Tuesday, June 17, 2008

இசைராசாவுடன் ஒரு சந்திப்பு - தொடர்கிறது!

சாது படத்து ரீ ரெக்கார்டிங் முடிந்த பிறகு இ.ஞானிக்கு என்ன தோன்றியதோ, எங்கள் மூவரையும்அவர் வீட்டிற்கு வரச்சொல்லியிருந்தார் (தி.நகர் முத்தையா முதலி தெரு?)! வாசலில் வாட்ச்மேன் எங்களை உள்ளே விட மாட்டேன் என்று சொல்லிவிட்டார்! எங்களுடன் வந்த நிருபர், அவர் தொழிலுக்கு ஏற்ற மாதிரிஒரு ஜீன்ஸ், சந்தன ஜிப்பா மற்றும் தாடியுடன் இருந்ததால் ஓரளவிற்கு எங்களை நம்பிட்டார்! (அது என்ன தெரியவில்லை! தமிழில் பேசினால் உதைக்க வருகிறார்கள்! ஹிந்தியிலோ அல்லது ஒரு மாதிரி"மார்க்கமாக" அல்லது "கோக்கு மாக்காக" இருந்தால் "ஐயா உள்ளதான் இருக்காரு! போய் உக்காருங்க"என்கிறார்கள்! இதே அனுபவம் ஏ.ஆர். ரஹ்மான் வீட்டிலும் கிடைத்தது! அதைப்பற்றி அப்புறம்...)

You won't believe.... மொட்டையின் வீடு முழுவதும் வெள்ளை பெயிண்ட் அடித்து பார்ப்பதற்கே ரம்மியமாகவும் அழகாகவும் இருந்தது! வீடு அவ்வளவு பெரிய ஏரியா இல்லாவிட்டாலும், உள்ளே நிறைய பூச்செடிகள், மரங்கள்!வெளியில் under-arm cricket ஆடலாம்! அவ்வளவுதான் இடம்! எங்களை வெளியில் (portigo/reception area) உட்காரவைத்துவிட்டு உள்ளே intercom செய்தார் காவலாளி! எங்களுக்கு முன்னே ஒரு டேபிளில் மல்லிகை பூ மொட்டுக்களாலேயே கோலம் போடப்பட்டிருந்தது! நடுவில்ஒரு சிறிய மண் பிள்ளையார்! அந்த இடமே மல்லைகை வாசம் அடித்தது! சுமார் 30 நிமிடங்களுக்கு பிறகு இ.ஞானி வந்து sorry சொல்லிவிட்டு உள் அறைக்கு கூட்டி சென்றார்! உள்ளே இருப்பதை பார்ப்பேனா இல்லை இ.ஞானியிடம் இருப்பதை பார்ப்பேனா? அந்த் அறையில் இசைக்கருவிகள் மற்றும் கடவுள் சிலைகள் (மரத்தில்/terracota-வில்)! ஒரு மணிநேரம் இசையை பற்றி பேசினார் (இந்த காலத்துல situation-க்கு ஏற்ற ராகத்தை யூஸ் பண்ணுவதில்லை). அவரே பாடியும் காட்டினார்! சில போட்டோக்கள் எடுத்துக்கொண்டோம்! பிறகு

ஒரு மாதம் கழித்து அவரிடம் போய் Sunday Magazine-இல் வெளிவந்த அவரைப்பற்றிய கட்டுரையை காண்பித்தோம்! ஒரே சந்தோஷம் அவருக்கு! அப்போது யாரோ திருப்பதி லட்டுபிரசாதம் அவருக்கு கொடுத்திருந்தார்கள்! ஒரு தட்டில் இருந்து spoon, spoon-ஆக எங்களுக்கு கொடுத்தார்! பிறகு வேலையில் மூழ்கிவிட்டார்! வெளியில் வந்த பிறகு கங்கை அமரன் ஒரு காரில் வந்து இறங்கி எங்களுக்கெல்லாம் ஒரு நமஸ்காரம் (அது என்ன சினிமாக்காரர்களுக்கே ஒரு டிரேட் மார்க்கோ?) போட்டார். நாங்களும் வெளியில் வந்துவிட்டோம்!

