Friday, January 29, 2010

நோ காமெண்ட்ஸ்!




(நன்றி: விடுதலை 29th January 2010)




இந்த விளம்பரம் சனவரி 29த் தேதியட்ட “விடுதலை” ஏட்டில் வந்தது! அய்யா அவர்கள் நடத்தும் பத்திரிக்கை!




படத்தைப் பாருங்கள்! குறிப்பாக சிகப்பு வட்டமிட்ட இடத்தைப் பாருங்கள்!


இதற்குமேல் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை!






Tuesday, January 26, 2010

குரலில் ஒரு பயங்கரம்!

சாதாரணமாக, குரலில் இருக்கும் கம்பீரம் பல பேருக்கு உடலில் இருப்பதில்லை! ஃபோனில் ஒருவரின் குரலைக் கேட்டுவிட்டு, அவரைப் பற்றிய கண்ணோட்டத்துக்கு நாம் பலமுறை வெகுதூரம் போயிருக்கிறோம்!

இந்தியர்களின் தொண்டைக் கட்டு மேற்கத்தியர்களின் தொண்டையைப் போல இருப்பதில்லை! இதற்கு யாராவது அறிவியல் காரணம் கண்டுபிடித்திருந்தால் எனக்கு பின்னூட்டம் இடலாம்!

எனிவே, அமெரிக்கர்களின் தொண்டைக் கட்டு ரொம்பவே அடித்தளத்திலிருந்து வரும்! முக்கால்வாசி அமெரிக்கர்கள், பள்ளியில் படிக்கும்போதே குரல் உடையும்போது, ரொம்பவே உடைந்து பயமுறுத்தும் தோற்றத்தை நம் கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்தும்! நம்மூர்க்காரர்கள், என்னையும் சேர்த்து, குரலில் அந்த deep voice என்று சொல்லக்கூடிய விததில்
இருக்காது!

சரி, அட்லீஸ்ட், ஆண்கள் குரல் ஆண்கள் போலவும் பெண்களீன் குரம் பெண்மையின் நளினத்துடன் இருந்தபட்சத்தில் நோ பிராப்ளம்! நம்மூரில் பல ஆண்களுக்கு பெண் குரல் போலவும், பெண்களுக்கு ஆண்குரல் போலவும் இருப்பதில்தான் பிரச்சினையே! நம்மூரில் இப்போது பல ஆஸ்பத்திரிக்கைகளில் தொண்டை ஆபரேஷன் செய்து குரலை சரி செய்கிறார்கள்! அதெல்லாம் இப்போதுதான்!

நான் சொல்வது சுமார் 20 வருடங்களுக்கு முன்! நான் +2 படிக்கும்போது, என் வகுப்பில் ஒரு மாணவன் இருந்தான்! சுமார் ஐந்தடி உயரம், ஆள் பார்க்க, ச்சும்மா ஹீரோ போல டிரஸ் செய்துகொள்வான்! படிய வாரிய தலைமுடி, ட்ரிம் செய்த மீசை (ஆம், அவனுக்கு அப்போதே அடர்த்தியாக மீசை இருந்தது) டிப் டாப்பான உடை, விலை உயர்ந்த வாட்ச் போன்றவைகளுடன்
தகதகவென்று மின்னுவான்! ஆனால், பாவம்! வாயைத் திறந்தால் போச்சு! அப்படியே ஒரு பத்து வயது சிறுமி மாதிரி பேசுவான்! அவன் இப்போது என்ன செய்கிறான் என்று தெரியவில்லை! ஆனால் பள்ளியில் படிக்கும்போது அவனுக்கு ஏழரை நடந்திருக்கும் என்று சொல்லித்தான் தெரிவதில்லை!

நான் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் சென்னையில் ஒரு கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன்! அது “நானே ராஜா நானே மந்திரி” மாதிரியான ஒரு வேலை! நாவல் நெட்வர்க்கில் இம்ப்ளிமெண்ட்
செய்த - நானே கையால் எழுதிய - ஃபாக்ஸ் ப்ரோ பிரோகிராம்கள்தான் என் வாழ்க்கையின் ஆர்மபம்! அப்போது சும்மா இல்லாமல் சைட் பிஸினஸாக ரிப்பன் இங்க் மற்றும் ப்ரிண்டர் பேப்பர் ஆகியவைகளை
இடது கையில் வாங்கி வலது கையில் விற்பனை செய்துகொண்டிருந்தேன்!

அப்போது பழக்கமான ஒரு கம்பெனியில் ஒரு பெண்மணி இருந்தார்! அவர் ஜாதியில் பதினாறு வயதிலேயே கல்யாணம் செய்துகொடுத்துவிட்டார்கள்! கணவன் ஒரு மளிகைக் கடை ஓனர்! அந்த பெண்மணி, அவர் மூலமாக ரெண்டு குழந்தைகளை பெற்றெடுத்தார்! வீட்டில் சும்மா இல்லாமல், ஆங்கிலத்திலும் வரலாறிலும் எம்.ஏ. படித்திருந்தார்! தனக்கும் கணவணுக்கும்
சரியான அண்டர்ஸ்டாண்டிங் இல்லாததால்,. டைவர்ஸும் வாங்கியிருந்தார்! தானே வேலை செய்து இரண்டு குழந்தைகளையும் காப்பாற்றிக் கொண்டிருந்தார்!

விஷயம் என்னவென்றால், அவருக்கு ஆண் குரல்! அவர் பெயரும் ஆண்பிள்ளைத்தனமாகத் தான் இருக்கும்! பல சமயம் அவர் தன்னை பெண் என்றே சொல்லிக்கொள்ளாமல் தான் வேலை பார்த்துக்கொண்டிருந்த
கம்பெனியில் சீனியர் சேல்ஸ் மேனேஜராக ஆகியிருந்தார்!

ஒரு முறை, என் குடும்ப நண்பர் ஒருவர் அந்த பெண்மணி வேலை செய்யும் கம்பெனிக்கு ஃபோன் போட்டு அவரிடம் பேசியிருக்கிறார்! பெண்மணி தன்னை பெண் என்றே சொல்லவில்லை! நண்பர், தான் பேசியது ஆண் என்றே நினைத்துக்கொண்டிருந்தார்! ஒரு நாள் அந்த் பெண்மணியை - பெண் என்று தெரியாமல் - அவர் ஆஃபிஸுக்கே சென்று சந்திக்கப் போக, அந்த பெண்மணி நண்பரிடம் கையைக் குலுக்கு “நாந்தான் .....” என்று சொல்ல, நண்பர் விட்டார் ஓட்டம்!

பிறகு ஒரு நாள் நண்பர் என்னிடம் “ஏண்டா! உனக்குத் தான் தெரியுமே? ஏன் என்னிடம் சொல்லவில்லை?” என்று கடிந்துகொண்டார்! “சாரி!” என்று சொல்லி சமாளித்தேன்!

இப்போது சுமார் 15 வருடங்கள் ஓடிவிட்டன! எப்போது நினைத்தாலும் சிரிப்பை வரவழைக்கும் ஒரு நிகழ்ச்சி அது!