Friday, January 29, 2010

நோ காமெண்ட்ஸ்!




(நன்றி: விடுதலை 29th January 2010)




இந்த விளம்பரம் சனவரி 29த் தேதியட்ட “விடுதலை” ஏட்டில் வந்தது! அய்யா அவர்கள் நடத்தும் பத்திரிக்கை!




படத்தைப் பாருங்கள்! குறிப்பாக சிகப்பு வட்டமிட்ட இடத்தைப் பாருங்கள்!


இதற்குமேல் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை!






Tuesday, January 26, 2010

குரலில் ஒரு பயங்கரம்!

சாதாரணமாக, குரலில் இருக்கும் கம்பீரம் பல பேருக்கு உடலில் இருப்பதில்லை! ஃபோனில் ஒருவரின் குரலைக் கேட்டுவிட்டு, அவரைப் பற்றிய கண்ணோட்டத்துக்கு நாம் பலமுறை வெகுதூரம் போயிருக்கிறோம்!

இந்தியர்களின் தொண்டைக் கட்டு மேற்கத்தியர்களின் தொண்டையைப் போல இருப்பதில்லை! இதற்கு யாராவது அறிவியல் காரணம் கண்டுபிடித்திருந்தால் எனக்கு பின்னூட்டம் இடலாம்!

எனிவே, அமெரிக்கர்களின் தொண்டைக் கட்டு ரொம்பவே அடித்தளத்திலிருந்து வரும்! முக்கால்வாசி அமெரிக்கர்கள், பள்ளியில் படிக்கும்போதே குரல் உடையும்போது, ரொம்பவே உடைந்து பயமுறுத்தும் தோற்றத்தை நம் கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்தும்! நம்மூர்க்காரர்கள், என்னையும் சேர்த்து, குரலில் அந்த deep voice என்று சொல்லக்கூடிய விததில்
இருக்காது!

சரி, அட்லீஸ்ட், ஆண்கள் குரல் ஆண்கள் போலவும் பெண்களீன் குரம் பெண்மையின் நளினத்துடன் இருந்தபட்சத்தில் நோ பிராப்ளம்! நம்மூரில் பல ஆண்களுக்கு பெண் குரல் போலவும், பெண்களுக்கு ஆண்குரல் போலவும் இருப்பதில்தான் பிரச்சினையே! நம்மூரில் இப்போது பல ஆஸ்பத்திரிக்கைகளில் தொண்டை ஆபரேஷன் செய்து குரலை சரி செய்கிறார்கள்! அதெல்லாம் இப்போதுதான்!

நான் சொல்வது சுமார் 20 வருடங்களுக்கு முன்! நான் +2 படிக்கும்போது, என் வகுப்பில் ஒரு மாணவன் இருந்தான்! சுமார் ஐந்தடி உயரம், ஆள் பார்க்க, ச்சும்மா ஹீரோ போல டிரஸ் செய்துகொள்வான்! படிய வாரிய தலைமுடி, ட்ரிம் செய்த மீசை (ஆம், அவனுக்கு அப்போதே அடர்த்தியாக மீசை இருந்தது) டிப் டாப்பான உடை, விலை உயர்ந்த வாட்ச் போன்றவைகளுடன்
தகதகவென்று மின்னுவான்! ஆனால், பாவம்! வாயைத் திறந்தால் போச்சு! அப்படியே ஒரு பத்து வயது சிறுமி மாதிரி பேசுவான்! அவன் இப்போது என்ன செய்கிறான் என்று தெரியவில்லை! ஆனால் பள்ளியில் படிக்கும்போது அவனுக்கு ஏழரை நடந்திருக்கும் என்று சொல்லித்தான் தெரிவதில்லை!

நான் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் சென்னையில் ஒரு கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன்! அது “நானே ராஜா நானே மந்திரி” மாதிரியான ஒரு வேலை! நாவல் நெட்வர்க்கில் இம்ப்ளிமெண்ட்
செய்த - நானே கையால் எழுதிய - ஃபாக்ஸ் ப்ரோ பிரோகிராம்கள்தான் என் வாழ்க்கையின் ஆர்மபம்! அப்போது சும்மா இல்லாமல் சைட் பிஸினஸாக ரிப்பன் இங்க் மற்றும் ப்ரிண்டர் பேப்பர் ஆகியவைகளை
இடது கையில் வாங்கி வலது கையில் விற்பனை செய்துகொண்டிருந்தேன்!

அப்போது பழக்கமான ஒரு கம்பெனியில் ஒரு பெண்மணி இருந்தார்! அவர் ஜாதியில் பதினாறு வயதிலேயே கல்யாணம் செய்துகொடுத்துவிட்டார்கள்! கணவன் ஒரு மளிகைக் கடை ஓனர்! அந்த பெண்மணி, அவர் மூலமாக ரெண்டு குழந்தைகளை பெற்றெடுத்தார்! வீட்டில் சும்மா இல்லாமல், ஆங்கிலத்திலும் வரலாறிலும் எம்.ஏ. படித்திருந்தார்! தனக்கும் கணவணுக்கும்
சரியான அண்டர்ஸ்டாண்டிங் இல்லாததால்,. டைவர்ஸும் வாங்கியிருந்தார்! தானே வேலை செய்து இரண்டு குழந்தைகளையும் காப்பாற்றிக் கொண்டிருந்தார்!

