Tuesday, December 28, 2010

கமலுக்குத் தேவை இஞ்சின் ஓவர்ஹாலிங்!


முதலில் கமலுக்கு வாழ்த்து சொல்லவேண்டும்! கதை, திரைக்கதை, வசனம், பாடலாசிரியர், நடிகர் போன்ற துறைகளில் மறைமுகமாக ஈடுபட்டிருந்தாலும், இப்போது வெளிப்படையாக செய்ததில், டி. ராஜேந்தருக்கு இணையாக வருகிறார்! அதனால்தான் வாழ்த்து என்று முதலிலேயே போட்டுவிட்டேன்!

”மன்மதன் அம்பு” படத்தில் கதை என்று ஒரு பெரிய விஷயமெல்லாம் இல்லை! கதை என்பது பல வகை இருந்தாலும் பார்வையாளனுக்கு யூகிக்க விட்டுவிட்டு அவனுக்கு சர்ப்ரைஸாக திருப்பம் தருவது ஒரு வகை! அப்படி இல்லையென்றால், யூகிக்க முடிந்ததை சுவாரஸ்யமாக தருவது இன்னொரு வகை என்றும் சொல்லலாம்! ஆனால், “மன்மதன் அம்பு” இரண்டும் இல்லை! கமலுக்கு கதை என்று தோன்றிய ஒன்றை கோடிக்கணக்கில் காண்பித்திருப்பது! இதை அபாண்டம் என்றும் சொல்லலாம்! இல்லை “வதை” என்றும் சொல்லலாம்!

மன்(னார்)னும் மதனும் அம்புவை நோக்கிப் பயணிப்பதுதான் கதை! ஆனால், கதை கமலாச்சே! அதை தன் மேல் போகும்படியாக செய்திருக்கிறார்!விடுங்கள்! அவர் தன்னை narcist என்று காண்பித்து ரொம்ப நாள் ஆகிவிட்டது! அதனால் அதையும் மன்னிக்கலாம்! விவாகரத்து ஆன சங்கீதாவை பணப்பித்தாசை கொண்ட bitch என்று காண்பித்தைதையும் மன்னித்துவிடலாம் (கமலின் முன்னள் மனைவிகளையும், பிரகாஷ்ராஜின் முன்னாள் மனைவியையும் நீங்கள் கற்பனை செய்துகொண்டால் அதற்கு நான் காரணமல்ல)! மதன் அநியாயத்திற்கு அம்பு மேல் சந்தேகப்படுவதையும் மன்னித்துவிடலாம்! அட, அம்பு மதனை விட்டுவிட்டு மன்னாரை காதலிப்பதையும் (வேறு வழியில்லாமல்) மன்னித்துவிடலாம்! ஆனால், தன்னை இள வயதினன் என்று காண்பிக்க, தன் கன்னத்து சுருக்கங்களை மறைக்க, கமல் ஐந்து நாள் தாடியுடன் அலைவதைத்தான் மன்னிக்கவே முடியாது!

அது என்ன சார், தன்னை 40 வயதான் ஆள் போல காண்பித்தால் ரசிகர்கள் பார்க்கமாட்டர்களா? இல்லை, தனக்கு இன்னும் இளைஞன் இமேஜ் இருக்கிறது என்று கமலே முடிவு செய்துவிட்டாரா? கண்றாவி! மிஸ்டர் கமல், உங்களுக்கு வயதாகிவிட்டது! நீங்கள் மனதால் இளைஞனாகஇருந்தாலும் உங்களூக்கு வயது 56! அதை யாராலும் மறைக்க முடியாது! 40 வயது கேரக்டரில் நடிக்கும்போது அந்த வயதான மேக்கப்பையே போட்டுக்கலாம்! தப்பில்லை! வெளியே வாங்க!

அடுத்த இன்னொரு விஷயம், “லைவ் ஆடியோ”! இதை எப்போது உபயோகப்படுத்தலாம் என்பதை தயவு செய்து எங்கேயாவது படித்துவிட்டோ அல்லது ஆராய்ச்சி செய்துவிட்டோ implement செய்யுங்கள்! ”மன்மதன் அம்பு” படத்தில் பல இடங்களில் லைவ் ஆடியோ உபயோகப்படுத்தியிருப்பது, நம்மூர் கிராமத்தான் கையில் டாய்லெட் பேப்பரை கொடுத்து “போய் விட்டு வா” என்று சொன்னமாதிரி! எதை எங்கு உபயோகபடுத்துவது என்பது அவனுக்குத் தெரியாது! எல்லா கேரகடர்களும் சொல்லிவைத்த மாதிரியே வேகமாக பேசுகிறார்கள்! ஒண்ணுமே புரியவில்லை! இதில் பல இடங்களில் ஆங்கில கலப்பு உள்ள வசனங்கள் வேறு! நான் பார்த்த தியேட்டரில் “சப் டைட்டில்” போட்டதால் தப்பித்தேன்! Thanks to sub-titles, கமலின் ட்ரேட் மார்க் கண் கலங்குவதையும், திரிஷாவின் “அய்யோடி” குளோஸ்-அப்பையும் தவிர்க்க முடிந்தது!

