Monday, October 4, 2010

எந்திரன் - தந்திரன் - ஒரு விமர்சனம்!




முதலில் தந்திரன் விமர்சனம் பார்ப்போம்! ஒரு ஊரில் ஒரு ரோபாட்
இருந்ததாம்! அதற்குப் பெயர் “ஷிட்டி” என்று வெச்சுக்குவோம்! அந்த ஒரு ரோபாட் யார் யார்கிட்டேயோ அசிஸ்டெண்ட்டாகவெல்லாம் இருந்து கடைசியில் ஒரு மீசைக்காரர் ஒரு படத்தை இயக்க சான்ஸ் கொடுத்தாராம்! அந்தப் படம் நவீன ”ராபின் ஹுட்”ஸ்டைலில் இருந்ததால் மக்கள் எல்லாரும் “ஜோரா” கை தட்டி ரசிச்சாங்களாம்!

ஆனா பாருங்க, அடுத்த படத்துக்கு அவர் கிட்டே சரக்கு இல்லாம போச்சு! இருந்தாலும் அதே மீசைக்காரர் கை கால் பிடிச்சு ஒரு தாடிக்காரர் ஒருத்தரை ஹீரோவா போட்டு, ஒரு “தளுக்கு குலுக்கு” நடிகையை - நக்காதம்மா அப்படீன்னு வெச்சுப்போம் - போட்டு ஒரு படத்தை எடுத்தாராம்! அதுவும் ஏதோ ஒரு ஃப்ளூக்குல “கோக்கு மாக்கா” ஓடிடுச்சு! இதுக்கு நடுல, அந்த மீசைக்காரரு சரியா சம்பளம் குடுக்கலங்கறதுக்காக, அவர “ரோட்டில் கிடக்கும் மலம்” அப்படீன்னெல்லாம் விமர்சனம் செய்துச்சு அந்த “ஷிட்டி”!

இப்பத்தான் “ஷிட்டிக்கு” ஒரு விஷயம் புரிய ஆரம்பிச்சுது! அதாவது, படத்துல ஐயமாருங்களையெல்லாம் நல்லவங்கன்னு காட்டிட்டா படத்த எப்படி வேணும்னாலும் ஓட்டிடலாம்னு! அப்போதான் ஒரு ஜாம்பவான சந்திக்கிறாரு அந்த “ஷிட்டி”!

அந்த ஜாம்பவான் ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய எழுத்தாளராம்! தமிழ்ல எந்த விசயத்த வேணும்னாலும் ச்சும்மா அல்வா மாதிரி எழுத்துலகொடுப்பாராம்! அப்படி வெறும் வெத்துவேட்டா இருந்த அந்த “ஷிட்டி” ரோபாட்ட, அந்த ஜாம்பவான் நல்லா மெருகேத்தி பல படங்களுக்கு ஸ்க்ரிப்ட் எழுதி குடுத்தாராம்!
“ஷிட்டியும்” அதை வாங்கிக்கினு நல்ல நல்ல படமெல்லாம் டைரக்ட் பண்ணாராம்! ஆனா பாருங்க! விதியோட வெளையாட்ட!

அந்த ரெண்டு பேரும் ஒரு “ரோபோ”வைப் பத்தி ஒரு படம் பண்ணலாம்னு முடிவு பண்ணி, கோடி கோடியா செலவு செய்யுற ஒரு தயாரிப்பாளர பிடிச்சு, ஒரு “வெரல் சூப்பர ஸ்டாரை” வெச்சு ஒரு படம் எடுத்தாங்களாம்! திடீர்னு ஒரு நாள் அந்த ஜாம்பவான் கிட்னி, லிவர், ஹார்ட்டு அப்படீன்னு எல்லா பாகங்களும் புட்டுக்குனு “ரங்கனோட” திருவடிக்குப் போய் சேர்ந்துட்டாராம்!
அந்த ஜாம்பவானோட சாவுக்கு ஊர்ல இருந்த எல்லா பெரிய மனுசங்களும் வந்தாங்களாம் ஒரு குண்டம்மாவைத் தவிர! அம்மாம்பெரிய சாவா இருந்திச்சாம் அது! அந்த ஜாம்பவானப் பத்தி எல்லா பெரிய மனுசங்களும் பேசினாங்களாம்! அப்படி அந்த “ஷிட்டி” ரோபோவும் பேசிச்சாம்!

அப்போ அது சொல்லுச்சாம் “அந்த ஜாம்பவான் என்ன ஸன் மாதிரிதான் நெனெச்சிட்டு இருந்தாரு! படத்துக்குப் படம், சம்பளம் கேட்டப்பவெல்லாம் “அது பெரிய விசயம் இல்ல ஷிட்டி! நீ குடுக்கறத குடு! நீ என் ஸன் மாதிரி” அப்படீன்னு சொல்லுவாராம்! அது மாதிரி அந்த “ரோபோ” படத்துக்கு சம்பளம் பேசிக்கிட்டாங்களாம்! ஆனா பாருங்க! அதுக்குள்ள அந்த ஜாம்பவான் போய் சேர்ந்துட்டாரு!

அதுவரைக்கும் அந்த ஜாம்பவான் இல்லாம எனக்கு எதுவும் ஓடாது அப்படி இப்படீன்னு சொல்லிட்டு இருந்த “ஷிட்டி” ரோபாட், அந்த புதுசா பண்ணின “ரோபோ” படத்துல ஜாம்பவானோட பேர மட்டும் ச்ச்சும்மா ஒரு “ஒட்டுக்க்கா” போட்டுட்டாரு டைட்டில்ல! அது மாத்திரம் இல்ல! அந்த ஜாம்பவானோட பேரோட, ஒரு “வயிறு எரியும் முத்து” அப்படீங்கற ஒரு கவிஞரோட பையன் பேரையும் சேர்த்து போட்டுடாராம்!

