tag:blogger.com,1999:blog-33505779756479763322024-03-14T01:32:51.503-07:00தெரிஞ்சுக்கோ!!படிச்சு தெரிஞ்சுக்கோ! இல்ல, பட்டு தெரிஞ்சுக்கோ. ரெண்டும் இல்லைன்னா, அஞ்சோ பத்தோ குடுத்து தெரிஞ்சுக்கோ!ரவிஷாhttp://www.blogger.com/profile/04012491564649330999noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-3350577975647976332.post-36087468463151736332011-03-08T13:23:00.000-08:002011-03-08T13:27:14.746-08:00சூப்பர் மகன்!<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgkoX9GFZGH-LP6iSVI9LJoRjkwFBe285ynV4g5S8geTKUxa85KuCBZwVV5KJUPWf3tAqabX4WgAjQ8odq9FsI-woe9LM-QMw1BCY4LL-d1k4LvLcwhAOB7DPOpOJthxzEU1FECbtU-Lu2h/s1600/mk_stalin.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5581823788922790402" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 222px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgkoX9GFZGH-LP6iSVI9LJoRjkwFBe285ynV4g5S8geTKUxa85KuCBZwVV5KJUPWf3tAqabX4WgAjQ8odq9FsI-woe9LM-QMw1BCY4LL-d1k4LvLcwhAOB7DPOpOJthxzEU1FECbtU-Lu2h/s320/mk_stalin.jpg" border="0" /></a><br /><div></div><br /><div></div><br /><div>மு : டேய்!! சுடாலி.... நாந்தேன்... (கையை அசைத்து அழைக்கிறார்) </div><br /><div><br />(து.மு., முவை நோக்கி செல்கிறார்.. அவர் பின்னால் நின்று கொள்கிறார்.)<br />இங்கிட்டு வா.. </div><br /><div><br />(து.மு., மு.வின் முன் சென்று நிற்கிறார்.) </div><br /><div><br />மு: பேச்சுவார்த்தைக்கு போனீகளா?? </div><br /><div></div><br /><div>து.மு: ஆமா ஐய்யா.. </div><br /><div><br />மு: கூட்டணி பேசுறதுக்கு இதா இருக்கேன்னு சண்டை போட்டீகளே. இப்போ இந்த கூட்டணியோட நெலமை புரிஞ்சுதா?? </div><br /><div><br />து.மு: நல்லாவே புரியுது. நான் செஞ்ச தப்பும் புரியுது... அதுக்கு தண்டனையா இந்த ஆட்டத்த விட்டே போயிரலாம்னு இருக்கேன் </div><br /><div><br />(மு துணுக்குற்று கையைத் தூக்குகிறார்) </div><br /><div><br />மு: என்ன ஆட்டய... ஆட்டய விட்டு போறீகளா??.. ஹ... நடந்ததுக்கு பரிகாரம் தேடாம.. ஆட்டத்த விட்டு போறேன்னு சொல்லுறது கோழைத்தனம் இல்லை?? </div><br /><div><br />து.மு(உடனே): அதுக்காக.... </div><br /><div><br />மு: அதுக்காக??? </div><br /><div><br />து.மு: அதுக்காக... நடக்கற பிளாக்மெயில பேச்சுவார்த்தைனு நெனைச்சுகிட்டு இருக்கறது முட்டாள்தனம். </div><br /><div><br />மு: இந்த ப்ளாக்மெயில்பய கூட்டத்துல உங்கப்பனும் ஒருத்தந்தாங்குறத மறந்துறாத.. </div><br /><div><br />து.மு: அப்படி பாத்தா நானும்தான்ய ஒருத்தன். ஆனா அதை நெனச்சு பெருமைப்பட முடியல. ஏழு வருஷம் ஆட்டயப்போட்ட இந்த கூட்டணில நான் படிச்ச படிப்பை எல்லாம் வேஸ்ட் ஆக்க விரும்பலைய்யா. </div><br /><div><br />மு: ஏழு வருஷம் ஆட்டயத்தான் போட்டோம் ஒத்துக்கறேன். நாப்பது வருஷமா வேல்கம்பையும் அறுவாளையும் தூக்கிக்கிட்டு அண்ணா நாமம் வாழ்க... பெரியார் நாமம் வாழ்கனு சுத்திகிட்டு இருந்த பயக. இந்திராகாந்தி கூட்டுக்கு சீட் வேணும்னு கேட்டப்போ, ஓடிப்போய் மொத வரிசைல நின்ன பய முக்காவாசிப்பய நம்ம பய தான். திடீர்னு அவன கூட்டணிய தூக்கிப்போட்டுட்டு சமாதானம் பேச வாடான்னா எப்படி வருவான்?? நீ எல்லாம் படிச்சவனாச்சே... கூட்டிகிட்டு வா.. அங்கே கூட்டிகிட்டு வா.. ஆனா அந்தப்பய மெதுவாதான் வருவான்.. மெதுவாதான் வருவான்.... </div><br /><div><br />து.மு: மெதுவான்னா எம்புட்டு மெதுவாய்யா?? அதுக்குள்ள நான் தோத்துருவேன் போல இருக்கே!! </div><br /><div><br />மு: போ... தோத்துப்போ.. நான் தடுக்க முடியுமா??... எல்லா பயபுள்ளையும் ஒரு நாள் தோக்க வேண்டியதுதான். ஜெயிக்கறது முக்கியம் தான் ..இல்லைன்னு சொல்லல. ஆனா குடும்பத்துக்கு பயனுள்ள வாழ்க்கையா வாழ்ந்துட்டு தோத்து போனா அந்த தோல்விக்கே பெருமை. வெத வெதைச்ச வுடனே பழம் சாப்பிடனும்னு நெனைக்க முடியுமோ... இன்னைக்கு நான் வெதைக்கறேன். நாளைக்கு நீ பழம் சாப்பிடுவ.. அப்புறம் உன் பையன் சாப்பிடுவான்.. அதுக்கப்புறம் அவன் பையன் சாப்பிடுவான்... அதெல்லாம் பாக்குறதுக்கு நான் இருக்க மாட்டேன். ஆனா வெத.. நான் போட்டது. இதெல்லாம் என்ன பெருமையா??? கடமை... ஒவ்வொருத்தரோடைய கடமை!!!. </div><br /><div><br />து.மு: ஆனா இந்த கூட்டணில தொகுதிகளுக்கு பதிலா ஆட்சிப் பகிர்வ ஊத்தற வரைக்கும், எத வெதச்சாலும் வெளங்காதைய்யா.. என்ன விட்டுருங்கையா நான் போறேன். </div><br /><div><br />மு. ஆவேசமாகி து.மு சட்டையை பிடிக்கிறார். </div><br /><div><br />பின்பு விடுகிறார். </div><br /><div><br />மு: (துண்டை தூக்கிப் போட்டுக்கொண்டு, கைக்குட்டை சிறுதுண்டால் மூக்கை உறிஞ்சிக்கொண்டு) நெஞ்சு நிமிர்ந்து ஐயாவை பேசற வயசுல்ல.. </div><br /><div><br />து.மு.: இல்ல...அப்படி இல்லைய்யா... </div><br /><div><br />மு: வேற எப்படி?? வேற எப்படின்னு கேக்கறேன்... ஜெயில்ல இருந்த பிள்ளையாச்சேன்னு ஊட்டி ஊட்டி வளத்தேன்ல. இது வரைக்கும் ஒரு வார்த்தை பேசியிருபேனா உன்கிட்ட ....ஒரு வார்த்தை... என்ன?... நான் என் கடமைய செஞ்சுப்புட்டேன், நீ உன் கடமைய செஞ்சியா?? நீ பெருசா அரசியல படிக்கறதுக்காக இந்த கட்சியை பொன்னா வளைச்சுப்போட்டு அமிச்சோமே.. அந்த பிளாக்மெயில் பயலுக்கு என்ன பண்ண நீயி!!?? ஏதாவது பண்ணு.. அதுக்கப்புறம் ஆட்டைய விட்டு போ.. கட்சிய வள.. கணக்கு போடு.. பணம் சம்பாரி.. என்ன இப்போ... போயேன்... </div><br /><div><br />து.மு: நல்லது இங்கேயிருந்துதான் செய்யனும்னு இல்லைய்யா.. வெளியிருந்தும் செய்யலாம்... நான் போறேன்யா.. </div><br /><div><br />மு: போயிட்டு வரேன்னு சொல்லுங்களேன். அந்த நம்பிக்கைதான் குடும்பத்துல உள்ளவங்களுக்கு முக்கியம்...த!! எங்கேய்யா பொதுச்செயலாளரு?? யார்யா அவரு.. எங்கே ?? </div><br /><div><br />பொ.செ ஓடி வந்து பணிவாக : ஐயா.. </div><br /><div><br />மு: இங்கேதான் இருக்கியா.. ஐயா யாவாரமா வெளில போறாங்களாம்.. ரொம்ப நாள் இங்கே இருக்க மாட்டாங்களாம்.. அவருக்கு டிக்கெட் போடு </div><br /><div><br />பொ.செ: ஒரு நாப்பது நாள் சென்று கொடுக்கட்டுங்களா?? </div><br /><div><br />மு:ஏண்டாப்பு.. ஒரு நாப்பது நாள் தங்க மாட்டீங்களா??... </div><br /><div><br />பொ.செ.யை அனுப்பி விட்டு து.மு.வை கிட்டே அழைக்கிறார். </div><br /><div><br />மு: நாப்பது நாள் இருக்க மாட்டீகளா?? என் பையன பக்கத்துலயே வெச்சு பாக்கனும்ங்கற ஆசை எனக்கு இருக்காதா?? </div><br /><div><br />து.மு: ஐயா நான் இந்த பயலுவலுக்கு நல்லது ஏதாவது செய்வேன்யா...என்ன நம்புங்க.. </div><br /><div><br />மு: உங்களத்தானே நம்பணும்! இந்த இடத்துல வேற யாரு இருக்கா நான் நம்பறதுக்கு........(அழுகிறார்)... போ... </div><br /><div><br />து.மு:போகட்டுமாய்யா?? </div><br /><div><br />மு: போ... </div><br /><div><br />து.மு விலகி செல்கிறார்.. போகும்போது வெளியே நீட்டிக்கொண்டிருந்த மெகா பேனர் தடுக்குகிறது. </div><br /><div><br />மு: யப்பா மெல்ல... </div><br /><div><br />து.மு: தட்டி...தட்டிவிட்டு.... </div><br /><div><br />என சொல்லிவிட்டு செல்கிறார் </div><br /><div><br />து.மு போவதை மு குனிந்து வாஞ்சையோடு பார்க்கிறார். கொஞ்சம் தொலைவு சென்றதும் து.மு முவை மறைந்திருந்து திரும்பி பார்க்கிறார். மு திரும்பிக் கொள்கிறார். </div><br /><div><br />அடுத்த காட்சி ஆரம்பமாகிறது.... </div><br /><div><br />-----------------------------------------------------------------------------------------<br />( சூப்பர் மகன் : திரைக்கதை, வசனம், காட்சி எல்லாம் வழக்கம்போல நம்ம டப்பிங் சீன் தான்! ) </div><br /><div></div><br /><div></div><br /><div>நன்றி: தினமணி, மார்ச் 6 2011. </div>ரவிஷாhttp://www.blogger.com/profile/04012491564649330999noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3350577975647976332.post-60887950196394894462010-12-28T12:12:00.000-08:002010-12-28T13:17:02.782-08:00கமலுக்குத் தேவை இஞ்சின் ஓவர்ஹாலிங்!<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1RJBebr-gI48IgT8LV2_CVEH3LWWD5gx7KWFsJWL-C_B2RnAUS9RjBaA_-AQs5K6bGZvVVeJkVSkmCv07qp_rh3vcTw5KalzeduCCiBCcLu3ZeYX2PHEWNqMKvdolNrTt2P8YJGW8gFlN/s1600/manmadhan-ambu-stills-gallery09.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5555831583099559714" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 264px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1RJBebr-gI48IgT8LV2_CVEH3LWWD5gx7KWFsJWL-C_B2RnAUS9RjBaA_-AQs5K6bGZvVVeJkVSkmCv07qp_rh3vcTw5KalzeduCCiBCcLu3ZeYX2PHEWNqMKvdolNrTt2P8YJGW8gFlN/s320/manmadhan-ambu-stills-gallery09.jpg" border="0" /></a><br /><div></div><div></div><div></div><div></div><div></div><div>முதலில் கமலுக்கு வாழ்த்து சொல்லவேண்டும்! கதை, திரைக்கதை, வசனம், பாடலாசிரியர், நடிகர் போன்ற துறைகளில் மறைமுகமாக ஈடுபட்டிருந்தாலும், இப்போது வெளிப்படையாக செய்ததில், டி. ராஜேந்தருக்கு இணையாக வருகிறார்! அதனால்தான் வாழ்த்து என்று முதலிலேயே போட்டுவிட்டேன்!<br /><br />”மன்மதன் அம்பு” படத்தில் கதை என்று ஒரு பெரிய விஷயமெல்லாம் இல்லை! கதை என்பது பல வகை இருந்தாலும் பார்வையாளனுக்கு யூகிக்க விட்டுவிட்டு அவனுக்கு சர்ப்ரைஸாக திருப்பம் தருவது ஒரு வகை! அப்படி இல்லையென்றால், யூகிக்க முடிந்ததை சுவாரஸ்யமாக தருவது இன்னொரு வகை என்றும் சொல்லலாம்! ஆனால், “மன்மதன் அம்பு” இரண்டும் இல்லை! கமலுக்கு கதை என்று தோன்றிய ஒன்றை கோடிக்கணக்கில் காண்பித்திருப்பது! இதை அபாண்டம் என்றும் சொல்லலாம்! இல்லை “வதை” என்றும் சொல்லலாம்!<br /><br />மன்(னார்)னும் மதனும் அம்புவை நோக்கிப் பயணிப்பதுதான் கதை! ஆனால், கதை கமலாச்சே! அதை தன் மேல் போகும்படியாக செய்திருக்கிறார்!விடுங்கள்! அவர் தன்னை narcist என்று காண்பித்து ரொம்ப நாள் ஆகிவிட்டது! அதனால் அதையும் மன்னிக்கலாம்! விவாகரத்து ஆன சங்கீதாவை பணப்பித்தாசை கொண்ட bitch என்று காண்பித்தைதையும் மன்னித்துவிடலாம் (கமலின் முன்னள் மனைவிகளையும், பிரகாஷ்ராஜின் முன்னாள் மனைவியையும் நீங்கள் கற்பனை செய்துகொண்டால் அதற்கு நான் காரணமல்ல)! மதன் அநியாயத்திற்கு அம்பு மேல் சந்தேகப்படுவதையும் மன்னித்துவிடலாம்! அட, அம்பு மதனை விட்டுவிட்டு மன்னாரை காதலிப்பதையும் (வேறு வழியில்லாமல்) மன்னித்துவிடலாம்! ஆனால், தன்னை இள வயதினன் என்று காண்பிக்க, தன் கன்னத்து சுருக்கங்களை மறைக்க, கமல் ஐந்து நாள் தாடியுடன் அலைவதைத்தான் மன்னிக்கவே முடியாது!<br /><br />அது என்ன சார், தன்னை 40 வயதான் ஆள் போல காண்பித்தால் ரசிகர்கள் பார்க்கமாட்டர்களா? இல்லை, தனக்கு இன்னும் இளைஞன் இமேஜ் இருக்கிறது என்று கமலே முடிவு செய்துவிட்டாரா? கண்றாவி! மிஸ்டர் கமல், உங்களுக்கு வயதாகிவிட்டது! நீங்கள் மனதால் இளைஞனாகஇருந்தாலும் உங்களூக்கு வயது 56! அதை யாராலும் மறைக்க முடியாது! 40 வயது கேரக்டரில் நடிக்கும்போது அந்த வயதான மேக்கப்பையே போட்டுக்கலாம்! தப்பில்லை! வெளியே வாங்க!<br /><br />அடுத்த இன்னொரு விஷயம், “லைவ் ஆடியோ”! இதை எப்போது உபயோகப்படுத்தலாம் என்பதை தயவு செய்து எங்கேயாவது படித்துவிட்டோ அல்லது ஆராய்ச்சி செய்துவிட்டோ implement செய்யுங்கள்! ”மன்மதன் அம்பு” படத்தில் பல இடங்களில் லைவ் ஆடியோ உபயோகப்படுத்தியிருப்பது, நம்மூர் கிராமத்தான் கையில் டாய்லெட் பேப்பரை கொடுத்து “போய் விட்டு வா” என்று சொன்னமாதிரி! எதை எங்கு உபயோகபடுத்துவது என்பது அவனுக்குத் தெரியாது! எல்லா கேரகடர்களும் சொல்லிவைத்த மாதிரியே வேகமாக பேசுகிறார்கள்! ஒண்ணுமே புரியவில்லை! இதில் பல இடங்களில் ஆங்கில கலப்பு உள்ள வசனங்கள் வேறு! நான் பார்த்த தியேட்டரில் “சப் டைட்டில்” போட்டதால் தப்பித்தேன்! Thanks to sub-titles, கமலின் ட்ரேட் மார்க் கண் கலங்குவதையும், திரிஷாவின் “அய்யோடி” குளோஸ்-அப்பையும் தவிர்க்க முடிந்தது!<br /><br />கடைசி 20 நிமிடங்கள் போனது தெரியவில்லை! அத்தனை வேகமா என்று கேட்காதீர்கள்! கதாபாத்திரங்கள் பேசும் வேகத்தில், அவர்கள் சொன்னதை புரிந்துகொள்ள முயற்சி செய்ததில் கடைசி 20 நிமிடங்கள் போனதே தெரியவில்லை! இதுவும் கமலின் திரைக்கதைக்கு ஒரு சான்று! வசனத்தால் படத்தைச் சொல்லி நகர்த்தும் கலையை இவர் அட்லீஸ்ட் க்ரேஸி மோகனிடம் கற்றுக்கொள்ளலாம்! அது சரி, காட்சிகளால் நகர்த்துவதில் கமல் கெட்டிக்காரர் என்று சொல்லலாம் என்று பார்த்தால் “ஹே ராமும்”, “ஆளவந்தானும்” under the belt-இல் வந்து குத்துகிறதே?