கடைசி 20 நிமிடங்கள் போனது தெரியவில்லை! அத்தனை வேகமா என்று கேட்காதீர்கள்! கதாபாத்திரங்கள் பேசும் வேகத்தில், அவர்கள் சொன்னதை புரிந்துகொள்ள முயற்சி செய்ததில் கடைசி 20 நிமிடங்கள் போனதே தெரியவில்லை! இதுவும் கமலின் திரைக்கதைக்கு ஒரு சான்று! வசனத்தால் படத்தைச் சொல்லி நகர்த்தும் கலையை இவர் அட்லீஸ்ட் க்ரேஸி மோகனிடம் கற்றுக்கொள்ளலாம்! அது சரி, காட்சிகளால் நகர்த்துவதில் கமல் கெட்டிக்காரர் என்று சொல்லலாம் என்று பார்த்தால் “ஹே ராமும்”, “ஆளவந்தானும்” under the belt-இல் வந்து குத்துகிறதே?

ஓ, கடைசியாக அந்த “காமம், கழிவு” கவிதை! அந்தக் கண்றாவி கவிதையை (!!!) தடை செய்துவிட்டார்கள் என்று நினைத்தேன்! ஆனால்,நான் பார்த்த தியேட்டரில் (டல்லாஸ்) அந்தக் கவிதையை முழுதும் போட்டுக் காண்பித்துவிட்டார்கள்! இது என்ன தகிடுதத்தம் என்று தெரியவில்லை! உள்நாட்டில் ஒரு சென்ஸார், வெளிநாட்டுக்கு ஒரு சென்ஸார் போர்டு போல?
இந்தக் கவிதையை கமலின் கவித்துவத்துக்கு ஒரு சாம்பிள் என்று எடுத்துக்கொண்டால், கடவுளே, கண்ட கழிசடையெல்லாம் கவிதை எழுதவந்துவிடலாம் போலிருக்கிறதே?

சரி, இத்தனை நெகட்டிவ் விஷயங்களைத்தான் பார்த்தாயா, பாஸிட்டிவ் விஷயங்களே கண்ணுக்குத் தெரியவில்லையா என்று கேட்பது புரிகிறது!படத்தில் காமிரா கண்ணை உறுத்தாமல் இருக்கிறது! அதுவும் கடைசி காட்சியில் கப்பலின் ஒரு பக்கத்தில் திரிஷா-கமலை கட் செய்யாமல்,அப்படியே ஹெலிகாப்டரில் பறந்து இன்னொரு பக்கம் மாதவன் - சங்கீதாவை pan செய்தபடியே லாங் ஷாட்டில் முடிப்பது தரமான ஒன்று! இன்னொரு நல்ல விஷயம், D.S.P.யின் இசை! “ஹூ இஸ் த ஹீரோ” பாட்டும் “நீல வானம்” பாட்டும் நெஞ்சை அள்ளுகின்றன! அதிலும், “நீல வானம்” பாட்டில் “ஃபிளாஷ்பேக்கை” “ரிவர்ஸ் ஷாட்டிலேயே” காட்டுவது புதுமையான ஒன்று! உறுத்தாமலும் இருக்கிறது! மாதவன் & சங்கீதாவின் பர்ஃபார்மென்ஸ் ரசிக்கும்படியாக இருந்தது!

2004-இல் விருமாண்டி படம் வெளிவரும்போது, அந்தப் படத்தின் வெளியீட்டு விழாவில் டைரக்டர் கே. பாலசந்தர் “கமலுக்குத் தேவை ஒருஸ்பீட் ப்ரேக்கர்” என்று சொல்லியிருந்தார்! இப்போது எனக்குத் தோன்றுவது, “கமலுக்குத் தேவை இஞ்சின் ஓவர் ஹாலிங்”! முடிந்தால் இஞ்சினையே மாற்றுங்கள் கமல்!