அதாவது, தனக்கு வரம் குடுத்த ஒரு சாமியார் மேலேயே கை வெச்சு பாத்த பத்மாசுரன் மாதிரி கதை போகுது! இன்னும் எத்தன நாள் போகும்னு தெரில!

இப்போ, ”எந்திரன்” கதைக்கு வருவோம்!

ஒரு புரொஃபஸரு, ரொம்ப ரொம்ப பெரிய படிப்பெல்லாம் படிச்சுட்டு பல வருசம் ஆராய்ச்சியெல்லாம் செஞ்சுட்டு ஒரு “ரோபாட்ட” கண்டுபிடிக்கிறாரு! அவருக்கு உதவறதுக்கு அல்லக்கைங்க மாதிரி சந்தானமும் கருணாஸும்! சத்தியமாச் சொல்றேங்க! அந்த டைரக்டர் நாய் மட்டும் கைல கெடச்சான், மவனே கொத்து பரோட்டாத்தான்! பின்னே என்னங்க? கருணாஸ் எம்.எஸ்.சி. படிச்சவராம்! ஆனா ஒரு வார்த்தை தமிழ்ல பேச முடியலைங்க அவரால!

சரி விடுங்க! அப்புறம் அந்த ரோபோவுக்கு ஃபீலிங்க்ஸ் கொடுக்குறாரு நம்ம புரொஃபஸரு! எப்படி? பேப்பர்ல போர்டுல எல்லாம் எழுதி “காதல், காமம்” அப்படீன்னு சொல்லிக்குடுக்குறாரு! அய்யா சாமியோவ்! அடிக்க வராதீங்க! நான் பீலா விடலைங்க! அந்தப் படத்துல அப்படித்தான் காமிக்கிறாங்க! அப்படியே நம்ம ஸ்கூல் பசங்களுக்கும் பேப்பர்லேயே எழுதிக் காட்டிட்டா இந்த பாலியல் கல்வி அதாங்க “செக்ஸ் எஜுக்கேசன்” விஷயத்த ச்சும்மா நூல் பிடிச்சி போயிரலாம்!

சரி ஃபீலிங்ஸ் வந்திச்சா! அப்புறமாத் தான் தெரியுது, நம்ம புரொஃபஸரோட காதலியை அந்த ரோபோவும் காதலிக்குது! பாட்டெல்லாமும் பாடுது! இதப் பாத்த புரொஃபஸருக்கு கோவம் வந்து அந்த ரோபோவ பிச்சுப் போட்டுடறாரு! இதுக்குன்னே காத்துட்டு இருக்குற வில்லன்(ர்) அத எடுத்து, தன் குகைக்குள்ளே கொண்டு வந்து அதுக்கு கெட்ட கெட்ட விசயத்த எல்லாம் கத்துக்குடுக்குறாரு! நம்ம “ஷிட்டி” மாதிரியே அந்த “சிட்டியும்” - அதாங்க அந்த ரோபோ - தன்னோட குருவையே கொன்னுட்டு, தன் மாதிரி பல ரோபோக்கள உருவாக்கிடுது!

அது மட்டும் இல்லாம, நம்ம ஹீரோயினிய கடத்திக்கினு போய் ஊருக்கு ஒதுக்குப் புறமா - நம்ம ராஜா ராணி கதைல வருமே அதேதான் - கூட்டிப் போய் அவள கொடுமப் படுத்துது! நம்ம ஹீரோ அந்தக் காலத்து படத்துல வர்ற மாதிரி (கழுதை வேசம் போட்டுக்கிட்டுப் போய் காவல் காரன்கிட்டே பாட்டிப் பாடிக்கிட்டே நைஸா உள்ளே போய் ஹீரோயின்கிட்டே துணிய தூக்கிக் காமிச்சி “நாந்தான் ஹீரோ வந்திருக்கேன்” அப்படீன்னு வருமே, அதேதான்!) உள்ளே போய் எல்லா ரோபாட்டையும் “இண்டிபெண்டன்ஸ் டே” படத்துல வர்ற மாதிரி எல்லா ரோபோவையும் ஒழிக்கிறாரு! அதான் கதை!

இதுல பாத்தீங்கன்னா, தந்திரன் படத்துல வர்ற “ஷிட்டி” ரோபோதான் இந்திரன் படத்த டைரக்டு பண்ணியிருக்கு! தான் எடுத்த படத்துல மட்டும் “குருவ மிஞ்சின சிஷ்யன்” இருக்கக்கூடாதுன்னு காட்டுது! ஆனா, நெஜத்துல குருவ மொத்தமா ஓரங்கட்டி, அவரு கிட்டேருந்து ஐடியாவெல்லாத்தையும் உறிஞ்சு கடைசில கண்டுக்கவே மாட்டேங்குது!

என்ன, ஒண்ணு சினிமா! இன்னொண்ணு சினிமா ஒலகம்!

ஆங்.... நம்ம பஞ்ச் சொல்லலையே!

எந்திரன்: நூறு கோடி ரூபாய்ல கட்டின குட்ச! லிப்ஸ்டிக்கு போட்ட பன்னி! லிப்ஸ்டிக்கு போட்டாலும் பன்னி பன்னிதானே?

தந்திரன்: விரைவில் ஆப்பு!

1 comment:

Anonymous said...

punda mavanay,kaluthaiku theriuma karpoora vasanai.ithaye oru vellaikarano indhikarano eduthiruntha aah nu vaaia polanthu paapa ,tamilan oruvan tamilnaatu super star ah vachu tamil cinema va ulaga cinemavaka try pannirukan,atha paratavo vaalthavo manasu illa tha parathesi payaley.