<br /><br />ஓ, கடைசியாக அந்த “காமம், கழிவு” கவிதை! அந்தக் கண்றாவி கவிதையை (!!!) தடை செய்துவிட்டார்கள் என்று நினைத்தேன்! ஆனால்,நான் பார்த்த தியேட்டரில் (டல்லாஸ்) அந்தக் கவிதையை முழுதும் போட்டுக் காண்பித்துவிட்டார்கள்! இது என்ன தகிடுதத்தம் என்று தெரியவில்லை! உள்நாட்டில் ஒரு சென்ஸார், வெளிநாட்டுக்கு ஒரு சென்ஸார் போர்டு போல?<br />இந்தக் கவிதையை கமலின் கவித்துவத்துக்கு ஒரு சாம்பிள் என்று எடுத்துக்கொண்டால், கடவுளே, கண்ட கழிசடையெல்லாம் கவிதை எழுதவந்துவிடலாம் போலிருக்கிறதே?<br /><br />சரி, இத்தனை நெகட்டிவ் விஷயங்களைத்தான் பார்த்தாயா, பாஸிட்டிவ் விஷயங்களே கண்ணுக்குத் தெரியவில்லையா என்று கேட்பது புரிகிறது!படத்தில் காமிரா கண்ணை உறுத்தாமல் இருக்கிறது! அதுவும் கடைசி காட்சியில் கப்பலின் ஒரு பக்கத்தில் திரிஷா-கமலை கட் செய்யாமல்,அப்படியே ஹெலிகாப்டரில் பறந்து இன்னொரு பக்கம் மாதவன் - சங்கீதாவை pan செய்தபடியே லாங் ஷாட்டில் முடிப்பது தரமான ஒன்று! இன்னொரு நல்ல விஷயம், D.S.P.யின் இசை! “ஹூ இஸ் த ஹீரோ” பாட்டும் “நீல வானம்” பாட்டும் நெஞ்சை அள்ளுகின்றன! அதிலும், “நீல வானம்” பாட்டில் “ஃபிளாஷ்பேக்கை” “ரிவர்ஸ் ஷாட்டிலேயே” காட்டுவது புதுமையான ஒன்று! உறுத்தாமலும் இருக்கிறது! மாதவன் & சங்கீதாவின் பர்ஃபார்மென்ஸ் ரசிக்கும்படியாக இருந்தது!<br /><br />2004-இல் விருமாண்டி படம் வெளிவரும்போது, அந்தப் படத்தின் வெளியீட்டு விழாவில் டைரக்டர் கே. பாலசந்தர் “கமலுக்குத் தேவை ஒருஸ்பீட் ப்ரேக்கர்” என்று சொல்லியிருந்தார்! இப்போது எனக்குத் தோன்றுவது, “கமலுக்குத் தேவை இஞ்சின் ஓவர் ஹாலிங்”! முடிந்தால் இஞ்சினையே மாற்றுங்கள் கமல்!</div>ரவிஷாhttp://www.blogger.com/profile/04012491564649330999noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3350577975647976332.post-16072388298357341342010-10-04T13:24:00.000-07:002010-10-04T13:35:32.859-07:00எந்திரன் - தந்திரன் - ஒரு விமர்சனம்!<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEillReMD9cENth6MtBLJ2k1K9Rv5CDMt0NsMZsG66JywsU97cVKQ1naMNjwFwLfyf2XH2qoQDfFO0_dpc6K3SwjagnvvAOxEtZ1DhZ9e8JCHfTvSMk8-GdixSlzAJSzeCRODZp8E3r_kLUZ/s1600/Endhiran_poster_July_2010.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5524292216666228754" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 234px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEillReMD9cENth6MtBLJ2k1K9Rv5CDMt0NsMZsG66JywsU97cVKQ1naMNjwFwLfyf2XH2qoQDfFO0_dpc6K3SwjagnvvAOxEtZ1DhZ9e8JCHfTvSMk8-GdixSlzAJSzeCRODZp8E3r_kLUZ/s320/Endhiran_poster_July_2010.jpg" border="0" /></a><br /><div></div><br /><div></div><br /><div>முதலில் தந்திரன் விமர்சனம் பார்ப்போம்! ஒரு ஊரில் ஒரு ரோபாட்<br />இருந்ததாம்! அதற்குப் பெயர் “ஷிட்டி” என்று வெச்சுக்குவோம்! அந்த ஒரு ரோபாட் யார் யார்கிட்டேயோ அசிஸ்டெண்ட்டாகவெல்லாம் இருந்து கடைசியில் ஒரு மீசைக்காரர் ஒரு படத்தை இயக்க சான்ஸ் கொடுத்தாராம்! அந்தப் படம் நவீன ”ராபின் ஹுட்”ஸ்டைலில் இருந்ததால் மக்கள் எல்லாரும் “ஜோரா” கை தட்டி ரசிச்சாங்களாம்!<br /><br />ஆனா பாருங்க, அடுத்த படத்துக்கு அவர் கிட்டே சரக்கு இல்லாம போச்சு! இருந்தாலும் அதே மீசைக்காரர் கை கால் பிடிச்சு ஒரு தாடிக்காரர் ஒருத்தரை ஹீரோவா போட்டு, ஒரு “தளுக்கு குலுக்கு” நடிகையை - நக்காதம்மா அப்படீன்னு வெச்சுப்போம் - போட்டு ஒரு படத்தை எடுத்தாராம்! அதுவும் ஏதோ ஒரு ஃப்ளூக்குல “கோக்கு மாக்கா” ஓடிடுச்சு! இதுக்கு நடுல, அந்த மீசைக்காரரு சரியா சம்பளம் குடுக்கலங்கறதுக்காக, அவர “ரோட்டில் கிடக்கும் மலம்” அப்படீன்னெல்லாம் விமர்சனம் செய்துச்சு அந்த “ஷிட்டி”!<br /><br />இப்பத்தான் “ஷிட்டிக்கு” ஒரு விஷயம் புரிய ஆரம்பிச்சுது! அதாவது, படத்துல ஐயமாருங்களையெல்லாம் நல்லவங்கன்னு காட்டிட்டா படத்த எப்படி வேணும்னாலும் ஓட்டிடலாம்னு! அப்போதான் ஒரு ஜாம்பவான சந்திக்கிறாரு அந்த “ஷிட்டி”!<br /><br />அந்த ஜாம்பவான் ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய எழுத்தாளராம்! தமிழ்ல எந்த விசயத்த வேணும்னாலும் ச்சும்மா அல்வா மாதிரி எழுத்துலகொடுப்பாராம்! அப்படி வெறும் வெத்துவேட்டா இருந்த அந்த “ஷிட்டி” ரோபாட்ட, அந்த ஜாம்பவான் நல்லா மெருகேத்தி பல படங்களுக்கு ஸ்க்ரிப்ட் எழுதி குடுத்தாராம்!<br />“ஷிட்டியும்” அதை வாங்கிக்கினு நல்ல நல்ல படமெல்லாம் டைரக்ட் பண்ணாராம்! ஆனா பாருங்க! விதியோட வெளையாட்ட!<br /><br />அந்த ரெண்டு பேரும் ஒரு “ரோபோ”வைப் பத்தி ஒரு படம் பண்ணலாம்னு முடிவு பண்ணி, கோடி கோடியா செலவு செய்யுற ஒரு தயாரிப்பாளர பிடிச்சு, ஒரு “வெரல் சூப்பர ஸ்டாரை” வெச்சு ஒரு படம் எடுத்தாங்களாம்! திடீர்னு ஒரு நாள் அந்த ஜாம்பவான் கிட்னி, லிவர், ஹார்ட்டு அப்படீன்னு எல்லா பாகங்களும் புட்டுக்குனு “ரங்கனோட” திருவடிக்குப் போய் சேர்ந்துட்டாராம்!<br />அந்த ஜாம்பவானோட சாவுக்கு ஊர்ல இருந்த எல்லா பெரிய மனுசங்களும் வந்தாங்களாம் ஒரு குண்டம்மாவைத் தவிர! அம்மாம்பெரிய சாவா இருந்திச்சாம் அது! அந்த ஜாம்பவானப் பத்தி எல்லா பெரிய மனுசங்களும் பேசினாங்களாம்! அப்படி அந்த “ஷிட்டி” ரோபோவும் பேசிச்சாம்!<br /><br />அப்போ அது சொல்லுச்சாம் “அந்த ஜாம்பவான் என்ன ஸன் மாதிரிதான் நெனெச்சிட்டு இருந்தாரு! படத்துக்குப் படம், சம்பளம் கேட்டப்பவெல்லாம் “அது பெரிய விசயம் இல்ல ஷிட்டி! நீ குடுக்கறத குடு! நீ என் ஸன் மாதிரி” அப்படீன்னு சொல்லுவாராம்! அது மாதிரி அந்த “ரோபோ” படத்துக்கு சம்பளம் பேசிக்கிட்டாங்களாம்! ஆனா பாருங்க! அதுக்குள்ள அந்த ஜாம்பவான் போய் சேர்ந்துட்டாரு!<br /><br />அதுவரைக்கும் அந்த ஜாம்பவான் இல்லாம எனக்கு எதுவும் ஓடாது அப்படி இப்படீன்னு சொல்லிட்டு இருந்த “ஷிட்டி” ரோபாட், அந்த புதுசா பண்ணின “ரோபோ” படத்துல ஜாம்பவானோட பேர மட்டும் ச்ச்சும்மா ஒரு “ஒட்டுக்க்கா” போட்டுட்டாரு டைட்டில்ல! அது மாத்திரம் இல்ல! அந்த ஜாம்பவானோட பேரோட, ஒரு “வயிறு எரியும் முத்து” அப்படீங்கற ஒரு கவிஞரோட பையன் பேரையும் சேர்த்து போட்டுடாராம்!<br /><br />அதாவது, தனக்கு வரம் குடுத்த ஒரு சாமியார் மேலேயே கை வெச்சு பாத்த பத்மாசுரன் மாதிரி கதை போகுது! இன்னும் எத்தன நாள் போகும்னு தெரில!<br /><br />இப்போ, ”எந்திரன்” கதைக்கு வருவோம்!<br /><br />ஒரு புரொஃபஸரு, ரொம்ப ரொம்ப பெரிய படிப்பெல்லாம் படிச்சுட்டு பல வருசம் ஆராய்ச்சியெல்லாம் செஞ்சுட்டு ஒரு “ரோபாட்ட” கண்டுபிடிக்கிறாரு! அவருக்கு உதவறதுக்கு அல்லக்கைங்க மாதிரி சந்தானமும் கருணாஸும்! சத்தியமாச் சொல்றேங்க! அந்த டைரக்டர் நாய் மட்டும் கைல கெடச்சான், மவனே கொத்து பரோட்டாத்தான்! பின்னே என்னங்க? கருணாஸ் எம்.எஸ்.சி. படிச்சவராம்! ஆனா ஒரு வார்த்தை தமிழ்ல பேச முடியலைங்க அவரால!<br /><br />சரி விடுங்க! அப்புறம் அந்த ரோபோவுக்கு ஃபீலிங்க்ஸ் கொடுக்குறாரு நம்ம புரொஃபஸரு! எப்படி? பேப்பர்ல போர்டுல எல்லாம் எழுதி “காதல், காமம்” அப்படீன்னு சொல்லிக்குடுக்குறாரு! அய்யா சாமியோவ்! அடிக்க வராதீங்க! நான் பீலா விடலைங்க! அந்தப் படத்துல அப்படித்தான் காமிக்கிறாங்க! அப்படியே நம்ம ஸ்கூல் பசங்களுக்கும் பேப்பர்லேயே எழுதிக் காட்டிட்டா இந்த பாலியல் கல்வி அதாங்க “செக்ஸ் எஜுக்கேசன்” விஷயத்த ச்சும்மா நூல் பிடிச்சி போயிரலாம்!<br /><br />சரி ஃபீலிங்ஸ் வந்திச்சா! அப்புறமாத் தான் தெரியுது, நம்ம புரொஃபஸரோட காதலியை அந்த ரோபோவும் காதலிக்குது! பாட்டெல்லாமும் பாடுது! இதப் பாத்த புரொஃபஸருக்கு கோவம் வந்து அந்த ரோபோவ பிச்சுப் போட்டுடறாரு! இதுக்குன்னே காத்துட்டு இருக்குற வில்லன்(ர்) அத எடுத்து, தன் குகைக்குள்ளே கொண்டு வந்து அதுக்கு கெட்ட கெட்ட விசயத்த எல்லாம் கத்துக்குடுக்குறாரு! நம்ம “ஷிட்டி” மாதிரியே அந்த “சிட்டியும்” - அதாங்க அந்த ரோபோ - தன்னோட குருவையே கொன்னுட்டு, தன் மாதிரி பல ரோபோக்கள உருவாக்கிடுது!<br /><br />அது மட்டும் இல்லாம, நம்ம ஹீரோயினிய கடத்திக்கினு போய் ஊருக்கு ஒதுக்குப் புறமா - நம்ம ராஜா ராணி கதைல வருமே அதேதான் - கூட்டிப் போய் அவள கொடுமப் படுத்துது! நம்ம ஹீரோ அந்தக் காலத்து படத்துல வர்ற மாதிரி (கழுதை வேசம் போட்டுக்கிட்டுப் போய் காவல் காரன்கிட்டே பாட்டிப் பாடிக்கிட்டே நைஸா உள்ளே போய் ஹீரோயின்கிட்டே துணிய தூக்கிக் காமிச்சி “நாந்தான் ஹீரோ வந்திருக்கேன்” அப்படீன்னு வருமே, அதேதான்!) உள்ளே போய் எல்லா ரோபாட்டையும் “இண்டிபெண்டன்ஸ் டே” படத்துல வர்ற மாதிரி எல்லா ரோபோவையும் ஒழிக்கிறாரு! அதான் கதை!<br /><br />இதுல பாத்தீங்கன்னா, தந்திரன் படத்துல வர்ற “ஷிட்டி” ரோபோதான் இந்திரன் படத்த டைரக்டு பண்ணியிருக்கு! தான் எடுத்த படத்துல மட்டும் “குருவ மிஞ்சின சிஷ்யன்” இருக்கக்கூடாதுன்னு காட்டுது! ஆனா, நெஜத்துல குருவ மொத்தமா ஓரங்கட்டி, அவரு கிட்டேருந்து ஐடியாவெல்லாத்தையும் உறிஞ்சு கடைசில கண்டுக்கவே மாட்டேங்குது!<br /><br />என்ன, ஒண்ணு சினிமா! இன்னொண்ணு சினிமா ஒலகம்!<br /><br />ஆங்.... நம்ம பஞ்ச் சொல்லலையே!<br /><br />எந்திரன்: நூறு கோடி ரூபாய்ல கட்டின குட்ச! லிப்ஸ்டிக்கு போட்ட பன்னி! லிப்ஸ்டிக்கு போட்டாலும் பன்னி பன்னிதானே?<br /><br />தந்திரன்: விரைவில் ஆப்பு!</div>ரவிஷாhttp://www.blogger.com/profile/04012491564649330999noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3350577975647976332.post-86780722366030844752010-06-21T12:17:00.000-07:002010-06-21T12:31:14.749-07:00ஒரு கதை!இந்தக் கதை சுமார் 20 வருடங்களுக்கு முன்பு ஒரு தமிழ் வாரப்பத்திரிக்கையில் வந்தது! எழுதியவர் யாரென்று நினைவில் இல்லை! ஒரு பக்கக் கதையாக வந்திருந்தது! ஆனால், இன்னும் மனதில் பசுமரத்தாணியாக பதிந்திருக்கிறது!<br /><br />-------------------------------------------------<br /><br />அந்த நாற்பது வயது ஆள் ஒரு பத்து வயது சிறுவனுடன் அந்த சின்ன ஹோட்டலுக்குள் நுழைந்தான்! நுழையும்போதே கூட வந்த சிறுவனை ஏதோ வசைபாடியபடிதான் வந்துகொண்டிருந்தான்! சிறுவனும் முகத்தில் எந்தவித முகபாவமும் காட்டாமல் கூடவே நடந்துகொண்டுவந்தான்!<br /><br />வந்தவர்கள் ஒரு டேபிளில் உட்கார்ந்தார்கள்! சர்வர் வந்து “என்ன சார் வேணும்” என்று கேட்டான்!<br /><br />அந்த நா.வ. ஆள் “எனக்கு ஒரு மசால் தோசை” என்று சொல்லிவிட்டு சிறுவனைப் பார்த்து “உனக்கு என்னடா வேணும்” என்று கேட்டான்! சிறுவன் தயங்கியபடியே - தவறு பயந்தபடியே - உட்கார்ந்திருந்தான்! காதில் வைத்திருந்த பென்சிலை குடாய்ந்தபடியே, சர்வர் “இட்லி தோசை பூரி இதெல்லாம் இருக்குதப்பா! என்ன வேணும்னு சொல்லு” என்று எடுத்துக்கொடுத்துவிட்டு நகர்ந்தான்!<br /><br />சிறுவனும் ஆசையாக “ஒரு தோசை” என்று சொல்ல, அந்த நா.வ. ஆள் அவனை பளாரென்று அறைந்தான்! “உனக்கு எதுக்குடா தோசை? வயித்தில எடம் இருக்காது” என்று சொல்லிவிட்டு “உனக்கு ஒரு ப்ளேட் இட்லி போதும்”! சிறுவன் “அப்போ கூடவே ஒரு வடையும்....” என்று இழுக்க, அதற்கும் ஒரு அடி! “வடை இல்லைன்னா உங்களுக்கு சாப்பாடு எறங்காதோ”!<br />கூடவே ஒரு பளார்!<br /><br />”சர்வர்! இங்கே வாப்பா! ஒரு மசால் தோசை, ஒரு ப்ளேட் இட்லி கொண்டுவா”! ஆர்டர் செய்துவிட்டு அந்த ஆசாமி ஹோட்டலை நோட்டம் விட்டான்! சிறுவன் என்ன சொல்வதென்றும் செய்வதென்றும் தெரியாமல் உட்கார்ந்திருந்தான்!<br /><br />சாப்பாடு வந்தது! இருவரும் சாப்பிட்டுவிட்டு முகம் தூக்கையில், சர்வர் “சார் காப்பியா டீயா?” என்று கேட்டான்! சிறுவன் வாயைத் திறக்கக்காணுமே? ஹூஹூம்!<br /><br />சர்வர்தான் “இங்கே காப்பி ரொம்ப நல்லா இருக்கும்பா” என்று எடுத்துக்கொடுக்க, சிறுவன் “எனக்கு டீதான் வேணும்” என்று சொல்ல, அடுத்து ஒரு பளார்!<br /><br />இதையெல்லாம் சகித்துக்கொண்டிருந்த பில் மாஸ்டர் சீட்டிலிருந்து எழுந்து வந்து, அந்த நா.வ. ஆசாமியிடம் “சார் இவன் உங்க பிள்ளைங்களா” என்று சந்தேகத்துடன் கேட்டான்! “ஆமா சார்! இவன் என் பிள்ளைதான்”!<br /><br />”அப்புறம் எதுக்கு சார் அவனை போட்டு அனாவசியமா அடிக்கிறீங்க” என்று பில் போடுபவர் கேட்டார்!<br /><br />“நான் இப்படி சின்ன வயசுல எங்கப்பன் கிட்டே அடி வாங்கினப்போ நீங்க எங்கே போயிருந்தீங்க?”! சாட்டையடி போல நா. வ. ஆசாமி கேட்டதற்கு பில் மாஸ்டரிடம் பதில் இல்லை!<br /><br />------------------------------------ரவிஷாhttp://www.blogger.com/profile/04012491564649330999noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3350577975647976332.post-21717101230327401332010-05-21T14:29:00.000-07:002010-05-21T14:40:52.759-07:00காஃபி குடித்தல்!