Thursday, April 29, 2010

இது என்ன புது கலாட்டா?

(நன்றி: ஆனந்த விகடன் Dated: 05-05-2010)

மேலே உள்ள படம் ஆ.வி.யில் வரும் லூசுப் பையனின் நையாண்டி பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது! உங்களுக்குத் தெரிந்திருக்கும்! வாராவாரம்
லூசுப்பையன் என்பவர்(கள்) ஆ.வி.யில் எல்லோரையும் அநியாயத்துக்கு கலாய்ப்பார்கள்!
போன வாரம் வரை ஜெ.வை கோபலலிதா என்றே ரெஃபர் செய்து கார்ட்டூன் போட்டுக்கொண்டிருந்தார்கள்! இந்த வாரம் என்ன ஆயிற்றோ தெரியவில்லை, கோபலலிதா போய் பயலலிதா ஆகிவிட்டார்!
ஒரு வேளை ஜெ. இப்போது கோபமெல்லாம் போய் ஆ.வி.யிடன் சமாதானாமாகிப் போய்விட்டாரா? இல்லை, ஆ.வி.க்கு ஜெ. மீது இருந்த பயம்
போய்விட்டதா? இல்லை அடுத்த ஆட்சி அவங்க ஆட்சி வந்துவிட்டால், ஏன் இந்த வம்பு என்று பயலலிதா ஆக்கிவிட்டார்களா?
இது என்ன புது கலாட்டா தெரியவில்லையே?
தெரிந்தால் சொல்லுங்களேன்!

Tuesday, April 27, 2010

சாருவைப் பாரு!

இன்று சாரு தன் பிளாக்கில் தன் உயிர்த் தோழி, சாருவின் கவிதைகளை
நினைத்துக்கொண்டே காரை ஓட்டி நடைபாதையில் ஏற்ற இருந்ததாகவும், இனிமேல் அந்தத் தோழி அப்படி செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொள்வதாகவும் சொல்லியிருக்கிறார்!

ஏன்யா! அவள் எந்த மாதிரியான தோழியாக இருந்துவிட்டுப் போகட்டும்! லூசு மாதிரி காரை ஓட்டி நடைபாதையில் ஏற்ற இருந்த (அல்லது, நடைபாதையில்
இருந்த யார் மீதாவது ஏற்ற இருந்த) ஒரு குடாக்கை, பளார்னு அறைய வேண்டாமா? அல்லது திட்டவேண்டாமா? அதையெல்லாம் விட்டுவிட்டு “கேட்டுக்கொள்கிறாராம்”.

என்னைக் கேட்டால், அந்த அன்புத் தோழியிடம் சாருவின் கவிதைகளை படிக்காமல் இருக்க கேட்டுக்கொள்ளவேண்டும்!