அந்த காலத்தில் மொட்டைக்கு ஏ.வி.எம். ஸ்டுடியோவில் ஒரு ரூம் கொடுத்திருந்தார்கள்! அந்த இடத்திலிருந்து அவர் ரெக்கார்டிங் ஸ்டுடியோவிற்கு போவதற்கு அவருக்கு மட்டும் ஒரு தனி வழி! தார் போட்ட ஒரு ஒத்தையடிப்பாதை மாதிரி! இரு பக்கமும் மரங்கள்! பார்க்கத்தான் முடியும், போய் நடக்க முடியாது!

நாங்கள் வெளியில் வந்த நேரம் ஒரு பிரேக் விட்டிருக்கிறார்கள் போல! எல்லா இசைக்கலைஞர்களும் தத்தம்கார்களில் (ஆமாம்! each one had a car! some had Premier 118NE! I saw the lead violinist driving this car! அப்போது மொட்டையின் troop-இல் இருந்தவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ 5000 சம்பளம்! இது வெறும் minimum! அவர் கூடவே இருந்த வி.எஸ். நரசிம்மனுக்கு மாதச்சம்பளம்! உள்ளே உட்கார்ந்துகொண்டு வாசிப்பவர்கள் ராகம் தப்பக்கூடாதென்று கண் மூடி கேட்டுக்கொண்டே இருப்பார்/இருந்தார்!) வெளியில் போனார்கள்! பிறகு விசாரித்ததில் அன்று extra call sheet ஆனதால் இரவு 8.30 மணிவரை ரிக்கார்டிங் உண்டு என்று கல்யாணம் (அவர் அஸ்ஸிஸ்டண்ட்) சொன்னார்!

நாங்கள் எங்கள் காரில் ஏறும் முன்பு பார்த்தோம் மொட்டை அவர் தனி வழியில் தன் ரூமுக்கு போவதை! அதையும் photo எடுத்து நிருபர் வைத்துக்கொண்டார்!

இப்போது எப்படி தெரியாது! அவரிடம் இருக்கும்போது அவருக்கு ஒரு aura இருப்பதை உணர முடிந்தது! He was making a presence. Not an extra word. Not an extra smile! Not an extra emotion! Not an extra expression!I felt the same with A.R. Rahman! Will write about it tomorrow!

3 comments:

Murali. said...

Very nice to read about my fav. musician. But "mottai" endru adikku oru dharam sonnadhu satre "vazhukiyadhu".

Ilaiyaraja endro Isaignani endro kooriyirukkalame?

Thamizh patri neengal kuripittadhu migavum sari. Naan USAil irundhu kondu thamizhaippin patrugiren. Adhanaal enna kashtamo nashtamo vandhu vittadhu?

Anban,
Murali

Unknown said...

சூப்பர்.

ரொம்ப குசும்பான ஆளோ நீங்கள்!


நாங்களும் செல்லமாக மொட்டை என்றுதான் கூப்பிடுவோம்.

பொறாமையாக இருக்கிற்து உங்களைப் பார்த்தால்.அவரைத் திருட்டுத்தனமாகத்தான் ரசித்திருக்கிறோம்
ரீரிக்கார்டிங்/கம்போசிங்கில்.கதவருகில் ஒளிந்துக்கொண்டு.

//அந்த பத்திரிக்கை நிருபர் ஆங்கிலத்தில்கேள்விகள் கேட்க நானும் என் சித்தப்பாவும் அதை தமிழில் மொழிபெயர்த்து//

அவர் ஆங்கிலம் பேசுவாரே?Surprised!

thamizhparavai said...

எனக்கும் பொறாமையாக இருக்கிறது...
//அவரைத் திருட்டுத்தனமாகத்தான் ரசித்திருக்கிறோம்
ரீரிக்கார்டிங்/கம்போசிங்கில்.கதவருகில் ஒளிந்துக்கொண்டு.
//
ரவிசார் அப்படியாவது பார்த்திருக்கிறார்.. நான் அதுகூட இல்லை...