<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7nec7UL3ZAdxmLpiipq-bL8cpB2LmIs1bjQJMaNr6HJ_ZZ3Ejm_FxygspUHxVm5fIu_oziGAaH-6CSztoxV94ZD_XeXfFk_mJ9U54d4Lzukvg_JE4kgnzHjpZ0DagKiBjcXD15Tfs9XMq/s1600/coffee.jpg"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 269px; FLOAT: left; HEIGHT: 320px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5473841463761138146" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7nec7UL3ZAdxmLpiipq-bL8cpB2LmIs1bjQJMaNr6HJ_ZZ3Ejm_FxygspUHxVm5fIu_oziGAaH-6CSztoxV94ZD_XeXfFk_mJ9U54d4Lzukvg_JE4kgnzHjpZ0DagKiBjcXD15Tfs9XMq/s320/coffee.jpg" /></a><br /><div></div><br /><div></div><br /><div>நான் இராமகிருஷ்ணா மிஷன் ஹை ஸ்கூலில் படித்தபோது நடந்த சம்பவம் இது! இன்றைக்கும் இது மறக்கவில்லை! எப்போதும் மறக்காது என்றும் நினைக்கிறேன் ஏனென்றால் அப்படியாப்பட்ட சப்ஜக்ட் இது!<br /><br />நான் ஒன்பதாவது படிக்கும்போது, தமிழ் வாத்தியார் ஒருவர் எங்களுக்கு அறிமுகமானார்! அவர் பெயர் அம்மையப்பன்! அப்போது அவருக்கு நாற்பது சொச்சங்கள் இருக்கும்! மற்ற வாத்தியார்களைப் போல<br />சிங்கியடித்துக்கொண்டு இருக்கவில்லை அவர்! சரியான பணக்காரர் என்று சொல்லிக்கொள்வார்கள்! தினமும் சஃபாரி டிரஸ்ஸில்தான் வருவார் என்றால் பார்த்துக்கொள்ளூங்கள்! ஜாலியாக பேசுவார்!<br />மாணவர்களை திட்டுவாரே தவிர, அடிக்கமாட்டார்!<br /><br />சரி, விஷயத்துக்கு வருவோம்! நான் ஒன்பதாவது படிக்கையில், ஒரு க்வார்ட்டர்லி லீவில், அவர் ஒரு மாதம் லீவு எடுத்துக்கொண்டு சிங்கப்பூர், மலேஷியா, ஹாங்காங், ஜப்பான் போன்ற நாடுகளை சுற்றிப் பார்க்க போயிருந்தார்!<br /><br />ஊரெல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டு ஒரு நாள் எங்கள் கிளாசுக்கு தமிழ் வகுப்பு எடுக்கவந்தார்! ஃபாரின் போய்விட்டு வந்த பிறகு அவரிடம் நிறையவே மாற்றம்! கைகளில் எக்ஸ்ட்ரா மோதிரங்கள், பிரேஸ்லெட், மற்றும் தடியான தங்கச் சங்கிலி! செண்ட் அடித்திருந்தார் என்று சொல்லவே வேண்டாம்!<br /><br />அவர்தான் ஜாலி பேர்வழியாயிற்றே! கிளாஸில் ஒருவன் சும்மா இல்லாமல், “சார்! பாடம் அப்புறம் இருக்கட்டும் சார்! மொதல்ல உங்க பயண அனுபவத்தை சொல்லுங்க சார்!” என்று கேட்டான்!<br /><br />அவ்வளவுதான்! மடை திறந்த மாதிரி சுமார் ஒரு மணி நேரத்துக்கு, எங்கேல்லாம் போனேன் என்று சொன்னார்!<br /><br />சிங்கப்பூர், மலேஷியா போன்ற நாடுகளில் எப்படியெல்லாம் மனிதர்கள் இருக்கிறார்கள்! பழக்க வழக்கம், கலாச்சாரம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு இருந்தார்! திடீரென்று, ஜப்பானைப் பற்றி<br />ரொம்பவே புகழ ஆரம்பித்துவிட்டார்!<br /><br />“அங்கெல்லாம் டி.வி., ரேடியோ, டேப் ரிக்கார்டர் எல்லாத்தையும் தெருவுல போட்டு கூறு கட்டி விக்குறான்! பாக்கவே நல்லா இருந்தது!” என்றெல்லாம் அளந்து கொண்டிருந்தார்! அப்படியே பேச்சு ஒரு விஷயத்துக்கு போய்விட்டது! அதான், செக்ஸ்!<br /><br />“ஜப்பான்ல ஒரு வீதி பூராவும் அந்த மாதிரி பொம்பளைங்க இருக்காங்க! வேணுங்கறவன் அங்கே போகலாம்!” என்றெல்லாம் சொல்லிவிட்டு,<br />பூடகமாக, “ஜப்பானியர்களை பொறுத்தவரை கற்பு என்பது காஃபி குடிப்பது மாதிரி! அவங்களை பொருத்தவரை அது சாதாரணமான விஷயம்! எப்போ வேணும்னாலும் குடிப்பாங்க!” என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார்!<br /><br />அப்போது, என் கிளாஸில் இருந்த விடாக்கண்டன் ஒரு கேள்வி கேட்டானே பாக்கலாம். “அப்போ, நீங்க எத்தனை காஃபி சார் குடிச்சீங்க?”!<br /><br />அவனுக்கு அடி கெடச்சுதுன்னு நீங்க நெனெச்சாக்க தப்பு!<br /><br />அந்த கேள்விக்கு அவர் சொன்ன பதில்தான் சூப்பர். இன்னைக்கும் நெனைவுல இருக்கு!<br /><br />“நான் காஃபி குடிக்கறதில்ல! டீ தான் குடிப்பேன்”!</div>ரவிஷாhttp://www.blogger.com/profile/04012491564649330999noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3350577975647976332.post-9462909329883855152010-04-29T15:36:00.000-07:002010-04-29T15:46:25.174-07:00இது என்ன புது கலாட்டா?<div align="center"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8Xr9KfItvfo-HeI9zeyK8TYXF3L3qPLQ5WZiirEPtLrW_oP5mtVebsbTlm7hKeFVikFN9Q61Jce3DH9JP8VKGDnLqPJG2zOWNv7Tvy5dYqd9zARkJ0Os41exE76_30peSh5aNLEFAr0Mj/s1600/baya.jpg"><img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 366px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5465693098895242306" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8Xr9KfItvfo-HeI9zeyK8TYXF3L3qPLQ5WZiirEPtLrW_oP5mtVebsbTlm7hKeFVikFN9Q61Jce3DH9JP8VKGDnLqPJG2zOWNv7Tvy5dYqd9zARkJ0Os41exE76_30peSh5aNLEFAr0Mj/s400/baya.jpg" /></a> (நன்றி: ஆனந்த விகடன் Dated: 05-05-2010)<br /><br /><div align="left">மேலே உள்ள படம் ஆ.வி.யில் வரும் லூசுப் பையனின் நையாண்டி பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது! உங்களுக்குத் தெரிந்திருக்கும்! வாராவாரம்</div><div align="left">லூசுப்பையன் என்பவர்(கள்) ஆ.வி.யில் எல்லோரையும் அநியாயத்துக்கு கலாய்ப்பார்கள்!</div><div align="left"></div><div align="left">போன வாரம் வரை ஜெ.வை கோபலலிதா என்றே ரெஃபர் செய்து கார்ட்டூன் போட்டுக்கொண்டிருந்தார்கள்! இந்த வாரம் என்ன ஆயிற்றோ தெரியவில்லை, கோபலலிதா போய் பயலலிதா ஆகிவிட்டார்!</div><div align="left"></div><div align="left">ஒரு வேளை ஜெ. இப்போது கோபமெல்லாம் போய் ஆ.வி.யிடன் சமாதானாமாகிப் போய்விட்டாரா? இல்லை, ஆ.வி.க்கு ஜெ. மீது இருந்த பயம்</div><div align="left">போய்விட்டதா? இல்லை அடுத்த ஆட்சி அவங்க ஆட்சி வந்துவிட்டால், ஏன் இந்த வம்பு என்று பயலலிதா ஆக்கிவிட்டார்களா?</div><div align="left"></div><div align="left">இது என்ன புது கலாட்டா தெரியவில்லையே?</div><div align="left"></div><div align="left">தெரிந்தால் சொல்லுங்களேன்!</div><div align="left"></div><div align="left"></div></div>ரவிஷாhttp://www.blogger.com/profile/04012491564649330999noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3350577975647976332.post-56265313064894283022010-04-27T15:33:00.000-07:002010-04-27T15:40:19.453-07:00சாருவைப் பாரு!இன்று சாரு தன் பிளாக்கில் தன் உயிர்த் தோழி, சாருவின் கவிதைகளை<br />நினைத்துக்கொண்டே காரை ஓட்டி நடைபாதையில் ஏற்ற இருந்ததாகவும், இனிமேல் அந்தத் தோழி அப்படி செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொள்வதாகவும் சொல்லியிருக்கிறார்!<br /><br />ஏன்யா! அவள் எந்த மாதிரியான தோழியாக இருந்துவிட்டுப் போகட்டும்! லூசு மாதிரி காரை ஓட்டி நடைபாதையில் ஏற்ற இருந்த (அல்லது, நடைபாதையில்<br />இருந்த யார் மீதாவது ஏற்ற இருந்த) ஒரு குடாக்கை, பளார்னு அறைய வேண்டாமா? அல்லது திட்டவேண்டாமா? அதையெல்லாம் விட்டுவிட்டு “கேட்டுக்கொள்கிறாராம்”.<br /><br />என்னைக் கேட்டால், அந்த அன்புத் தோழியிடம் சாருவின் கவிதைகளை படிக்காமல் இருக்க கேட்டுக்கொள்ளவேண்டும்!ரவிஷாhttp://www.blogger.com/profile/04012491564649330999noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3350577975647976332.post-67938981249328282522010-01-29T12:54:00.000-08:002010-01-29T12:58:17.141-08:00நோ காமெண்ட்ஸ்!<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMsfjrSBjnUh_v3CGJEVOM7K2upzuKw8RE733Fo7URAOJj5pF2zlxE6hINTj7kXIo_N6LpeI9d65-Y6c61u6zT1OKggwT3OugXkzIc-fvagDfxFnBu6m50JdTc9GHX0Fhlr7vZy6uKk3-W/s1600-h/funny.jpg"><img style="WIDTH: 400px; HEIGHT: 335px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5432269004825990018" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMsfjrSBjnUh_v3CGJEVOM7K2upzuKw8RE733Fo7URAOJj5pF2zlxE6hINTj7kXIo_N6LpeI9d65-Y6c61u6zT1OKggwT3OugXkzIc-fvagDfxFnBu6m50JdTc9GHX0Fhlr7vZy6uKk3-W/s400/funny.jpg" /></a><br /><div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbOrXKV4tTjt8ajtzbawJKm98HfmpbjGFc0tFGxEr9JTdjuNC9yP5Eog7QLwSt5XqapKcPhSG9ziZa3vFxvcRn6GpiyCEck6bHUe82vXcIm79UZtnlMjMEsETgSeCoK2nMGq_XfT01N0jp/s1600-h/funny.jpg"></a><br /><br /><div>(நன்றி: விடுதலை 29th January 2010)</div><br /><br /><div></div><br /><br /><div>இந்த விளம்பரம் சனவரி 29த் தேதியட்ட “விடுதலை” ஏட்டில் வந்தது! அய்யா அவர்கள் நடத்தும் பத்திரிக்கை!</div><br /><br /><div></div><br /><br /><div>படத்தைப் பாருங்கள்! குறிப்பாக சிகப்பு வட்டமிட்ட இடத்தைப் பாருங்கள்!</div><br /><br /><div>இதற்குமேல் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை!</div><br /><br /><div></div><br /><br /><div></div><br /><br /><div></div></div>ரவிஷாhttp://www.blogger.com/profile/04012491564649330999noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-3350577975647976332.post-65221374091004379272010-01-26T08:13:00.000-08:002010-01-26T08:16:44.974-08:00குரலில் ஒரு பயங்கரம்!சாதாரணமாக, குரலில் இருக்கும் கம்பீரம் பல பேருக்கு உடலில் இருப்பதில்லை! ஃபோனில் ஒருவரின் குரலைக் கேட்டுவிட்டு, அவரைப் பற்றிய கண்ணோட்டத்துக்கு நாம் பலமுறை வெகுதூரம் போயிருக்கிறோம்!<br /><br />இந்தியர்களின் தொண்டைக் கட்டு மேற்கத்தியர்களின் தொண்டையைப் போல இருப்பதில்லை! இதற்கு யாராவது அறிவியல் காரணம் கண்டுபிடித்திருந்தால் எனக்கு பின்னூட்டம் இடலாம்!<br /><br />எனிவே, அமெரிக்கர்களின் தொண்டைக் கட்டு ரொம்பவே அடித்தளத்திலிருந்து வரும்! முக்கால்வாசி அமெரிக்கர்கள், பள்ளியில் படிக்கும்போதே குரல் உடையும்போது, ரொம்பவே உடைந்து பயமுறுத்தும் தோற்றத்தை நம் கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்தும்! நம்மூர்க்காரர்கள், என்னையும் சேர்த்து, குரலில் அந்த deep voice என்று சொல்லக்கூடிய விததில்<br />இருக்காது!<br /><br />சரி, அட்லீஸ்ட், ஆண்கள் குரல் ஆண்கள் போலவும் பெண்களீன் குரம் பெண்மையின் நளினத்துடன் இருந்தபட்சத்தில் நோ பிராப்ளம்! நம்மூரில் பல ஆண்களுக்கு பெண் குரல் போலவும், பெண்களுக்கு ஆண்குரல் போலவும் இருப்பதில்தான் பிரச்சினையே! நம்மூரில் இப்போது பல ஆஸ்பத்திரிக்கைகளில் தொண்டை ஆபரேஷன் செய்து குரலை சரி செய்கிறார்கள்! அதெல்லாம் இப்போதுதான்!<br /><br />நான் சொல்வது சுமார் 20 வருடங்களுக்கு முன்! நான் +2 படிக்கும்போது, என் வகுப்பில் ஒரு மாணவன் இருந்தான்! சுமார் ஐந்தடி உயரம், ஆள் பார்க்க, ச்சும்மா ஹீரோ போல டிரஸ் செய்துகொள்வான்! படிய வாரிய தலைமுடி, ட்ரிம் செய்த மீசை (ஆம், அவனுக்கு அப்போதே அடர்த்தியாக மீசை இருந்தது) டிப் டாப்பான உடை, விலை உயர்ந்த வாட்ச் போன்றவைகளுடன்<br />தகதகவென்று மின்னுவான்! ஆனால், பாவம்! வாயைத் திறந்தால் போச்சு! அப்படியே ஒரு பத்து வயது சிறுமி மாதிரி பேசுவான்! அவன் இப்போது என்ன செய்கிறான் என்று தெரியவில்லை! ஆனால் பள்ளியில் படிக்கும்போது அவனுக்கு ஏழரை நடந்திருக்கும் என்று சொல்லித்தான் தெரிவதில்லை!<br /><br />நான் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் சென்னையில் ஒரு கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன்! அது “நானே ராஜா நானே மந்திரி” மாதிரியான ஒரு வேலை! நாவல் நெட்வர்க்கில் இம்ப்ளிமெண்ட்<br />செய்த - நானே கையால் எழுதிய - ஃபாக்ஸ் ப்ரோ பிரோகிராம்கள்தான் என் வாழ்க்கையின் ஆர்மபம்! அப்போது சும்மா இல்லாமல் சைட் பிஸினஸாக ரிப்பன் இங்க் மற்றும் ப்ரிண்டர் பேப்பர் ஆகியவைகளை<br />இடது கையில் வாங்கி வலது கையில் விற்பனை செய்துகொண்டிருந்தேன்!<br /><br />அப்போது பழக்கமான ஒரு கம்பெனியில் ஒரு பெண்மணி இருந்தார்! அவர் ஜாதியில் பதினாறு வயதிலேயே கல்யாணம் செய்துகொடுத்துவிட்டார்கள்! கணவன் ஒரு மளிகைக் கடை ஓனர்! அந்த பெண்மணி, அவர் மூலமாக ரெண்டு குழந்தைகளை பெற்றெடுத்தார்! வீட்டில் சும்மா இல்லாமல், ஆங்கிலத்திலும் வரலாறிலும் எம்.ஏ. படித்திருந்தார்! தனக்கும் கணவணுக்கும்<br />சரியான அண்டர்ஸ்டாண்டிங் இல்லாததால்,. டைவர்ஸும் வாங்கியிருந்தார்! தானே வேலை செய்து இரண்டு குழந்தைகளையும் காப்பாற்றிக் கொண்டிருந்தார்!<br /><br />விஷயம் என்னவென்றால், அவருக்கு ஆண் குரல்! அவர் பெயரும் ஆண்பிள்ளைத்தனமாகத் தான் இருக்கும்! பல சமயம் அவர் தன்னை பெண் என்றே சொல்லிக்கொள்ளாமல் தான் வேலை பார்த்துக்கொண்டிருந்த<br />கம்பெனியில் சீனியர் சேல்ஸ் மேனேஜராக ஆகியிருந்தார்!<br /><br />ஒரு முறை, என் குடும்ப நண்பர் ஒருவர் அந்த பெண்மணி வேலை செய்யும் கம்பெனிக்கு ஃபோன் போட்டு அவரிடம் பேசியிருக்கிறார்! பெண்மணி தன்னை பெண் என்றே சொல்லவில்லை! நண்பர், தான் பேசியது ஆண் என்றே நினைத்துக்கொண்டிருந்தார்! ஒரு நாள் அந்த் பெண்மணியை - பெண் என்று தெரியாமல் - அவர் ஆஃபிஸுக்கே சென்று சந்திக்கப் போக, அந்த பெண்மணி நண்பரிடம் கையைக் குலுக்கு “நாந்தான் .....” என்று சொல்ல, நண்பர் விட்டார் ஓட்டம்!