Tuesday, April 27, 2010

சாருவைப் பாரு!

இன்று சாரு தன் பிளாக்கில் தன் உயிர்த் தோழி, சாருவின் கவிதைகளை
நினைத்துக்கொண்டே காரை ஓட்டி நடைபாதையில் ஏற்ற இருந்ததாகவும், இனிமேல் அந்தத் தோழி அப்படி செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொள்வதாகவும் சொல்லியிருக்கிறார்!

ஏன்யா! அவள் எந்த மாதிரியான தோழியாக இருந்துவிட்டுப் போகட்டும்! லூசு மாதிரி காரை ஓட்டி நடைபாதையில் ஏற்ற இருந்த (அல்லது, நடைபாதையில்
இருந்த யார் மீதாவது ஏற்ற இருந்த) ஒரு குடாக்கை, பளார்னு அறைய வேண்டாமா? அல்லது திட்டவேண்டாமா? அதையெல்லாம் விட்டுவிட்டு “கேட்டுக்கொள்கிறாராம்”.

என்னைக் கேட்டால், அந்த அன்புத் தோழியிடம் சாருவின் கவிதைகளை படிக்காமல் இருக்க கேட்டுக்கொள்ளவேண்டும்!