள் செய்திருக்கிறார்! ரஜினி தனக்கு ஷாட் இல்லை என்று தெரிந்தால் செட்டை விட்டு போகமாட்டாராம்! அங்கேயே எங்காவது ஓரமாகபடுத்துவிடுவாராம்! அப்படித்தான் சிவப்பு சூரியன் படத்தில் நடிக்கும்போது செட்டின் ஓரத்தில் தூங்க்கிய ரஜினியை ஒரு லைட் பாய் ரஜினி என்று தெரியாமல் ஒரு உதை விட்டு “எழுந்துருடா! வேலை நேரத்துலஎன்ன தூக்கம்?” என்று சக லைட்பாய் என்று நினைத்து திட்டினாராம்! நம்ம ரஜினிக்கா கோபம் வரும்! சாரி என்று சொல்லிவிட்டு வேறு இடத்தில் போய் தூங்கிவிட்டாராம்!

அதே போல, இன்னொரு சமயம், ஒரு ஷாட்டில் ரஜினி ஜீப்பை வேகமாக ஓட்டிவிட்டு நிறுத்தி, கடகடவென்று இறங்கி காமிராவை நோக்கி நடக்க வேண்டும்! என் மாமனாருக்கு கழுத்தில் ஒரு நரம்பு பிசகி இருக்கும்!(ஒரு ஆர்ட் ஃபிலிமில் நடிக்கப் போய் வந்த வினை இது! அப்புறம் சொல்கிறேன்!) அதனால் வேகமாக கழுத்தை திருப்ப முடியாது! பல டேக்குகளில் ரஜினி ஜீப்பை விட்டு என் மாமனாரை விட வேகமாக போய்விடுவாராம்! ரஜினியின் வேகத்தைப் பார்த்த என் மாமனார் “வேணும்னா ரஜினிய வெச்சு தனியா ஷாட் எடுத்துக்குங்க” என்று டைரக்டரிடம் சொல்லியிருக்கிறார்! ஆனால் ரஜினி, அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, அடுத்த டேக்கில் என் மாமனார் ஜீப்பை விட்டு இறங்கும்வரை வெயிட் செய்துவிட்டு அப்புறம் ஒரு மாதிரி சேர்ந்தார்போல நடந்து டேக்கை ஓக்கே செய்தாராம்!

செட்டில் ரஜினி சீனியர்களுக்கு கொடுக்கும் மரியாதையைப் பற்றி விலாவாரியாக சொல்வார் என் மாமனார்!

இதில் கூத்து என்னவென்றால், சத்யராஜும் அப்போது ஜூனியர் ஆர்டிஸ்ட் தான்! பிரேக்கின் போதெல்லாம் அவர் என் மாமனாரிடம் “இப்படி ரஜினி கமல் கிட்டே அடி வாங்குற மாதிரி நடிச்சே என் கேரியர் போயிடப்போகுது!” என்று புலம்புவாராம்!

Monday, June 1, 2009

(ரொம்ப நாளைக்கப்புறம்...) சர்தார்ஜி ஜோக்குகள்!

ஒரு சர்தார்ஜி வங்கிக்குப் போய் அக்கவுண்ட் ஒப்பன் பண்ண போயிருக்காரு! அப்ளிக்கேஷன் ஃபாரத்தவாங்கிக்கினு படிச்சு பாத்துட்டு நேரா டில்லிக்கு போயிட்டாராம்! ஏண்டான்னு கேட்டா, ஃபாரத்துல“FILL IN CAPITAL’ அப்படீன்னு போட்டுருக்கேன்னாரு பாருங்க..........

-----------------------------

பங்களூரு மாரத்தான் போட்டி நடக்குற சமயம் அந்தப் பக்கமா போன நம்ம சர்தார்ஜி என்ன ஏதுன்னுகேட்டாராம்! அப்போ அங்க இருந்தவங்க “ரேஸ் போட்டில கலந்துக்கறாங்க! தெரியுமா ஜெயிச்சா ஒரு லட்ச ரூபா பரிசாம்!” அப்படீன்னாங்களாம்! அதுக்கு நம்ம ஆளு “அப்போ ஏன் எல்லாரும் ஓடறாங்க?ஜெயிக்கிறவங்க மட்டும் ஓடினா போதாதா”ன்னு கேட்டாராம்!

-------------------

நம்ம சர்தார்ஜி ஒரு நாளைக்கு வேலைக்காரனை கூப்பிட்டு தோட்டத்துக்கு தண்ணி ஊத்தச்சொன்னாராம்!அதுக்கு அந்த வேலைக்காரன் “எஜமான்! வெளில மழை பெய்யுது”ன்னானாம்! அதுக்கு நம்ம ஆளுஎன்ன சொன்னாரு தெரியுமா? “இருக்கட்டுமே! குடைய பிடிச்சிக்கினு தண்ணு ஊத்து”!

---------------------

கோழியா! முட்டையா? கேள்விக்கு நம்ம சர்
தாரோட பதில் என்ன தெரியுமா? எத ஃபர்ஸ்ட்டு ஆர்டர் பண்றீங்களோ அதான் வரும்!

----------------

கம்ப்யூட்டர் கத்துக்கிட்ட சமயம் நம்ம சர்தார் ஒரு நாளைக்கு வேர்ட் பிராசஸஸரில் எதையோ டைப்அடிச்சாரு! ஆனா அதுல தப்பு வந்துடுச்சு! இவரு என்ன பண்ணாரு தெரியுமா? “வைட்னர்” (whitener) போட்டு எல்லா எழுத்தையும் மானிட்டர்லேருந்து அழிச்சிட்டாரு!

-------------------

ஒரு நாளைக்கு நம்ம சர்தார்ஜி எண்ணை வாங்கப்போயிருக்காரு! வாங்கிட்டு கடைக்காரன் கிட்டே ஒரேவிவாதம்! “இது கூட ஃப்ரீயா ஏதாவது குடுங்க”ன்னு! என்ன ஏதுன்னு விசாரிச்சா எண்ண டப்பாவுலபோட்டுருந்ததாம் “கொலஸ்ட்ரால் ஃப்ரீ” அப்படீன்னு!

--------------------

ஒரு (லூசுப்) பெண் நம்ம சர்தார்ஜியைப் பார்த்து ரொம்ப பிடிச்சிப்போய் கல்யாணம் கட்டிக்கச் சொன்னாளாம்!அதுக்கு நம்ம ஆளு “எங்க ஃபேமிலியில சொந்தக்காரங்களைத்தான் கட்டிக்கிவோம்” அப்படீன்னாராம்!அதுக்கு அவ எப்படீன்னு கேட்டாளாம்! அதுக்கு நம்ம ஆளு “எங்க அப்பா எங்க அம்மவத்தான்கட்டிக்கிட்டாரு! எங்க தாத்தா எங்க பாட்டியத்தான் கட்டிக்கிட்டாரு! எங்க மாமா என் அத்தையத்தான்கட்டிக்கிட்டாரு. அதனாலதான்” அப்படீனாராம்!

-----------------

சர்தார்ஜி: “என்ன கண்ணாலம் கட்டிக்கோங்க டியர்”
மாலா: “ஐய்ய்யயோ! நான் உங்கள விட ஒரு வருஷம் பெரியவ”
சர்தார்ஜி: “அதனால என்ன? அடுத்த வருஷம் கட்டிக்கறேன்”

--------