<br /><br />பிறகு ஒரு நாள் நண்பர் என்னிடம் “ஏண்டா! உனக்குத் தான் தெரியுமே? ஏன் என்னிடம் சொல்லவில்லை?” என்று கடிந்துகொண்டார்! “சாரி!” என்று சொல்லி சமாளித்தேன்!<br /><br />இப்போது சுமார் 15 வருடங்கள் ஓடிவிட்டன! எப்போது நினைத்தாலும் சிரிப்பை வரவழைக்கும் ஒரு நிகழ்ச்சி அது!ரவிஷாhttp://www.blogger.com/profile/04012491564649330999noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3350577975647976332.post-21812401138423612009-12-22T14:41:00.000-08:002009-12-22T14:45:50.123-08:00கவிதைகள்!<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgyj9xLEKMTZDlZ1aNOrRIavlKFBYw4zyPIPMaFgzSH6nZpMD9mOXMY9fIrwhpSxQGZXHwAwcu0i7IbeJWvCOP4iswcUHQRIP_pVk-q5ajYM7xuV_uxHUkllzQNadkEow50R15VZCPDUJjq/s1600-h/creative-aurvana-dj-headphones.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5418195356081779218" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 200px; CURSOR: hand; HEIGHT: 200px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgyj9xLEKMTZDlZ1aNOrRIavlKFBYw4zyPIPMaFgzSH6nZpMD9mOXMY9fIrwhpSxQGZXHwAwcu0i7IbeJWvCOP4iswcUHQRIP_pVk-q5ajYM7xuV_uxHUkllzQNadkEow50R15VZCPDUJjq/s200/creative-aurvana-dj-headphones.jpg" border="0" /></a><br /><div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiw-pjX1E4lwz9QVoitfPKvPkelt6kxVKegJsQxXLGnlc5Aj3_6dwmydienP5OdvfbXkWq3kyverGCN954fqv5Yv5VBnXuCR2vi7gJrKDPVru9eAA2VcDIorGXStkGxXKXasGYYb-NrMWZ9/s1600-h/creative-aurvana-dj-headphones.jpg"></a><br /><br /><div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPIAZDZbRMY3ielwm4mnhqnVm_I5vtM6gsPSHVFg3l1wfel4t6NHtUV81qyFgBKMwVspI3eW5eqWCQePkghxdkHk20weCz4y4-Mfdkdl5_FpInDaOAtqubpylNxU2NLpFA5Ue5WfXHQtn4/s1600-h/popcorn.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5418194774243397410" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 132px; CURSOR: hand; HEIGHT: 200px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPIAZDZbRMY3ielwm4mnhqnVm_I5vtM6gsPSHVFg3l1wfel4t6NHtUV81qyFgBKMwVspI3eW5eqWCQePkghxdkHk20weCz4y4-Mfdkdl5_FpInDaOAtqubpylNxU2NLpFA5Ue5WfXHQtn4/s200/popcorn.jpg" border="0" /></a><br /><br /><br /><p><strong></strong></p><br /><br /><br /><p><strong>ஒற்றைப் பொரி!</strong></p><br /><br /><br /><div></div><br /><br /><br /><div>பின் மதிய நேரத்தில்வெள்ளைக்காரியின் பசிக்கு</div><br /><br /><br /><div>பொரித்து போடப்பட்ட சோளங்கள்</div><br /><br /><br /><div>அவளும் சாப்பிட்டு அனைவரும் கை</div><br /><br /><br /><div>அள்ளியதில் மிச்சமந்த ஒற்றைப் பொரி</div><br /><br /><br /><div>அநாதை விடுதி குழந்தையின்</div><br /><br /><br /><div>“என்னை தத்தெடுத்துக்கொள்ளேன்”</div><br /><br /><br /><div>ஏக்கமிகு பார்வையில்!</div><br /><br /><div></div><br /><br /><div></div><br /><br /><div></div><br /><br /><div><strong>கூச்சம்</strong></div><br /><br /><div><strong></strong></div><br /><br /><div>“ஹாய்! திஸ் இஸ் ஆண்டர்சன் ஹியர்”</div><br /><br /><div>“திஸ் இஸ் சாண்ட்ரா ஸ்பீக்கிங்”</div><br /><br /><div>“மை நேம் இஸ் மைக்கேல்”</div><br /><br /><div>கால் செண்டர் பொய்களில் பழகாத</div><br /><br /><div>ஹெட் ஃபோன்கள் இனிமேலும்</div><br /><br /><div>சகிக்க முடியாத கூச்சத்தில்!</div><br /><br /><div></div><br /><br /><div></div></div></div>ரவிஷாhttp://www.blogger.com/profile/04012491564649330999noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3350577975647976332.post-1586902945296560882009-09-04T13:42:00.000-07:002009-09-04T14:02:34.239-07:00ஷங்கர் படத்தில் ஷங்கர்!<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjE9rk9sDMTsINMzf6yyI4d2fdNXIDmO0N6bFaMd16kUS70Li4gZEzkApE_QCtyBkiT8q541PCodQKbop_eQ3NscGIEG2BB2KbTBgjVVE30AtrPW3FGA3r9ndnKNJkYjTFL1ZmZQ2o9HEVJ/s1600-h/rajinikanth_shankar_robot.jpg"><img style="MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 320px; FLOAT: right; HEIGHT: 214px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5377720482857285026" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjE9rk9sDMTsINMzf6yyI4d2fdNXIDmO0N6bFaMd16kUS70Li4gZEzkApE_QCtyBkiT8q541PCodQKbop_eQ3NscGIEG2BB2KbTBgjVVE30AtrPW3FGA3r9ndnKNJkYjTFL1ZmZQ2o9HEVJ/s320/rajinikanth_shankar_robot.jpg" /></a><br /><div></div><br /><div>என்னடா தலைப்பிலேயே பினாத்தறான்னு நெனெச்சிக்காதீங்க! நம்ம ஷங்கர் இருக்காரே, அவரு தன்னோட படத்துல எப்படியோ நடிச்சிடறாரு!<br /><br />பொதுவா கதாசிரியரோ இல்லை டைரக்டரோ, தன்னை ஒரு நடுநிலையாளனாகவோ அல்லது ஒரு கதாபாத்திரத்தின் பார்வையில்/கோணத்தில்தான் கதை சொல்லமுடியும்! இல்லை, ஒரு கதையை மூன்றாம் மனிதன் நோக்கில் (பார்வையில்) காட்டமுடியும். இதைத்தான் பாயிண்ட் ஆஃப் வ்யூ (Point of View) என்று சொல்லி விகடனிலும் குமுதத்திலும் நம்ம டைரக்டர்கள் ஜல்லியடிப்பார்கள்!<br /><br />அதே சமயத்தில் ”கெட்டவன் சாவான் நல்லவன் வாழ்வான்” அப்படீன்னும் poetic justic முறையில் வில்லனுக்கு தண்டனை கொடுப்பார்கள்! அதாவது வேலால் வயிறு கிழிந்து சாவது இல்லை தலையறுபட்டு சாவது என்று! இதில் இன்னொரு வகை, தன் இன்னொரு முகத்தை (alter ego) தன் படத்தில் ஒட்டாத ஒரு கேரக்டராக காண்பித்து அவனை வைத்து கதையை நகர்த்துவார்கள்! இல்லையெனில், கருத்து சொல்ல வைப்பார்கள்! தள விஜயின் தந்தை எஸ். ஏ. சி. படத்தில் கிழிந்த கோட்டு போட்டு லூசுத்தனமாக “ஆண்டிப் பண்டாரம்” ரேஞ்சில் தத்துப்பித்துவம் சொல்வது எஸ். ஏ. சி. தான்!<br /><br />(இப்படித்தான் எஸ் வி. சேகர் நாடகமான் “வால் பையன்” நாடகத்தில் ஒவ்வொரு சீன் முடியும் முன் ஒரு ஆசாமி (ஜிப்பா, ஜோல்னா பை சகிதம்) வந்து கருத்து சொல்லிவிட்டுப் போவார் (ஏழுக்கு பக்கத்தில் ஆறு போட்டால் எழுபத்தாறு! அதையே ஆறுக்கு பக்கத்தில் ஏழு போட்டால் அறுபத்தேழு! அதனால வாழ்க்கையில் எப்பவும் கேர்ஃபுல்லா இருக்கணும்)! நாடகத்தில் கடைசியில், ஒருவர் சேகரிடம் கேட்பார்! “யாரு அந்த ஆளு? ஒவ்வொரு சீன்லேயும் வந்து கருத்து சொல்லிட்டுப் போறாரு” என்று! அதற்கு சேகர் “ஆமாய்யா! கே. பாலசந்தர் ஒரு பேட்டில சேகர் டிராமாவில் கருத்து சொல்றதில்லை அப்படீன்னு சொல்லியிருந்தாரு! அதுக்காகத்தான் நாங்க கருத்து சொல்றதுக்கு ஒரு ஆள போட்டிருக்கோம்” என்பார்! இதைக் கேள்விப்பட்ட கே.பி.க்கு பி.பி. எகிறியிருக்கும் என்று சொல்லவேண்டிய அவசியம் இல்லை!)<br /><br />Okay, back to I was saying.... காதலன் படம் வெளிவந்த சமயத்தில் டைரக்டர் ஷங்கர் டி.வி.யில் ஒரு பேட்டி கொடுத்திருந்தார்! கமலைப் போல எவனுக்குமே புரியாத லெவலில் பேசியிருந்தார்! அதில் ஒன்று மட்டும் தெரிந்தது! ஷங்கர் சிறு வயதில் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறார் என்று! முக்கியமாக நன்றாக படித்தும் தனக்கு வசதி இல்லாததால் மேலே படிக்க வசதி இல்லாத விஷயத்தை சொல்லியிருப்பார்! அதை தன் படத்தில் காண்பிப்பது மட்டும் அல்லாமல், தன்னையே உருவகப்படுத்தி சில கதாபாத்திரங்களை காட்டியிருப்பார்!<br /><br /><strong>ஜெண்டில்மேன்:</strong><br /><br />கிச்சாவிடம் (அர்ஜுன்) ஒரு பையன் வந்து முறுக்கு விற்பதற்கு சான்ஸ் கேட்பான்! கவுண்டமணி கேட்ட கேள்விக்கு பதிலாக கள்ள பூணூலை காண்பித்த்து “இதையாவது போட்டுட்டுபோய் விக்கறேன் சார்” என்று அழுதுகொண்டே சொல்லி கிச்சாவின் மனதைக் கரைப்பான்! அந்தப் பையன் தான் ஷங்கர், வேறு ஒரு உருவத்தில்! நல்லா படிச்சாலும் படிக்க வசதி இல்லை! அதனால பொய் சொல்றது தப்பில்லை என்பது ஷங்கரின் வாதம்!<br /><br /><strong>காதலன்:</strong><br /><br />சொல்லவே தேவையில்லை! பிரவு தேவாதான் ஷங்கரின் உருவகம்! “தனக்கு தகுதி இல்லாததற்கு ஏன் ஆசைப்படவேண்டும்” என்று தந்தை (எஸ்.பி.பி.) கேட்டாலும் தான் நினைத்ததைஎப்படியாவது அடையும் சுபாவம்!<br /><br /><strong>இந்தியன்:</strong><br /><strong></strong><br />சாட்சாத் இந்தியன் தாத்தாவே தான்! கஷ்டப்பட்டு வாங்கிய சுதந்திரத்தை இப்படி லஞ்சம் வாங்கி ஊழல் செய்து நாறடிக்கிறீர்களே என்று கேட்பது!<br /><br /><strong>ஜீன்ஸ்:</strong><br /><br />மாதேஷ் கேரக்டர்! Green screen டெக்னிக்கில் தனக்கு உள்ள ஆர்வத்தை மாதேஷ் மூலமாக காண்பித்து இருப்பார்!<br /><br /><strong>முதல்வன்:</strong><br /><br />இதில் புகழேந்தி ஒரு நாள் முதல்வராக இருந்துவிட்டு bad guys இடம் அடிவாங்கி வீட்டில் படுத்திருப்பார்! காலையில் எழுந்து பார்த்தால் வெளியில் ஒரே கூட்டம்! தன்னை அரசியலுக்கு வந்துவிடும்படி சொல்வார்கள்! ஆனால் அவர்கள் சொல்வதை கேட்காத புகழ், கால் இல்லமல் ஊனமாக இருக்கும் ஒருவர் சொல்லி முஷ்டியை உயர்த்துவார்! இதில் ஊனமாக வருபவர்தான் ஷங்கரின் உருவகம்!<br /><br /><strong>பாய்ஸ்:</strong><br /><br />அந்த மணிகண்டன் கேரக்டர்! அடுத்தவர்களுக்கு ஐடியாவை அள்ளித்தந்துவிட்டு அவர்களை உயர்த்திவிட்டு தான் காணாமல் போவது! அது ஒருவகையான inferiority complex!<br /><br /><strong>அந்நியன்:</strong><br /><br />சாட்சாத் அந்நியன் தான் ஷங்கர்! சமூகக் கொடுமைகளை நேரடியாக மக்களிடம் சொல்ல தைரியம் இல்லாமல் செல்லுலாய்டில் kick ass செய்வது போல காட்டியது!<br /><br /><strong>சிவாஜி:</strong><br /><br />சந்தேகமே இல்லாமல் கடைசி சீனில் “ஐநூறு ரூபா! இன்னும் ரெண்டாயிரம் ரூபா கெடச்சா கேப்பிடேஷன் ஃபீயை சேத்துடலாம்” என்று சொல்லிக்கொண்டே சுமனின் கழுத்தை மிதிப்பானே ஒரு மாணவன்? அவன் தான் ஷங்கர்!</div><div> </div><div>பி.கு.: மேலே உள்ள படத்தில் யார் ஷங்கர்னு கேக்காதீங்க, ப்ளீஸ்!</div><div> </div>ரவிஷாhttp://www.blogger.com/profile/04012491564649330999noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3350577975647976332.post-82369006863574527592009-09-02T13:22:00.000-07:002009-09-02T13:24:46.775-07:00ஒண்ணுமே புரியல, ஒலகத்துல!சில நாட்களுக்கு முன் கே. டி.வியில் ஸ்பைடர்மேன் பார்ட்-1 (தமிழில்) போட்டார்கள்! சாதாரணமாக தமிழ்ப் படுத்தப்பட்ட ஆங்கிலப் படங்களை பார்ப்பதில்லை! இருந்தாலும், அதற்கு ஓரிரண்டு நாட்களுக்கு முன் தான் நான் ஸ்பைடர்மேன் சீரீஸ் - மூன்று படங்களையும் - டி.வி.டி.யில் பார்த்திருந்தேன்! அதனால் மனதில் ஒரு குறுகுறுப்பு! எப்படித்தான் தமிழ்ப்படுத்துகிறார்கள் என்று பார்த்தேன்!<br /><br />Long story short..... ஒரு சீனில் ஸ்பைடர்மேன் அவன் காதலியை காப்பாற்றுவான். அவளுக்கு ஸ்பைடர்மேன் தான் பீட்டர் பார்க்கர் என்று தெரியாமல் முத்தம் கொடுப்பாள்! இதில் என்ன தமாஷ் என்றால், அந்த முத்தக்காட்சியை கட் பண்ணிவிட்டார்கள்! அது பெரிய விஷயமில்லை!<br /><br />ஆனால், கந்தசாமி படத்திலிருந்து “திரை மின்னல்கள்” நிகழ்ச்சியில் சில காட்சிகளை வெளியிடுகிறார்கள்! அதில் ஸ்ரேயா கண்டபடி உடைகளை கிழித்துக்கொண்டு கத்துவார்! அதற்கெல்லாம் சென்சார் கிடையாதாம்! அதே மாதிரி ”மியாவ் மியாவ்” பாட்டு போடுகிறார்கள்! அதெல்லாம் பக்திப் பாடல்களோ? என்ன எழவோ?<br /><br />-----------------------<br /><br />அதே மாதிரி, போனவாரம் ஞாயிற்றுக்கிழமை விநாயக சதுர்த்தி! அன்று டி.வி.யில் நிகழ்ச்சிகள் எல்லாம் “சிறப்பு விடுமுறை”க்காகவாம்! ஆனால், இன்று ஓணம் பண்டிகைக்கு மட்டும் ஸ்பெஷலாக “ஓணம் பண்டிகையை” முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள்!<br /><br />சொந்த ஊரில்தான் தாத்தாவுக்கு கெட்ட பெயர்! அட்லீஸ்ட் பக்கத்து ஊரிலாவது நல்ல பெயர் எடுப்போம்னு கெளம்பிட்டார் போல!<br /><br />-----------------------<br /><br />திருவாளர் ப்ரேவ் பெல் இன்று தன் பத்திரிக்கையில் ஓணம் பத்திரிக்கையைப் பற்றி வறுத்தெடுத்துவிட்டார்! அதாவது ஓணம் பிறந்த கதை எல்லாம் கட்டுக்கதை! அதெல்லாம் பார்ப்பனர்களின் கைவேலை என்றெல்லாம் எழுதியிருக்கிறார்!<br /><br />On a side note, தாத்தா இன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை அறிவித்துவிட்டார்! அடடா, அப்படியென்றால் தாத்தாவும் ஒரு பார்ப்பனரா? இல்லை பார்ப்பனர்களின் அடிவருடியா?<br /><br />ரொம்பத்தான் brave, ப்ரேவ் பெல் அவர்கள்!<br />------------------------ரவிஷாhttp://www.blogger.com/profile/04012491564649330999noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3350577975647976332.post-31707206166465319492009-08-31T12:48:00.000-07:002009-08-31T12:52:31.443-07:00தி. நகர் அதாவது மாம்பலம்!நேற்று தினமணி பத்திரிக்கையில் “மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்” என்ற தலைப்பில் சுமார் நூறு வருடங்களில் மெட்ராஸ் எப்படியெல்லாம் மாறியிருக்கிறது, அதுவும் திருவல்லிக்கேணியை எப்படிஆங்கிலேயன் தன் கைப்பிடிக்குள் உருவிக்கொண்டான் என்பது முதற்கொண்டு எழுதியிருந்தார்கள்!<br /><br />அதைப் படித்ததும், எனக்கு தி.நகர் தான் ஞாபகத்துக்கு வந்தது! நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் தி.நகரில் தான்! சுமார் 12 வயது இருக்கும்போதுதான் தி. நகரை விட்டு ந.நல்லூருக்குவந்தோம்! நான் சிறு சிறுவனாக இருந்தபோது தி. நகர்தான் எல்லாமே எனக்கு! நான் மட்டும் அல்ல என் அக்காக்கள் அனைவருக்கும் தி. நகர்தான் ஞாபகத்துக்கு வரும்! அவர்களை விடுங்கள்! என் சித்தப்பாககள் அவர்களின் இளமைப் பருவத்தில் ஆட்டம்போட்டது எல்லாமே தி. நகர் தான்!<br /><br />அதிலும் என் தாத்தா நாற்பதுகளின் தொடக்கத்திலேயே தி. நகருக்கு வந்துவிட்டாராம்! அவர் கட்டிய முதல் வீடு பனகல் பார்க் எதிரில் இருந்தது! இப்போது “பிரமாண்டமாய்” இருக்கும்சரவணா ஸ்டோர்ஸ் இருந்த இடத்தில் தான் ஒரு பெரிய பங்களா இருந்தது! மார்வாடிக்கு சொந்தமானது! அந்த மார்வாடியும் என் தாத்தாவும் நண்பர்கள்! நண்பனுக்கு வீட்டை கட்டிக் கொடுப்பதற்கு சொல்ப சம்பளம் தான் வாங்கினாராம் தாத்தா! அதற்கு பிரதியுபகாராமாய் துரைசாமி பாலத்தின் அருகில் ஓரிரண்டு கிரவுண்டுகள் வாங்கித் தருகிறேன் என்றாராம்அந்த மார்வாடி! அதற்கு என் தாத்தா “அடப் போடா! இந்த இடத்துல எவண்டா வீடு கட்டுவான்?” என்றாராம்!<br /><br />அவர் கேட்டதிலும் ஒரு நியாயம் இருந்தது! 40’களில் தி. நகர் உஸ்மான் ரோட்டில் ஆள் அரவம் இருக்காதாம்! அங்கே இங்கே என்று ஓரிரண்டு வீடுகள்! சீனிவாச்சாரி மருத்துவமனை இருந்தது (ராமனாதன் தெருவுக்கு பக்கத்தில்)! பிறகு அதற்குப் பக்கத்தில் சாரதா வித்யாலயாவின் (ராமகிருஷ்ண மடம்) சிறுவர் பள்ளி இருந்தது! அதை விட்டால் மாம்பலம் ரயில்வே ஸ்டேஷன் தான்! உஸ்மான் ரோட்டின் இரு பக்கத்திலும் மரங்கள் இருக்குமாம்! அங்கே பொழுது சாய்ந்த பிறகு யாரும் போக பயப்படுவார்களாம்!<br /><br />இப்போது சொல்லுங்கள்! அங்கே மனை வாங்குவது ஒரு “திகில்” கிளப்பும் விஷயமாகத்தானே இருந்திருக்கும் என் தாத்தாவுக்கு? அதே மாதிரி, பழைய மாம்பலத்தில் ஒரு ஏரி இருந்ததாம்! அதனாலேயே அங்கு கொசு ரொம்பவே அதிகமாம்! துரைசாமி சப்வே வருவதற்கு முன்னால் அங்கு ரயில்வே கேட் தான்! என் தாத்தா “பழைய மாம்பலத்தில் எல்லாம் எப்படித் தான் மக்கள் வசிக்குறாங்களோ?” என்று நொந்து கொள்வாராம்!<br /><br />அதற்குப் பிறகு ஐம்பதுகளில் சென்னை பிக்கப் ஆகும் சமயத்தில், கோடம்பாக்கம் பிரசித்தி பெறத்துவங்கியது! அப்போது ரங்கராஜபுரம் ஏரியாவில் மனை வாங்கச்சொன்னபோது, “அங்கே எல்லாம் எவன் போக முடியும்? மழைக் காலத்தில் மாட்டு வண்டி சேற்றில் மாட்டிக்கும்! நான் அங்கேயெல்லாம் வீடு வாங்கமாட்டேன்” என்றெல்லாம் உதார்விட்டு கடைசி வரை வாடகை வீட்டில் வாடகை கொடுக்கமுடியாமல் உயிர் விட்டார்!<br /><br />சொல்லப்போனால், எழுபதுகளில் கூட, துரைசாமி ரோட்டில் நாங்கள் போக மாட்டோம்! அங்கே ஒரே இருட்டாக இருக்கும்! ஆறு மணிக்குப் பிறகு “ஓ” வென்று இருக்கும்! தவிரவும், அங்கே ஒரு விறகுக் கடை இருந்தது! என்னமோ எங்களுக்கு விறகுக் கடை மேல் ஒரு பயம்! அதனால் பகலிலேயே அந்தப் பக்கம் போகாமல் எதிர் வாடையில் நடப்போம்!<br /><br />அதே போல, வெங்கடநாராணா ரோட்டில் சாதாரணமாகவே போகமாட்டோம்! அப்போதெல்லாம், சாலையின் இரு பக்கமும் மரங்கள் ஓங்கி வளர்ந்திருக்கும்! அதனால் பகலிலேயே வெளிச்சம் இருக்காது! அதுவே ஒரு அமானுஷ்யமாக தென்படும் எங்களுக்கு! வீடு! இல்லை ராமகிருஷ்ணா ஸ்கூல்! இதுதான் எனக்கு அப்போதெல்லாம்!<br /><br />இன்னொன்றும் சொல்ல மறந்துவிட்டேனே? பனகல் பார்க்கின் வடக்குப் பகுதியான (கோடம்பாக்கம் ரோட்டை இணைக்கும் உஸ்மான் ரோட்டின் ஸ்ட்ரெட்ச்) இடத்தில் “ஓ” வென்று இருக்கும்! நான் ஸ்கூலில் படித்தபோது என் கூட படித்த ஒரு ஸ்னேகிதியின் வீடு அங்கேதான் இருந்தது! அவளின் சகோதரியும் என் அக்காவின் கிளாஸ்மேட் ஆதலால், அவ்வப்போதுபோய் வருவோம்! எங்கே என்றால், தற்போது “இசை ஞானி” என்று சொல்லப்படும் “மொட்டையின்” வீடு இருக்கிறதே முருகேச முதலி தெரு! அங்கேதான்! சாரதா ஸ்கூலில் இருந்துஒரு இரண்டு நிமிஷம் நடந்தால் அவர்கள் வீடு வந்துவிடும்! ஆனால், அதற்கே ஒரே ஓட்டமாக ஓடுவோம்! தவிரவும் அங்கே ஒரு பெரிய்ய்ய தூங்கு மூஞ்சி மரம் இருந்தது! அதை கணக்காக எடுத்துக்கொண்டு இரண்டு மூச்சில் ஓடிப்போய்விட்டு வருவோம்! ஏன் அந்த மரத்தடியில் ரெஸ்ட் என்றால், அங்கே ஒரு பெட்டிக் கடை இருந்தது! தவிரவும் சினிமா ஆசையில் சென்னைக்கு வந்த நபர்கள் எல்லாம் அந்தக் கடை வாசலில்தான் டீ குடித்துக்கொண்டு இருப்பார்கள்! அதனால் ஒரு சேஃப்டி!<br /><br />இப்போது என்னடானா, உஸ்மான் ரோட்டில் நடந்து போவதற்கே மூச்சு வாங்குகிறது! தி. நகரை நகை வாங்குவதற்கு ஒரு குறியீடாக பயன்படுத்துகிறார்கள்! அதை விடுங்கள்! மாம்பலம் என்பதையே தி. நகர் என்று மாற்றிவிட்டாரக்ள்!ரவிஷாhttp://www.blogger.com/profile/04012491564649330999noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3350577975647976332.post-17741318332068556722009-08-25T10:29:00.000-07:002009-08-25T10:35:08.478-07:00வெந்த புண்ணுக்கு கொஞ்சம் மருந்து போடுவோமா? கண்டிப்பாக 18+ ஒன்லி!அடுப்புல வெந்த சாமியைப் பாத்துட்டு என் நண்பன் நேத்து ஃபோன் பண்ணி “என்னடா தூங்கும்போதெல்லாம் ஒரே விஷ்க் விஷ்க்குன்னு கனவுல சத்தமா வருது”ன்னு பொலம்பினான்! எனக்கு அந்த அளவுக்கு பாதிப்பு இல்லைன்னாலும் ஓரளவுக்கு சரி செய்யலாம்னு தோணிச்சு! அதான் இந்தப் பதிவு!<br /><br /><br />கொஞ்சம் இம்போர்ட்டட் சரக்குதான்! எக்குத்தப்பா இருக்கும், ஜாக்கிரதை!<br /><br />----------------------------<br />மூணு அமெரிக்கா காரங்க சவுதிக்குப் போனாங்களாம்! அங்கே பாலைவனத்தில் நடந்து போயிட்டிருக்கும்போது ஒரு பெரிய மாளிகை கண்ணுல பட்டதாம்! உள்ளே போய் விசாரிச்சா ஒரு ஷேக்கோட அந்தப்புரமாம்! சும்மா ஒரு 100 ராணிங்க இருந்தாங்களாம் அங்க! நம்ம ஆளுங்களுக்கு ஒடனே பரபரன்னுச்சு! உள்ளே போய் பொண்ணுங்களை நோட்டம் விட ஆரம்பிச்சிட்டானுங்க! அதுக்குள்ள காவலாளிங்க மூணு பேரையும் பிடிச்சு கட்டிப்போட்டு வெச்சிட்டாங்க! அப்போதான் ஷேக்கு உள்ளே நுழையறாரு கொலை வெறியோட!<br /><br />இந்த மூணு பேரைப்பத்தி விசாரிச்சதும் வெறி ஜாஸ்தியாயுடுச்சு அவருக்கு!<br />ஒவ்வொருத்தருக்கும் தண்டனைய புதுமையா தரணும்னு முடிவு பண்ணாரு ஷேக்கு! மொதல் ஆசாமிய கூப்பிட்டு “என்ன வேலைல பாக்குறே” அப்படீன்னுருக்காரு! அதுக்கு அவன் போலிஸ் வேலைல இருக்குறதாச் சொன்னான்! ஒடனே ஷேக்கு அந்தப்புரத்துல இருக்குற ஒரு ராணிய கூப்பிட்டு அவனுக்கு “அந்த” இடத்துல சுட்டுக்கொல்லணும்னு உத்தரவு போடறாரு!<br /><br />அடுத்த ஆசாமிய கூப்பிட்டு இதே கேள்விய கேக்க, அவன் தான் ஃபையர் சர்வீஸ்ல இருக்கேன்னுருக்கான்! ஒடனே அவரு அவனுக்கு “அந்த” இடத்துல நெருப்பால எரிச்சு கொல்லணும்னு இன்னொரு ராணிய கூப்பிட்டு உத்தரவு போடறாரு!<br /><br />கடைசியா இருந்தவன் இதெல்லாத்தையும் பாத்துட்டு கெக்கெ பிக்கேன்னு சிரிச்சிக்கிட்டு இருந்தான்! ஷேக்குக்கு கோவம் பொத்துட்டு வந்தது! “என்னடா திமிரா? சாகப்போற உனக்கு சிரிப்பா இருக்குதா”ன்னு கேக்குறாரு! அதுக்கு அவன் சொல்றான்!<br /><br />“நான் லாலி பாப் சேல்ஸ் பண்றேன்”!<br /><br />--------------------------------------<br /><br />நம்மாளுங்க மூணு பேரு செத்தப்புறம் மேல் லோகத்துக்கு போறானுங்க! வாசல்ல எல்லா பேத்தையும் செக் பண்ணிட்டிருக்கிற சித்திரகுப்தன் மூணு பேரையும் விசாரிக்கிறான்! மொதல் ஆசாமிய பாத்து “நீ எப்படி? மனைவிக்கு துரோகம் செஞ்சியா” அப்படீன்னு கேக்குறாரு (அவருக்குத்தான் நோட் புக்குல எல்லா விஷயமும் இருக்குன்னு அதிகப் பிரசங்கித்தனமா கேக்கக்கூடாது! அப்புறம் இந்த ஜோக்குக்கு அர்த்தமே இருக்காது சாமி!). அதுக்கு அவன் “நான் கடைசி வரைக்கும் வேற பொண்ண ஏறெடுத்தும் பாக்கல! மனைவி செத்தப்புறம் கூட இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலைன்னா பாத்துக்கோங்க!” அப்படீங்கறாரு! ஒடனே சித்திரகுப்தன் சொர்க்க வாசல தெறந்து ”உள்ளே போங்க! அதோ நிக்குதே லம்பார்க்கினி! அத எடுத்து சொர்க்கத்துக்குள்ளே ஓட்டி எஞ்ஜாய் பண்ணுங்க” சொல்லி அனுப்பிடறாரு!<br /><br />அடுத்த ஆசாமிய இதே கேள்வி கேக்க அவரு அதுக்கு “நான் சின்ன வயசு! அப்படி இப்படீன்னு இருந்துட்டேன்! ஆனா கடைசி காலத்துல மனைவி மேல ரொம்ப அன்பா இருந்தேன்” அப்படீங்குறாரு! ஒடனே சி.கு. கேட்டத் தெறந்து உள்ளே இருக்கும் ஒரு அம்பாசடரை எடுத்துக்கோங்க! சொர்க்கத்துல ஓட்டி எஞ்ஜாய் பண்ணுங்க” சொல்லி அனுப்பிடறாரு!<br /><br />மூணாவதா வந்த ஆசாமிய இதே கேள்விய கேக்க அவன் ஜூ.வி.யில் வரும் “இவர்தான் உங்கள் ஹீரோவில்” வரும் ரேஞ்சுக்கு தன்னோட லீலைகள சொல்றாரு! சி.கு.க்கு ஒரே கோவம்! ஒரு ஓட்டை உடைசல் சைக்கிள கொடுத்து இதுதான் உனக்கு சொர்க்கத்துக்குள்ள ட்ரான்ஸ்போர்ட்ன்னு சொல்லி அனுப்பிடறாரு!<br /><br />கொஞ்ச நாள் கழிச்சு சி.கு. ரவுண்ட்ஸ் போகும்போது லம்பார்க்கினி ஆசாமிய பார்க்குறாரு! அவன் என்னடான்ன வண்டிய ஓட்டி எஞ்ஜாய் பண்ணாம டிக்கிக்கு மேல ஒக்காந்துட்டு அழுதுட்டு இருந்தானாம்! ஏண்டா ஒனக்குத்தான் நல்லவண்டிதானே கொடுத்திருக்கேனே! அப்புறமும் ஏண்டா அழுவுறேன்னு சி.கு. கேட்டாராம்! அதுக்கு அவன் சொன்னான்:<br /><br />“என் பொண்டாட்டி இப்பத்தான் ஸ்கேட்டிங் பண்ணீட்டு போறத பார்த்தேன்!”<br /><br />----------------------------------------------------<br /><br />குட்டிப்பய கோவிந்து ஸ்கூல் விட்டு வீட்டுக்குள்ளே நுழையறான்! தாவிப் பிடிச்ச அம்மாக்காரி என்னடா ரொம்ப சோகமா இருக்கேன்னு கேக்குறாங்க! அதுக்கு கு.கோ. “காத்தால பஸ்ல போகும்போது அப்பா நான் ஒக்காந்துட்டு இருக்குற சீட்ட ஒரு பொண்ணுக்கு கொடுக்கச் சொல்லிட்டாரு” அப்படீன்னு சொல்றான்! அதுக்கு அம்மாக்காரி “அதுல என்னடா தப்பு? பொம்பளைங்களுக்கு இடம் தந்தா தப்பில்லையே” சொல்றா! கோவிந்து கோவமா மொகத்த வெச்சிக்கிட்டு “அப்பா சொன்னது அவரோட மடி” அப்படீன்னு சொல்லிட்டு ஓடிப்போயிட்டான்!<br /><br />---------------------------------------------------<br /><br />“என்ன டார்லிங் நம்ம மேரேஜ் சர்ட்டிஃபிக்கேட்டையே நாலு மணிநேரமா பாத்துட்டு இருக்கீங்க! அதுல என்ன இருக்கு?” அப்படீன்னு பொண்டாட்டி கேக்குறாங்க! அதுக்கு கோவாலு சோகமா “எல்லாம் இருக்கு இதுல! ஆனா எக்ஸ்பைரி டேட் போட்டுருக்கானான்னு பாக்குறேன்”!<br /><br />-----------------------------------------------------ரவிஷாhttp://www.blogger.com/profile/04012491564649330999noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3350577975647976332.post-11778898714984651482009-08-24T09:34:00.000-07:002009-08-24T09:54:52.289-07:00கந்தசாமி! அடுப்புல வெந்த சாமி!அவனவன் கொரியப் படத்திலேருந்தும் இரானியப் படத்திலேருந்தும் கதைய உருவி உல்டா பண்ணி கொத்து பரோட்டா போடறானுங்கோ! இயக்குனர் சுசி கணேசனுக்கு என்ன கொணஷ்டை என்று தெரியவில்லை! சிங்கத்தின் தலைய சீப்பால வாருரேன்னு சொல்லி மொக்கையான ஒரு கதையை அதுவும் கடந்த பத்து பதினைந்து வருடங்களுக்குள் வந்த தமிழ்ப்படங்களிலேருந்தே கதையை சுட்டு ஒரு ஆஃப் பாயில் பண்ணியிருக்காரு!<br /><br />இந்த விமர்சனத்தை படிப்பதற்குள் வலையில் பலபேர் கதையை சொல்லியிருப்பார்கள்! அதனால் நான் சொல்லவேண்டிய அவசியம் இல்லையென்று நினைக்கிறேன்! தவிரவும் அப்படி ஒன்றும் சிலாகிக்கிற கதையும் இல்லை! புதிதாகவும் இல்லை! 20% ஜெண்டில்மேன், 20% ரமணா, 20% அந்நியன், 20% சிவாஜி, 20% சாமுராய் படங்களோட கதையை நல்லா மிக்சியில் ஒரு ஆட்டு ஆட்டி அதில் ஏடாக வந்த ஒரு கதைதான் கந்தசாமி!<br /><br />ஸ்ரேயாவுக்கு முன்னழகு இருந்ததோ தப்பித்தார்! இல்லெங்கில், பல சீன்களில் பாப் கட் செய்து கொண்டு பையன் மாதிரி வருகிறார்! தவிரவும் அவருக்கு கொடுத்த டப்பிங் வாய்ஸ் வயதுக்கு வரும் சிறுவனைப் போலவும் இருந்தது! சொல்லப்போனால் விக்ரம் தப்பித்தார்! இல்லாட்டி, கந்தசாமி ஹோமோவோ என்று பேஜாராகி இருந்திருப்போம்!<br /><br />படத்தில் கடைசியில் (கடைசியிலாவது) பிரபுவிடம் ஒருவர் சொல்கிறார் “அந்த ஒன்பது பேரும் சந்திப்பதே இல்லை!” என்று! ஆனால், படத்தில் காட்சிக்கு காட்சி நாம் பார்க்கும்போதெல்லாம் சந்திக்கிறார்கள்! தவிரவும் சி.பி.ஐ. என்றால்அடுத்தவரை மட்டுமே உளவு செய்யும் என்று சொல்லியிருப்பது இன்னொரு அபத்தம்! அதே போல், தடுக்கி விழுந்தால் ஸ்ரேயா விக்ரமின் ஆஃபிசுக்குள் நுழைகிறார், என்னமோ நம்ம சினிமா ஆசாமிகள் மு.க.வைப் பார்ப்பதுபோல!<br /><br />படத்தில் கந்தசாமி பறப்பதை லாஜிக்கலாக சொல்கிறேன் பேர்வழி என்று அதையும் ஜோக்காகி இருக்கிறார் சுசி! ஹீரோ மெக்சிகோ போகிறார்! ஆனால், ரஜினி மாதிரி “தரையிலே கால் படாமல்” ஹெலிகாப்டரிலேயே பறக்கிறார்! திடீர் திடீரென்று யார் யாரோ வருகிறார்கள்! சுடுகிறார்கள்! சாகிறார்கள்! ஹீரோவின் கண்ணை கட்டி உதைக்க வருகிறார்கள்! ஆனால் கண் தெரியாமல் இருக்கும் ஹீரோ சரியாக நகர்ந்துகொள்கிறார்! உதைக்க வரும்நபர்கள் மட்டும் சரியாக காற்றில் உதைவிட்டு விழுகிறார்கள்! நம் ஹீரோவுக்கு மட்டும் ஒன்றுமே ஆவதில்லை! போங்கடாங்.................<br /><br />வடிவேலு இண்ட்ரோ ஆகும் சீனில் மக்கள் சிரிக்கிறார்கள்! அப்போது மட்டும்தான் சிரிக்கிறார்கள்! மற்ற வடிவேலு சீன்களில் கப்சிப்! ரூட்ட மாத்து மாப்பு! இல்லேன்னா உனக்கும் வெச்சிடுவோம் ஆப்பு!<br /><br />சாதாரணமாய் பாடல்களின்போதுதான் மக்கள் வெளியில் போவார்கள்! இந்தப்படத்தில் சண்டைக் காட்சிகளின்போது கூட வெளியில் போவதை பார்க்க முடிந்தது!<br /><br />இசை தேவி ஸ்ரீபிரசாத்! ஓரிரு பாடல்கள் கேட்கும்படி இருக்கின்றன! மனிதருக்கு டிரம்ஸ் என்ற ஒரு கருவிமேல் ரொம்பவே மோகம் போல! போட்டு தாக்கு தாக்கு என்று தாக்கியிருக்கிறார்! படத்துக்காகவே ஒரு 100 டிரம்ஸ் செட்கிழிந்திருக்கும்போல!<br /><br />முக்கியமான ஒன்றை சொல்லவேண்டும்! DTS என்று ஒரு அருமையான டெக்னிக்கல் விஷயத்தை கெடுத்து குட்டிச்சுவராக்கிய ஆளுக்கு தண்டனையாக இரண்டு காதிலும் 500 டெசிபலுக்கு குறையாமல் ஹெட்ஃபோனில்நாராசமாக பாடல்களை ஒலிபரப்ப கடவது!<br /><br />அடுத்த முறை திருப்போரூர் கந்தசாமி கோவிலுக்கு போனால் “சாமி! இந்த மாதிரி மொக்கைப் படத்தை எடுப்பவனுக்கு தண்டனையா இதே படத்தை நான் ஸ்டாப்பாக 1000 முறை பார்க்க வை”ன்னு சீட்டு எழுதிப் போடலாம்னு இருக்கேன்!<br /><br />அறைகுறையான அளவில் கலந்த மசாலா, அளவு குறைந்த கதை, ஏகத்துக்கு சதை, மொத்ததில் ரொம்ப வதை என எல்லாத்தையும் போட்டு கிண்டின வஸ்து! மொத்ததில் கந்தசாமி, அடுப்புல வெந்த சாமி!ரவிஷாhttp://www.blogger.com/profile/04012491564649330999noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3350577975647976332.post-84644844121263612462009-08-11T12:58:00.000-07:002009-08-11T13:26:48.386-07:00கமல் 50.....<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEggJYj7X-OQEyWlETKxn2uth3SwHqBDZFfO362ebenkMUjamfLvjI0JBE-MEuQoEyGDT_fIq64aufW3KJmCnPqrltbpaB8xTx3ZsDrYjRhNPltwwl_yF_CKOrcnuXUo73sL5tDoipxlYyAS/s1600-h/kamal-hassan-poster.jpg"><img style="MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 190px; FLOAT: right; HEIGHT: 215px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5368805209264872754" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEggJYj7X-OQEyWlETKxn2uth3SwHqBDZFfO362ebenkMUjamfLvjI0JBE-MEuQoEyGDT_fIq64aufW3KJmCnPqrltbpaB8xTx3ZsDrYjRhNPltwwl_yF_CKOrcnuXUo73sL5tDoipxlYyAS/s400/kamal-hassan-poster.jpg" /></a><br /><div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQUoKOQH_K7Ct-12zQVzRGIvZO9hTwWHPNSd6lw0vW_vBuzFnxL_ZdwR_GSokUbdt7pTpsesujEWmpt2rD10VoLP7STwuqoQFtJjO36g6e9eoIMNj-0F_SsGvHjG3tDKtb2Xz_R_rTcn96/s1600-h/hassan-kamal-1.jpg"><img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 211px; DISPLAY: block; HEIGHT: 290px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5368805035529981522" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQUoKOQH_K7Ct-12zQVzRGIvZO9hTwWHPNSd6lw0vW_vBuzFnxL_ZdwR_GSokUbdt7pTpsesujEWmpt2rD10VoLP7STwuqoQFtJjO36g6e9eoIMNj-0F_SsGvHjG3tDKtb2Xz_R_rTcn96/s400/hassan-kamal-1.jpg" /></a><br /><br /><div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQ7IRsAmiNjqniVH6kQivlQiY1PJhN5-Jlsb1Wwg4lTkhFFzfj2BCj7vNYUaUhqdsracYQ1Hf7lmOfZU9avqVCaOpQilAGmKuiii52xOl7sCuRzicVNR9KBC8gTv1KwntCl4fc8Rs26uoh/s1600-h/hassan-kamal-1.jpg"></a><br /><br /><br /><div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjANWq3jMaqDfOVavwWddFu6zaLQzBoN_PJ25fyW0ZyF4Q81Nfjv8IXx_WJuWIz0ypdyM39Tp32j_2hP7UTF1HjZ9R5Yv0Aj8P2Or_7fNOj00G8u1pc-irLG_y52Q59OKdEeooVq43ScX-9/s1600-h/2647226210_9a58d11334.jpg"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 156px; FLOAT: left; HEIGHT: 209px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5368804466404162082" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjANWq3jMaqDfOVavwWddFu6zaLQzBoN_PJ25fyW0ZyF4Q81Nfjv8IXx_WJuWIz0ypdyM39Tp32j_2hP7UTF1HjZ9R5Yv0Aj8P2Or_7fNOj00G8u1pc-irLG_y52Q59OKdEeooVq43ScX-9/s400/2647226210_9a58d11334.jpg" /></a><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /><br /><div><br /><br /><br /><br /><div></div><br /><br /><br /><br /><br /><div>இன்று கமல் திரையுலகுக்கு வந்து 50 வருடங்கள் ஆகிறது! கமலின் நான்ஸ்டாப் இன்னிங்க்ஸுக்கு என்ன காரணம் என்று யோசிக்கவே தேவையில்லை! கீழே எழுதியிருக்கும் நிகழ்ச்சியை படித்தாலே கமலின் வெற்றிக்கு காரணத்தை புரிந்து கொள்வீர்கள்!<br /><br />என் மாமனார் அறுபதுகளிலும், எழுபதுகளிலும் நாடகத்தில் நடித்திருக்கிறார்! எண்பதுகளில் தூர்தர்ஷன் நாடகங்களிலும் நடித்திருக்கிறார்! இத்தனைக்கும் அவர் ஒரு பிரிட்டிஷ் கம்பெனியில் நல்ல ஒரு ஸ்டெனோ வேலையில் இருக்கும்போது பார்ட் டைமாக நடித்தது!<br /></div><br /><br /><br /><div><br />சுமார் 30-35 ஆண்டுகாலம் ஒரு துறையில் இருந்திருக்கிறாரென்றால் அனுபவத்திற்கு என்ன குறைச்சல் என்று நீங்கள் கேட்கலாம்! இல்லை நீங்கள் கேட்காவிட்டாலும் நான் விடுவதாக இல்லை! பின்னே? அவனவன் ஒரு வருஷமோ ஒன்றரை வருஷமோ ஜாவா கோவா என்று ஏதேதோ ஜல்லியடித்துவிட்டு அமெரிக்காவிற்கோ அல்லது பன்னாடை sorry பன்னாட்டு கம்பெனிக்கோ வேலைக்கு போகிறார்கள்! அப்படி போனவர்களே கும்மி அடிக்கும்போது நம்மாளுக்குஎன்ன குறைச்சல்?<br /><br />ஓ.கே.! முதலில் அவர் கூட நடித்தவர்களைப் பற்றி கொஞ்சம்!அறுபதுகளில் அவர் பல நாடகங்களில் நடித்திருந்தாலும், வி.எஸ். ராகவனின் ட்ரூப்பில்தான் நிறைய குப்பைகொட்டியிருக்கிறார்! (பல படங்களில் ஜட்ஜாக வந்து "சட்டத்த எப்படி கூண்டுல நிறுத்தமுடியும்? What are you talking?" என்று ஹீரோக்களைப் பார்த்து வசனம் பேசுவாரே, அவரேதான்!)<br /><br />இவர் கூட நடித்தவர்களில் முக்கியமானவர் கமல்! அட, நம்ம கமல் ஹாசன் தான்! அப்போது கமலுக்கு 14-15 வயது இருக்கும்! வருஷம் 68-69 என்று வைத்துக்கொள்ளுங்களேன்! கமலுக்கு அப்படி என்ன நாடகத்தின்மேல் மோகமோ இல்லை நன்றாக படிக்கச்சொல்லி வற்புறுத்துவார்களோ என்று தெரியவில்லை! படிக்கக்கூட போகாமல் நித்தம் டிராமா டிராமா என்று அலைவானாம் ஸாரி அலைவாராம்!கமல் என்ன என் மாமனார் மாதிரி சும்மாவா? அப்பா சேர்த்துவைத்த சொத்து! போதாக்குறைக்கு அண்ணன்கள் வேறு! குடும்பமே வக்கீல் குடும்பமாதலால் பயங்கர வசதி! தினமும் டிராமாவுக்கோ ரிஹர்சலுக்கோ காரில்தான் வருவாராம்! அதுவும் எப்படி? தன் அண்ணன்கள் யாராவது ஒருவர் தினமும் காரில்தான் கொண்டுவிடுவார்களாம்!<br /></div><br /><br /><div><br />Anyway, காரில் வந்தாலும் கமல் அலட்டமாட்டாராம்! ஏதாவது சிறு சிறு வேலைகள் செய்வாராம் சக நடிகர்களுக்கு!பலமுறை கமலின் அண்ணன் சந்திரஹாசன் கமலை கொண்டுவிடும்போதெல்லாம் சக நடிகர்களிடம் - என் மாமனார் உட்பட -சொல்வாராம் "சார்! இவன் படிக்காம டிராமா டிராமான்னு அலையறான்! நீங்கதான் இவனுக்கு புத்திமதி சொல்லி படிக்க சொல்லணும். இல்லன்னா உருப்படாம போயிடப்போறான்".அவர்களும் சொல்வார்களாம்! கமல் அதையெல்லாம் கேட்டுக்கொள்ளாமல் இருந்துவிடுவாராம்!<br /><br />ஒரு முறை என் மாமனார் ஏதோ இப்படி சொல்லப்போக, கமல் ஒரு response கொடுத்தாராம் "மாமா! நீங்களெல்லாம் என்ன ரொம்ப கிண்டல் பண்றீங்க! ஒரு நாள்இல்லை ஒரு நாள் நீங்க சொல்ற இந்த கமலஹாசன் 'ஆல் இண்டியா ஃபேமஸ் கமல் ஹாசன்' (ல்-இல்லில் ஒரு அழுத்தம்) ஆகப்போறேன் பாருங்க! அப்ப சொல்வீங்க".<br /><br />இப்போது சொல்லுங்கள்! இன்னும் ஒரு ஐம்பது தாங்குவாரா மாட்டாரா கமல்?</div><br /><div></div><br /><div></div><br /><div></div></div></div></div></div></div>ரவிஷாhttp://www.blogger.com/profile/04012491564649330999noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-3350577975647976332.post-65491568505636902072009-07-23T13:11:00.000-07:002009-07-23T13:30:22.536-07:00மாத்தி யோசிங்க ஸார்!இந்த வார துக்ளக்கில் வந்த சத்யாவின் நக்கல் கட்டுரை! அதை அப்படியே வெளியிடுகிறேன்!<br /><br /><strong>நன்றி: துக்ளக்</strong><br /><br /><br />இது போராட்ட சீஸனோ என்னவோ, பால் உற்பத்தியாளர்களில் தொடங்கி பல்வேறு தரப்பினரும் அரசுக்கு எதிராகப் போராடத் தொடங்கியுள்ளனர். ‘எந்தப் போராட்டமும் நியாயமல்ல’ என்ற உணர்வோடுதான், போராட்டக்காரர்களுக்கு அரசு பதில் சொல்லிக்கொண்டிருக்கிறது. அதற்காக நமது முதல்வர், அவர்களுக்கெல்லாம் எதிரானவர் என்று முடிவு கட்டி விடுவது நியாயமல்ல. கலைஞரின் போதாத நேரம், இப்போது அவர் முதல்வராக இருக்கிறார். அதனால்தான், போராடுபவர்களுக்கு எதிரான நிலையை எடுக்க வேண்டியிருக்கிறது. இப்போது நடப்பது மட்டும் ஜெயலலிதாவின் ஆட்சியாக இருந்தால், போராட்டக்காரர்களை ஆதரித்து அவர் எப்படியெல்லாம் வாதாடியிருப்பார் என்று யோசித்துப் பார்த்தால்தான் உண்மையைப் புரிந்துகொள்ள முடியும். அதற்காகத்தான் இப்படி மாற்றி யோசிக்கிறோம்.<br /><br /><strong>உடன்பிறப்பே,<br /></strong><br />இன்றைய தினம் சத்துணவுப் பணியாளர்களில் தொடங்கி சகல தரப்பினரும் அம்மையாரின் ஆட்சிக்கு எதிராகப் போராடும் அவல நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். அம்மையார் ஆட்சிக்கு வந்தாலே அக்கிரமங்கள் அணி வகுக்கும் என்பதை அறிந்திருந்தும், நன்றி கெட்ட தமிழன் சிந்திக்கும் அறிவை இழந்து, அவரை ஆட்சியில் அமர்த்தியதன் விளைவுதான் அடுக்கடுக்கானப் போராட்டங்கள்.<br /><br />இன்றைய தினம் போராடுபவர்கள் யார்? மிட்டா மிராசுதாரர்களா? உன்னைப்போல் கோடிகளில் புரளும் கோமான்களா? உன்னுடைய ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசிகள் உயர்ந்து விட்டதால், வறுமையை எதிர்த்து வாழ வழி தெரியாமல் வாடிக்கொண்டிருக்கும் கையினர்தானே? உழைப்புக்கேற்ற ஊதியத்தைக் கேட்கக் கூட உரிமையில்லையா, இந்த உன்மத்தர்களின் ஆட்சியில்?<br /><br />‘நான் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் போராடுகிறார்களே’ என்று ஒரு அங்கலாய்ப்பு வேறு. போராடாமல் என்ன செய்வார்கள்? அந்த லட்சணத்தில்தானே இருக்கிறது உன் ஆட்சி? உன் ஆட்சியில் போராடும் நிலை இருப்பது அவர்கள் குற்றமா? ‘போராடினால் பொதுமக்களின் ஆதரவு கிடைக்காது’ என்று சட்டமன்றத்திலேயே சாபமிடுகிறார் சண்டித்தனமாக. போராடுபவர்களும் பொதுமக்களின் அங்கம்தான் என்ற அடிப்படை அறிவைக் கூட இழந்து விடுகிற அளவுக்கு, ஆணவம் கண்ணை மறைக்கிறது ஆட்சியாளர்களுக்கு.<br /><br />அப்படி என்ன கேட்டு விட்டார்கள் அப்பாவிப் போராட்டக்காரர்கள்? பால் உற்பத்தி விலை பாதாளத்தில் இருக்கிறது என்று பலமுறை முறையிட்டும் பலனில்லை. அதை உயர்த்திக் கொடுங்கள் என்று உருக்கமாகக் கேட்டும் உதவ முன்வரவில்லை இந்த உதவாக்கரை சர்க்கார். பாடுபட்டு உழைக்கும் பால் வியாபாரிகள் மீது பரிதாபப்படாமல் பாய்ச்சல் காட்டுவது ஏன்? பருப்பு விலைகூட இன்றைய தினம் கிலோ ரூ.100 என்ற அளவில் விற்கப்படுகிறதே, இந்தப் படுபாவிகளின் ஆட்சியில். பருப்புக்கு ஒரு நீதி. பாலுக்கு ஒரு நீதியா? உற்பத்தி விலையை உயர்த்திக் கொடுக்காமல் அவர்களை உதாசீனப்படுத்துவது ஏன்?<br /><br />பரிதவிக்கும் பால் உற்பத்தியாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்த பாலை நடுத்தெருவில் கொட்டியது பாபமா? ‘ரத்தத்தைக் கண்டே பயப்படாத நான், பாலைக் கண்டா பயப்படுவேன்?’ என்று பரிகசிப்பது முறையா? எந்த அளவுக்கு மனம் நொந்திருந்தால், அவர்கள் பாலைக் கொட்டியிருப்பார்கள் என்று எண்ணிப் பார்க்காமல் ஏகடியம் செய்கிறார் எதேச்சாதிகார முதல்வர்.<br />அவல நிலையில் இருக்கும் அங்கன்வாடி ஊழியர்களும், சற்றொப்ப சாகும் நிலையை எட்டிவிட்ட சத்துணவுப் பணியாளர்களும் தங்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தால் கோபம் கொள்வது ஏன் கோமாளி ஆட்சி நடத்தும் இந்த கொடுங்கோல் அரசு? இதற்குக்கூட நிதி இல்லையா, இந்த நீலிக்கார ஆட்சியில்? பாராட்டு விழாக்களுக்கும், படப் பிடிப்பு நிகழ்ச்சிகளுக்கும் செலவிடும் பல கோடி ரூபாய் பணத்தில் ஒரு பகுதியை ஒதுக்கினாலே போதுமே. ஏன் மனம் வரவில்லை இந்த மாய்மால அரசுக்கு?<br /><br />போராட்டக்காரர்கள் உத்தமர் காந்தி வழியில் உண்ணாவிரதம் இருக்க முன்வந்தால் கூட, ‘போட்டி உண்ணாவிரதம் இருக்க எனக்கும் தெரியும்’ என்று எள்ளி நகையாடுவதும், எடுத்தெறிந்து பேசுவதும் எத்தனை நாளைக்கு எடுபடும்? எம் தமிழர்கள் என்ன அவ்வளவு ஏமாளிகளா? ‘லட்சம் பேரில் ஏழாயிரம் பேர்தானே போராடுகிறார்கள்’ என்று அற்ப மகிழ்ச்சி அடைகிறார் அகங்காரம் பிடித்த முதல்வர். அத்துணைபேருக்கும் அடையாளமாகத்தான், அந்த ஏழாயிரம் பேர் அணி வகுத்திருக்கிறார்கள் என்பதைக் கூட அறியாமல் அரைவேக்காட்டுத்தனமாக, அரற்றுகிறார்.<br /><br />முன்பு ஆட்சியில் இருந்தபோது ஊதியத்தை உயர்த்தினேனே, நன்றி இல்லையே என்று அங்கலாய்ப்பதில் என்ன அர்த்தம் இருக்க முடியும்? உன்னுடைய சொந்தப் பணத்தையா கொடுத்தாய்? அரசுப் பணத்தை அரசு பணியாளர்களுக்குக் கொடுப்பதற்கு, உனக்கு எதற்கு நன்றி சொல்ல வேண்டும் என்று கேட்கத் தெரியாதா நமக்கு?<br /><br />சகலருக்கும் சமச்சீர் கல்வி என்ற சாதாரணமான கோரிக்கையைக் கூட ஏற்று ஆணை வழங்க வழியில்லை இந்த வக்கற்ற ஆட்சியில். பள்ளிக்கூடங்களில் நன்கொடை என்ற பகற் கொள்ளையில் பங்கு கிடைக்கிறது என்பதால்தான், பதவியில் இருப்போர் அதைப் பார்த்தும் பாராமுகமாக இருக்கிறார்கள் – என்பது பலரும் அறிந்ததுதான். அந்தக் கொள்ளைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கொடி பிடித்து வந்த மாணவர்களை தடி கொண்டு தாக்கி, குருதி வெள்ளத்தில் தள்ளி, குறுக்கு சால் ஓட்டியது ஏன் இந்தக் குணம் கெட்ட ஆட்சி?<br /><br />எந்தப் போராட்டத்திற்கும் விதி உள்ளது என்று விந்தையாக வியாக்கியானம் செய்கிறார் விவஸ்தை கெட்ட முதல்வர். விலாநோகச் சிரிக்க மாட்டார்களா விபரம் அறிந்தோர்? அனுமதி இல்லாமல் நுழைந்துவிட்டார்கள் என்று அறிக்கை விடுகின்றனர் ஆட்சியாளர்கள். அனுமதிக்க மறுத்தது யார் குற்றம்? தமிழகத் தலைமை செயலகத்திற்குள் நுழைய தமிழன் அனுமதி வாங்க வேண்டும் என்ற ஆணவ அரசியலைக் கூட எந்த ஏடும் கண்டிக்கவில்லை. அவ்வளவு அச்சம் ஆள்வோரிடம்.<br /><br />அன்றாடம் ஆட்டோ ஓட்டி அல்லல்படும் அடிமட்டத் தொழிலாளர்கள் பெரும் சுமையான பெட்ரோல், டீஸல் விலை உயர்வைத் தாங்க முடியாமல் தவிக்கின்றனர். அவற்றை மான்ய விலையில் வழங்கும்படி மன்றாடுவது மாபெரும் குற்றமா? அதைக் கூடச் செய்யத் தயங்குவது ஏன் இந்த தரம் கெட்ட அரசு? அவர்களை அழைத்துப் பேச மறுத்து அழிச்சாட்டியம் செய்வது ஏன்? பெட்ரோலியத்துறை அமைச்சரோடு பேசுவதற்கு நேரம் இருக்கிறது. ஆட்டோ ஓட்டுநர்களை அழைத்துப் பேச அவகாசம் இல்லையா? உன்னுடைய கூட்டணி ஆட்சிதானே நடைபெறுகிறது மத்தியில்? பெட்ரோல், டீஸல் விலையை உயர்த்தக்கூடாது என்று நீ தடுத்து நிறுத்தியிருந்தால், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இந்த அவல நிலை ஏற்பட்டிருக்குமா?<br /><br />தேர்தல்தான் முடிந்து விட்டதே – இனி நம்மை ஆட்சியிலிருந்து அகற்ற யாரால் முடியும் என்ற அகந்தைதானே ஆட்டோ ஓட்டுனர்கள் அலட்சியப்படுத்தப்படுவதற்குக் காரணம்? சொகுசு பஸ்கள், எக்ஸ்பிரஸ் பஸ்கள் என்ற பெயரில் மறைமுகமாக பஸ் கட்டணத்தை உன் அரசு உயர்த்துவதைப் போல, ஆட்டோ டிரைவர்களும் சொகுசு ஆட்டோக்கள், எக்ஸ்பிரஸ் ஆட்டோக்களை ஓட்டி கட்டணத்தை உயர்த்திக்கொள்ளவாவது வழியிருக்கிறதா இந்த ஆட்சியில்? அதுவும் இல்லை! போராடுவதைத் தவிர அவர்களுக்கு வேறு என்னதான் வழியிருக்கிறது?<br /><br />மருத்துவக்கல்லூரி பயிற்சி மாணவர்கள் உயிரைத் துச்சமாக மதித்து, மடியும் வரை உண்ணாவிரதம் தொடங்கியபின், சட்டமன்றத்தில் நம்மைப் போன்ற எதிர்க்கட்சிகள் அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்ததையடுத்து, வேறுவழியின்றி பணிந்து அவர்களது ஊதியத்தை ஓரளவுக்கு உயர்த்தி இருக்கிறது இந்த அரசு. இந்த அறிவு ஏன் முதலிலேயே இல்லாமல் போய் விட்டது?<br /><br />இளைஞர்களின் இன்னுயிருக்கு இன்னல் விளைவிப்பதில் அப்படியென்ன இன்பம் இந்த இரக்கமற்ற அரசுக்கு? போராட்டங்களை எதிர்க்கட்சிகள்தான் தூண்டிவிடுகின்றன என்று ஒரு புலம்பல். உரிமைக்குக் குரல் கொடுப்போம் என்பது அண்ணா கண்டெடுத்தக் கொள்கை. அது தவறு என்றால் அந்தத் தவறைத் தொடர்ந்து செய்ய தயங்க மாட்டான் இந்தக் கருணாநிதி. போராட்டங்களை நடத்துவதும், ஆதரிப்பதும் எனக்குப் புதிதல்ல. என் வாழ்க்கையே போராட்டம்தான்.<br /><br />ஆட்சியில் இருப்போரின் அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து, மருத்துவக்கல்லூரி மாணவர்கள் தொடை நடுங்கிப் போய், தாங்கள் தொடங்கிய போராட்டத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டதில் நமக்கு எந்தவித அட்டியுமில்லை.<br />ஆனால், உடன்பிறப்பே, என் னுடைய ஆட்சியாக இருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா? நான் எப்போதாவது இப்படியெல்லாம் காட்டாட்சி நடத்தியிருக்கிறேனா? வேண்டுமா இப்படியொரு வெட்கக்கேடான ஆட்சி? அப்புறப்படுத்த வேண்டாமா இந்த ஆணவம் பிடித்த அரசை? சிந்தித்துச் செயல்படு.<br /><br />அன்புள்ள,<br />மு.க.ரவிஷாhttp://www.blogger.com/profile/04012491564649330999noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3350577975647976332.post-83349984589216925562009-07-14T14:17:00.000-07:002009-07-14T14:18:22.512-07:00இது எப்படி இருக்கு?<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj7CRVe_pgjkTIMKnG23ouAcUfuAE4QM_27fOlgsWeJw6lQG6nr0asC51TFAI_eEKHYECsDIBq16Zpp4Y9gXJKQDHwcws6H73EbCsB9R-B35FmX748iBFwQNRCwFWrrTNZkYtFk3Lfsw9bm/s1600-h/8df8187297e7169fc494023.jpg"><img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 345px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5358428231123171554" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj7CRVe_pgjkTIMKnG23ouAcUfuAE4QM_27fOlgsWeJw6lQG6nr0asC51TFAI_eEKHYECsDIBq16Zpp4Y9gXJKQDHwcws6H73EbCsB9R-B35FmX748iBFwQNRCwFWrrTNZkYtFk3Lfsw9bm/s400/8df8187297e7169fc494023.jpg" /></a><br /><div></div>ரவிஷாhttp://www.blogger.com/profile/04012491564649330999noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3350577975647976332.post-41398929099399548982009-06-25T15:24:00.001-07:002009-06-25T15:39:11.743-07:00மைக்கேல் ஜாக்சன் மரணம்!<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhqkDjvZAQSswkZl0zwzlSzt6qZdBWftp5HEy9cuBNfmw20DekwWNE5-vVxtfJEWwqP0TME0fQy61kcDd6GPUeeYAmTS25uWUBZgELPM3_hUmE_QOg3OuQJaWZv-qT9uXCpySPFZ8Aio609/s1600-h/r717844450.jpg"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 213px; FLOAT: left; HEIGHT: 263px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5351398440321222898" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhqkDjvZAQSswkZl0zwzlSzt6qZdBWftp5HEy9cuBNfmw20DekwWNE5-vVxtfJEWwqP0TME0fQy61kcDd6GPUeeYAmTS25uWUBZgELPM3_hUmE_QOg3OuQJaWZv-qT9uXCpySPFZ8Aio609/s400/r717844450.jpg" /></a><br /><div></div><br /><div></div><br /><div>இன்று (ஜூன் 25 2009) மதியம் சுமார் மூன்று மணி (பசிபிக் நேரப்படி) அளவில் மைக்கேல் ஜாக்சன் மரணம் அடைந்தார்!<br /><br />மதியம் 2:30மணிக்கு அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது! ஆனால், மருத்துவர்கள் வந்து நாடி பார்க்கும்போது மூச்சும் இல்லை நாடியும் இல்லை! இருந்தாலும் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்! அங்கு போராடியும் பயனில்லாமல் மரணம் அடைந்தார்!<br /><br />பாப் உலகின் கிங் என்று அழைக்கப்படும் மைக்கேல் ஜாக்சனுக்கு 50 வயது!</div>ரவிஷாhttp://www.blogger.com/profile/04012491564649330999noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3350577975647976332.post-65198637890895305262009-06-22T11:42:00.001-07:002009-06-22T11:43:31.218-07:00எங்கேயோ படித்தது!படிக்க தமாஷாக இருந்தது:<br /><br /><br />When a panel of doctors was asked to vote on adding a new wing to their hospital, the<br />Allergists voted to scratch it and the Dermatologists advised against rash moves.<br /><br />The Gastroenterologists had a gut feeling about it, but the Neurologists thought the administration had a lot of nerve, and the Obstetricians stated they were all labouring under a misconception.<br /><br />The Ophthalmologists considered the idea short-sighted, the Pathologists yelled, "Over my dead body", while the Pediatricians said, "Grow up!"<br /><br />The Psychiatrists thought the whole idea was madness, the surgeons decided to wash their hands of the whole thing and the Radiologists could see right through it!<br /><br />The physicians thought it was a bitter pill to swallow, and the Plastic Surgeons said, "This puts a whole new face on the matter."<br /><br />The Podiatrists thought it was a step forward, but the Urologists felt the scheme wouldn't hold water. The Anesthesiologists thought the whole idea was a gas and the Cardiologist didn't have the heart to say no.<br /><br />In the end, the Proctologists left the decision up to some butt hole in Administration.ரவிஷாhttp://www.blogger.com/profile/04012491564649330999noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3350577975647976332.post-20333757027131756102009-06-16T15:55:00.000-07:002009-06-16T15:57:40.672-07:00அமெரிக்க டீன் ஏஜர்களின் பொது அறிவு!போன மாதம் ஒரு நாள் நான் ஆஃபிஸ் போய்க்கொண்டிருந்தபோது எதேச்சையாக ஒரு ரேடியோ ஸ்டேஷனை ட்யூன் செய்தேன்! சாதாரணமாக தமிழ் சினிமா பாட்டுக்கள்தான் கேட்டுக்கொண்டு போவேன்! அன்று ஏதோ ஒரு நினைப்பில் ரேடியோ போட்டேன்!<br /><br />அப்போது அந்த ஸ்டேஷனில் லோக்கல் ந்யூஸ் என்று ஆரம்பித்தார்கள்! பிறகு ஆர்.ஜே.க்கள் அவர்களுக்குள்ளேயே ஜோக் அடித்துக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தார்கள்!அப்போது ஒருவர் சொன்னார் டல்லாஸில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் (ஹை ஸ்கூல் என்பது நம்மூர் +1 +2 மாதிரி)! சீனியர்கள் (+2 படிப்பவர்கள்) இனிமேல் செல் ஃபோன் எடுத்துக்கொண்டு போகக்கூடாது! குறிப்பாக வகுப்புக்குள் செல் ஃபோன் அனுமதியில்லை என்று சொல்லிக்கொண்டு வந்தார்கள்! கூடவே அந்தப் பள்ளியில் படிக்கும் சீனிய்ரகளையும் பேட்டி எடுத்ததை ஒலிபரப்பினார்கள்!<br /><br />இதில்தான் காமெடியே! ஒரு மாணவன் “இது அநியாயம்! அக்கிரமம்! செல் ஃபோன் இல்லையென்றால் எங்கள் அப்பா அம்மாவிற்கு நான் எங்கே இருக்கிறேன் என்று எப்படி சொல்வது?”என்று கேட்டான்! அவன் கேட்டதில் நியாயம் இருக்கிறது! போகட்டும்! அடுத்து வந்த ஒரு மாணவி சொன்னதுதான் காமெடி! “அய்யோ! எனக்கு கடிகாரத்தில் மணி பார்க்கவே தெரியாது! செல் ஃபோனில் மட்டும்தான் மணி பார்க்கத்தெரியும்! இனிமேல் நான் எப்படி மணி பார்த்து வீட்டுக்குப் போவேன்?” என்று கேட்டாள் பாருங்கள்!<br /><br />இது இப்படி இருக்கிறதா? அந்தப் பள்ளியின் லைப்ரரியில் ந்யூஸ் பேப்பர்கள் வரவழைத்து படிக்க வைக்கப் போகிறார்கள் என்று ந்யூஸ் சொல்லிவிட்டு அது ஏன் என்றால் மாணவர்களிடம்படிக்கும் பழக்கம் குறைந்துவிட்டதற்காக என்றும் சொன்னார்கள்! அதைப் பற்றி ஒரு சீனியர் மாணவன் சொன்னது “அடக் கடவுளே! ந்யூஸ் பேப்பரில் செய்தியெல்லாம் கச்சாமுச்சாவென்று இருக்குமே! தவிரவும் அதைப் பக்கம் பக்கமாக புரட்டவேண்டுமே? அதன் ஃபார்மேட்டே தப்பு! அது எனக்கும் பிடிக்காது!” என்று சொன்னான் பாருங்கள்!<br /><br />ஆர்.ஜே.க்களுடன் ரேடியோ கேட்டுக்கொண்டிருந்த நானும் விழுந்து விழுந்து (காரை விட்டு அல்ல) சிரித்தேன்!ரவிஷாhttp://www.blogger.com/profile/04012491564649330999noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3350577975647976332.post-5364944345787869862009-06-10T09:43:00.000-07:002009-06-10T09:45:49.483-07:00ரஹ்மானுடன் முதல் சந்திப்பு!<p>ரஹ்மானை சந்தித்தது ரொம்ப வித்தியாசமான அனுபவம்! "காதலன்" படம் வந்த புதிதில் அவரை பார்த்தது!அப்போதெல்லாம் முக்கால்வாசி பேர் அவரை திலீப் என்றுதான் கூப்பிடுவார்கள்! நான் முன் குறிப்பிட்ட வட இந்திய பத்திரிக்கை நிருபர், என் சித்தப்பா + நான்! மூவரும் வட பழனியில் உள்ளசுப்பையா நகரில் உள்ள ஏ.ஆர். ரஹ்மானின் வீட்டிற்கு போனோம்! </p><p>முதலில் எங்களுக்கு அவர் வீடு தெரியாத்தால் வழியில் விசாரித்துக்கொண்டுதான் போனோம்! பல பேர்களுகு அவர் வீடு தெரியவில்லை (1994-இல்)! ஒரு வழியாகபோய் சேர்ந்தால் வாசலில் பெரிய இரும்பு கேட். Sentry-இல் பல தடியாட்கள் உள்ளே விடமாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள்! கடைசியில் நிருபர் தன் அடையாள அட்டையை காண்பித்ததும் உள்ளே விட்டார்கள்!அப்போது அவர் வீட்டில் வரவேற்பறை என்று ஒன்று ஸ்பெஷலாக ஒன்று கிடையாது! அவர் ஆஃபிஸ் ரூமிலேயே காத்திருந்தோம்! நாங்கள் போனது ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம்! உள்ளே விடும்போதே "அவர் இப்போதான் எழுந்திரிச்சிருக்காரு! கொஞ்சம் வெயிட் பண்ணவேண்டியிருக்கும்!" என்றுதான் சொல்லி அனுப்பினார்கள்! அதனால் அங்கேயே உட்கார்ந்து நாங்கள் மூவரும் பேசிக்கொண்டிருந்தோம் ("What a contrast? அங்கே ராஜாகாலை 8:30 - 5:00 வேலை செய்யறார் ஆஃபிஸ் கணக்கா! இங்கே என்னடான்னா திருடன் மாதிரி ராத்திரி வேலைசெய்யறான்" என்றெல்லாம் பேசிக்கொண்டோம்)! </p><p>கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் கழித்து குள்ளமாக ஒல்லியாகவும் இல்லாமல் குண்டாகவும் இல்லாமல் ஒரு இளைஞன் பச்சை கலர் Lacoste டீ ஷர்ட்டுடன் நீல கலர் ஜீன்ஸுமாக - செருப்பு போட்டுக்கொள்ளாமல் - உள்ளே நுழைந்தான் சாரி நுழைந்தார்! கையை குலுக்கி "நான் தான் ரஹ்மான்!" என்றார்! எங்களுக்கெல்லாம் தூக்கி வாரி போட்டது! அது வரை ஃபோட்டோவில்தான் பார்த்திருக்கிறோம் அவரை! இவ்வளவு குள்ளமா (கவனிக்க: ராஜாவும் குள்ளம்தான்!யுவனும் குள்ளம்தான்!) யதார்த்தமா இருக்கிற ஒருத்தரா தமிழ் இசை உலகை திடீரென்று கலக்கிக்கொண்டிருக்கிறாரா என்று ஒரே ஆச்சர்யம்! அதுவும் சினிமா உலகில் ஒரு ஹிட்டுக்கே பந்தா செய்யும் நிலையில் இந்த ஆள் சர்வசாதரணமாக பேசுகிறார். அதுவும் நுனிநாக்கு ஆங்கிலத்தில்! படித்த ஆளுக்கு இங்கே என்ன வேலை என்றெல்லாம்பிறகு பேசிக்கொண்டோம்! Anyway... அவர் எங்களை உள்ளே கூப்பிட்டுக்கொண்டு போனார்! அதுவும் ஒரு பெரிய ஹால் மாதிரிதான் இருந்தது! நாங்கள் எங்கிருந்து வருகிறோம் ஏதாவது சாப்பிடறீங்களா என்று கேட்டுவிட்டு intercom-இல் யாரையோகூப்பிட்டு எங்களுக்கு காஃபி தரச்சொன்னார்! கொஞ்ச நேரம் பேசிவிட்டு "Interview-ன்னா இன்னொரு நாள் வாங்க!இப்போ எனக்கு வேலை இருக்கு!" என்றார்! எப்போது வருவது என்று கேட்டதற்கு "அடுத்த வாரம் வாங்களேன்!"என்றார்! அடுத்த வாரமும் போனோம்! ஆனால் ஒன்றை மறந்துவிட்டோம்! அது பிறகு.......</p>ரவிஷாhttp://www.blogger.com/profile/04012491564649330999noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3350577975647976332.post-48047300224242200462009-06-09T11:41:00.000-07:002009-06-09T11:44:47.806-07:00யுவன் ஒரு Ass Hole!என்னடா இவன் அப்பாவைப் பத்தி எழுதிட்டு பையனைப் பத்தி வேற எழுதப்போறானான்னு தெறிச்சு ஓடறத்துக்கு முன்னாடி....<br /><br />யாராவது யுவனை நேராகப் பார்த்தால் ஓங்கி பளாரென்று ஒரு அறை விடுங்கள்! இல்லையென்றால், அட்லீஸ்ட் ஒரு ஷூவையாவது வீசுங்க! அந்த பன்னாடை பரதேசிக்கு ஏதாவது புத்தியாவது வரட்டும்!<br /><br />பின்ன என்னங்க? “பட்டியல்” படத்துல வர்ற “போகப் போக பூமி தெரிகிறதே” பாட்டின் ஆரம்பத்தில் ஒரு Rap பிட்டை வைத்திருப்பார்! “ர்” என்ன, “ன்”! அது "Soul Train"போன்ற ஆல்பத்தில் இருந்து சுட்ட மாதிரி இருக்கும்! அதை விடுங்கள்! சுட்டால் கூட பெரிய விஷயமில்லை! ஆனால் அந்த பிட்டில், ஆங்கில வரிகளில் ச்சும்மா புகுந்து விளையாடியிருப்பான் அவன்! அதில் ஒரு வரியில் “Your ass real fast! Legs like chicken!" என்றெல்லாம் கூட வரும்!<br />“Ass" என்றால் சுத்தத்தமிழில் “ஆசனவாய்” அல்லது “குண்டி”என்று அர்த்தம்!<br /><br />சரி, ஏதோ அவனுக்கு இங்லீஷ் தெரியாதுன்னு சும்மா இருந்துட்டோம்! ஆனா பாருங்க, “சென்னை 600008” படத்துல, “வாழ்க்கைய யோசிங்கடா” பாட்டை<br />ரீ-மிக்ஸ் பண்ணியிருப்பான்! அதுலதான் சூட்சுமமே இருக்கு! அந்தப் பாட்டுல, நடு நடுல சும்மா இருக்கட்டுமேன்னு “...த்தா” அப்படின்னெல்லாம் அடிச்சு விட்டிருக்கான்! அதுவும் கடைசீல, பாட்டு முடியும்போது கேட்டீஙகன்னா, பிரேம்ஜி சொல்றான் “This is 2007! Deal with it. Biatch!"! அதாவது, “இது 2007ம் வருஷம்! அப்படித்தான் சொல்லுவோம்! கேட்டுத்தொலைங்கடா பெண் நாய்களா (அல்லது) விலைமாதர்களா”! என்ன தைரியம் அந்தப்<br />பன்னாடைக்கு?<br /><br />அய்யா! நான் சின்னப் பையன் இல்ல கொஞ்சம் பெரியவந்தான்! ஆனா, எந்தக் காலத்திலும் யாரும் அந்த மாதிரி கெட்ட வார்த்தைங்கள சொல்ல கூச்சப்படுவாங்க! கஷ்டப்பட்டு கூலி வேலை செய்யும் ஆசாமிகள் கூட தன் பிள்ளைகளை “...தா ..ம்மா” என்று பேசும் கும்பலிடம் சேர்க்கவிடாமல் வளர்ப்பார்கள்! இப்போ என்னன்னா, படிச்ச நாய்களே இப்படி கேவலமா சொல்லிட்டு திரியுதுங்க!<br /><br />அந்த் கம்முனாட்டிங்க என்னத்தப் படிச்சானுங்களோ?ரவிஷாhttp://www.blogger.com/profile/04012491564649330999noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-3350577975647976332.post-22776266072354079062009-06-05T09:17:00.000-07:002009-06-05T09:21:14.129-07:00மொட்டை என்கிற ம்யூசிக்கல் ஜீனியஸ்என்னடா எல்லாரும் நம்ம ம்யூசிக்கல் தலையைப் பத்தி எழுதறாங்க நாமளும் எழுதனுமேன்னு வந்தது இந்த போஸ்ட்! அது சரி, அடுத்தவங்களெல்லாம் எழுதறாங்கன்னா அவங்களுக்கு சங்கீத ஞானம் கொஞ்சமாச்சும் இருக்கும்போல! நமக்கெல்லாம் அவ்வளவு இல்லென்னாலும் சில விஷயங்களை புரிஞ்சிக்க முடியுதுங்க!<br /><br />பாருங்களேன்! இப்படித்தான் சமீபத்தில் அதாவது 1984-இல் (டோண்டு ராகவனின் பழக்கும் எனக்கும் தொத்திக்கிட்டது போல) நான் +1-வது படிக்கையில் என் சித்தப்பா ஒரு ஆடியோ காசெட்டை கொண்டுவந்து கொடுத்தார்! அப்போதுதான் ஃக்வார்டெர்லி எக்ஸாம் முடிந்த சமயம்! அப்போதெல்லாம் ஸ்டீரியோ ஃபார்மேட்டில் பாட்டு வேணும்னா நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு ஆடியோ கடையில்தான் காசெட் ரெக்கார்டிங் செய்வார்கள் (ஸ்டிரியோவிஷன்)! அந்த காசெட்டில் இருந்த பாட்டுக்கள் எல்லாம் ரிலீஸ் ஆகாத பாட்டுக்கள் என்று வேறு சொல்லிக் கொடுத்தார்களாம்! அதனால் எனக்கு anxiety அதிகமானது! A-சைடில் ரீவைண்ட் செய்து போட்டேன்! முதல் பாடலே ஒரு மாதிரி இருந்தது! என்னவோ “வானிலே தேனிலா” என்றெல்லாம் பாடியது! ஆனால் அந்தப் பாட்டில் ஏதோ ஒன்று சரியில்லை அல்லது வித்தியாசமாக இருக்கிறது என்று மட்டும் தெரிந்தது! ஆனால் அந்தப் பாடல் எல்லாம் “காக்கிச் சட்டை” படத்தில் வருமென்றெல்லாம் தெரியாது எனக்கு அப்போ!<br /><br />எதற்கு சொல்கிறேன் என்றால்! 1985 ஏப்ரலில் அந்தப் படம் வெளிவந்தபோது “ஒளியும் ஒலியும்” நிகழ்ச்சியில் போட்ட ஒரு பாட்டு எங்கேயோ கேட்டமாதிரி இருக்கேன்னு பாத்தால், நம்ம கிட்டே ரொம்ப மாசத்துக்கு முன்னமேயே வந்த காசெட்டில் இருந்துருக்கிறது! இதை என் நண்பனிடம் சொன்னபோது என்னை ”ஏண்டா முன்னமேயே சொல்லலை” என்று உதைக்காத குறையாக திட்டி வாங்கிக்கொண்டு போனான்!<br /><br />சரி, விஷயத்துக்கு வருவோம்! “வானிலே தேனிலா” பாட்டை நான் பலமுறை கேட்டிருக்கிறேன்! என்னிடம் ஒரு ஓட்டை உடைசல் வாக்மேன் இருந்தது! அதில் பேட்டரி தீரும் வரை அந்தப் பாட்டையே சுமார் 30 வாட்டிகேட்டிருக்கிறேன்! அப்போதுதான் புரிந்த்து ரெண்டு விஷயம்!<br /><br />மொதல் விஷயம் என்னன்னா! சாதரணமா, ரிதம் பீட் அடிக்கும்போது, தாளக்கட்டில் நான்கோ அல்லது எட்டோ முறை அடிக்கவேண்டும்! அதுதான் சாதரணமாக எல்லோரும் பின்பற்றுவது! ஆனால், நம்ம மொட்டை, அதை மூன்றாக்கியிருப்பார் பாருங்கள்! சூப்பர்! அதாவது “ட ட ட டா” என்று அடிக்காமல் “ட்டா ட டா” என்று அடித்துருப்பார்! அதாவது மொதல் பீட்டையும் ரெண்டாவது பீட்டையும் சேர்த்த மாதிரி அதே சமயம் இரண்டு மாத்திரையில் அடிக்காமல் ஒன்றரை மாத்திரையில் அடித்திருப்பார்! எனக்குத்தெரிந்து மொட்டையின் பாடல்களில் வெளிவந்த முதல் இலக்கண மீறல் என்று நினைக்கிறேன்!<br /><br />இரண்டாவது விஷயம் என்னன்னா, சாதரணமா, டிரம்ஸ் பீட்டுடன் “ஹை கேப்” என்று சொல்லக்கூடிய டிரம்ஸ் செட்டில் இருக்கும் ஸ்டேண்டு போட்டார்போல இருக்கும் வட்ட இரும்பு தட்டை சேர்த்து தட்டுவார்கள்! சில சமயம் பீட்டை நிரப்புவதற்கும் அதை தட்டுவார்கள்! நம்ம ஆளு, என்ன பண்ணுவார்னா, டிரம்ஸில் ரிதம் பீட்டை வாசித்தால் பாடல் ரொம்ப “hard rock " ஆகிவிடும் என்று bango-வில் ஒரு ஆள் வாசிக்க, இன்னொரு ஆள், “ஹை கேப்பில்” குச்சியால் கூட தட்டி கொஞ்சம் “சாஃப்ட் ராக்” ஸ்டைலில் தட்டுவார்! அது கெடக்கட்டும்! நம்ம “வானிலே தேனிலா” பாட்டை கேட்டீங்கன்னா, ஆரம்ப பல்லவி, அனுபல்லவியில் ட்ரம் பீட்டுடன் “ஹை கேப்” சத்தம் ஒன்றாக கேட்கும்! முதல் “ஸ்டான்ஸா” முடிந்தபிறகு திரும்பி “வானிலே தேனிலா” பாடும்போது கேட்டீங்கன்னா ட்ரம் பீட் முதலில் வரும், அதைத் தொடர்ந்து சுமார் .1 மாத்திரையில் “ஹை கேப்” சத்தம் கேட்கும்! சரி, இப்படித்தான்னு நெனச்சீங்கன்னா, இரண்டாவது “ஸ்டான்ஸாவில்” முடிந்து “வானிலே தேனிலா” பாடும்போது “ஹை கேப்” சத்தம் முதலில் வரும்பிறகு .1 மாத்திரையில் ட்ரம் பீட் வரும்!<br /><br />ஒரு வேளை, பாட்டில் ஒண்ணும் விஷயம் இல்லைன்னுதான் ஏதாவது வித்தியாசமா இருக்கணும்னு மொட்டை அப்படி செஞ்சாரோ, தெரியாதுங்க! ஆனா, அந்தப் பாட்டை இன்னொரும் வாட்டி கேட்டிங்கன்னா ஏதோ ஒண்ணு ரெண்டு வித்தியாசமா இருக்கறத பாக்கலாம்!<br /><br />இதே உத்தியை “தென்றலே என்னைத் தொடு” படத்தில் வரும் “கவிதை பாடு குயிலே குயிலே” பாட்டிலும் செய்திருப்பார்!<br /><br />சும்மாவா சொன்னாங்க? அவரு ஒரு ஜீனியஸ்னு?ரவிஷாhttp://www.blogger.com/profile/04012491564649330999noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-3350577975647976332.post-30464330381479846542009-06-04T16:01:00.000-07:002009-06-04T16:04:58.624-07:00ரஜினியின் வேகம்!சமீபத்தில் (அதாகப்பட்டது 2008’ல்) நான் பதிந்த “கமலில் வைராக்கியம்” பற்றி சில பேர் மேலும் எழுதச்சொன்னதால், என் மாமனாரின் அனுபவங்களை மேலும் சொ(கொ)ல்கிறேன்!<br /><br />பிந்தைய பின்னூட்டத்தில் நான் குறிப்பிட்டதுபோல என் மாமனார் எழுபதுகளின் கடைசியிலும் எண்பதுகளின் ஆரம்பங்களில் பல படங்களில் நடித்திருகிறார் (”நிறுத்துங்க இந்த சடங்கை” என்று ஹீரொ உடம்பு முழுதும் ரத்தகாயங்களுடன் நொண்டிக்கொண்டு வரும்போது, “இந்த சம்பந்தமே வேண்டாம் வாடா” என்று இதற்கேன்றே இருக்கும் ராஜக்களின் / சூரியகுமார்களின் / அப்பாஸ்களின் அப்பாவாக வருவார்வகளே!! அந்த மாதிரி ரோல்கள்! இல்லை சில சினிமாக்களின் டாக்டராக வந்து ஹீரோவின் அம்மாவுக்கோ அல்லது அப்பாவுக்கோ ஊசி போடும் ரோல்கள்!)! இப்படி சின்னச்சின்ன வேடங்களில் நடித்ததால் அவர் பலபெரிய ஹீரோக்களுடன் நடித்துவிட்டார்! கமல், ரஜினி, சிவகுமார், லக்ஷ்மி, சரிதா போன்றவர்களுடன்!<br /><br />ரஜினியின் ஆரம்ப காலத்தில் (79/80/81/82) அவருடன் சில படங்கள் செய்திருக்கிறார்! ரஜினி தனக்கு ஷாட் இல்லை என்று தெரிந்தால் செட்டை விட்டு போகமாட்டாராம்! அங்கேயே எங்காவது ஓரமாகபடுத்துவிடுவாராம்! அப்படித்தான் சிவப்பு சூரியன் படத்தில் நடிக்கும்போது செட்டின் ஓரத்தில் தூங்க்கிய ரஜினியை ஒரு லைட் பாய் ரஜினி என்று தெரியாமல் ஒரு உதை விட்டு “எழுந்துருடா! வேலை நேரத்துலஎன்ன தூக்கம்?” என்று சக லைட்பாய் என்று நினைத்து திட்டினாராம்! நம்ம ரஜினிக்கா கோபம் வரும்! சாரி என்று சொல்லிவிட்டு வேறு இடத்தில் போய் தூங்கிவிட்டாராம்!<br /><br />அதே போல, இன்னொரு சமயம், ஒரு ஷாட்டில் ரஜினி ஜீப்பை வேகமாக ஓட்டிவிட்டு நிறுத்தி, கடகடவென்று இறங்கி காமிராவை நோக்கி நடக்க வேண்டும்! என் மாமனாருக்கு கழுத்தில் ஒரு நரம்பு பிசகி இருக்கும்!(ஒரு ஆர்ட் ஃபிலிமில் நடிக்கப் போய் வந்த வினை இது! அப்புறம் சொல்கிறேன்!) அதனால் வேகமாக கழுத்தை திருப்ப முடியாது! பல டேக்குகளில் ரஜினி ஜீப்பை விட்டு என் மாமனாரை விட வேகமாக போய்விடுவாராம்! ரஜினியின் வேகத்தைப் பார்த்த என் மாமனார் “வேணும்னா ரஜினிய வெச்சு தனியா ஷாட் எடுத்துக்குங்க” என்று டைரக்டரிடம் சொல்லியிருக்கிறார்! ஆனால் ரஜினி, அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, அடுத்த டேக்கில் என் மாமனார் ஜீப்பை விட்டு இறங்கும்வரை வெயிட் செய்துவிட்டு அப்புறம் ஒரு மாதிரி சேர்ந்தார்போல நடந்து டேக்கை ஓக்கே செய்தாராம்!<br /><br />செட்டில் ரஜினி சீனியர்களுக்கு கொடுக்கும் மரியாதையைப் பற்றி விலாவாரியாக சொல்வார் என் மாமனார்!<br /><br />இதில் கூத்து என்னவென்றால், சத்யராஜும் அப்போது ஜூனியர் ஆர்டிஸ்ட் தான்! பிரேக்கின் போதெல்லாம் அவர் என் மாமனாரிடம் “இப்படி ரஜினி கமல் கிட்டே அடி வாங்குற மாதிரி நடிச்சே என் கேரியர் போயிடப்போகுது!” என்று புலம்புவாராம்!ரவிஷாhttp://www.blogger.com/profile/04012491564649330999noreply@blogger.com1