விஷயம் என்னவென்றால், அவருக்கு ஆண் குரல்! அவர் பெயரும் ஆண்பிள்ளைத்தனமாகத் தான் இருக்கும்! பல சமயம் அவர் தன்னை பெண் என்றே சொல்லிக்கொள்ளாமல் தான் வேலை பார்த்துக்கொண்டிருந்த
கம்பெனியில் சீனியர் சேல்ஸ் மேனேஜராக ஆகியிருந்தார்!

ஒரு முறை, என் குடும்ப நண்பர் ஒருவர் அந்த பெண்மணி வேலை செய்யும் கம்பெனிக்கு ஃபோன் போட்டு அவரிடம் பேசியிருக்கிறார்! பெண்மணி தன்னை பெண் என்றே சொல்லவில்லை! நண்பர், தான் பேசியது ஆண் என்றே நினைத்துக்கொண்டிருந்தார்! ஒரு நாள் அந்த் பெண்மணியை - பெண் என்று தெரியாமல் - அவர் ஆஃபிஸுக்கே சென்று சந்திக்கப் போக, அந்த பெண்மணி நண்பரிடம் கையைக் குலுக்கு “நாந்தான் .....” என்று சொல்ல, நண்பர் விட்டார் ஓட்டம்!

பிறகு ஒரு நாள் நண்பர் என்னிடம் “ஏண்டா! உனக்குத் தான் தெரியுமே? ஏன் என்னிடம் சொல்லவில்லை?” என்று கடிந்துகொண்டார்! “சாரி!” என்று சொல்லி சமாளித்தேன்!

இப்போது சுமார் 15 வருடங்கள் ஓடிவிட்டன! எப்போது நினைத்தாலும் சிரிப்பை வரவழைக்கும் ஒரு நிகழ்ச்சி அது!

Tuesday, December 22, 2009

கவிதைகள்!










ஒற்றைப் பொரி!







பின் மதிய நேரத்தில்வெள்ளைக்காரியின் பசிக்கு



பொரித்து போடப்பட்ட சோளங்கள்



அவளும் சாப்பிட்டு அனைவரும் கை



அள்ளியதில் மிச்சமந்த ஒற்றைப் பொரி



அநாதை விடுதி குழந்தையின்



“என்னை தத்தெடுத்துக்கொள்ளேன்”



ஏக்கமிகு பார்வையில்!








கூச்சம்




“ஹாய்! திஸ் இஸ் ஆண்டர்சன் ஹியர்”


“திஸ் இஸ் சாண்ட்ரா ஸ்பீக்கிங்”


“மை நேம் இஸ் மைக்கேல்”


கால் செண்டர் பொய்களில் பழகாத


ஹெட் ஃபோன்கள் இனிமேலும்


சகிக்க முடியாத கூச்சத்தில்!




Friday, September 4, 2009

ஷங்கர் படத்தில் ஷங்கர்!



என்னடா தலைப்பிலேயே பினாத்தறான்னு நெனெச்சிக்காதீங்க! நம்ம ஷங்கர் இருக்காரே, அவரு தன்னோட படத்துல எப்படியோ நடிச்சிடறாரு!

பொதுவா கதாசிரியரோ இல்லை டைரக்டரோ, தன்னை ஒரு நடுநிலையாளனாகவோ அல்லது ஒரு கதாபாத்திரத்தின் பார்வையில்/கோணத்தில்தான் கதை சொல்லமுடியும்! இல்லை, ஒரு கதையை மூன்றாம் மனிதன் நோக்கில் (பார்வையில்) காட்டமுடியும். இதைத்தான் பாயிண்ட் ஆஃப் வ்யூ (Point of View) என்று சொல்லி விகடனிலும் குமுதத்திலும் நம்ம டைரக்டர்கள் ஜல்லியடிப்பார்கள்!

அதே சமயத்தில் ”கெட்டவன் சாவான் நல்லவன் வாழ்வான்” அப்படீன்னும் poetic justic முறையில் வில்லனுக்கு தண்டனை கொடுப்பார்கள்! அதாவது வேலால் வயிறு கிழிந்து சாவது இல்லை தலையறுபட்டு சாவது என்று! இதில் இன்னொரு வகை, தன் இன்னொரு முகத்தை (alter ego) தன் படத்தில் ஒட்டாத ஒரு கேரக்டராக காண்பித்து அவனை வைத்து கதையை நகர்த்துவார்கள்! இல்லையெனில், கருத்து சொல்ல வைப்பார்கள்! தள விஜயின் தந்தை எஸ். ஏ. சி. படத்தில் கிழிந்த கோட்டு போட்டு லூசுத்தனமாக “ஆண்டிப் பண்டாரம்” ரேஞ்சில் தத்துப்பித்துவம் சொல்வது எஸ். ஏ. சி. தான்!

(இப்படித்தான் எஸ் வி. சேகர் நாடகமான் “வால் பையன்” நாடகத்தில் ஒவ்வொரு சீன் முடியும் முன் ஒரு ஆசாமி (ஜிப்பா, ஜோல்னா பை சகிதம்) வந்து கருத்து சொல்லிவிட்டுப் போவார் (ஏழுக்கு பக்கத்தில் ஆறு போட்டால் எழுபத்தாறு! அதையே ஆறுக்கு பக்கத்தில் ஏழு போட்டால் அறுபத்தேழு! அதனால வாழ்க்கையில் எப்பவும் கேர்ஃபுல்லா இருக்கணும்)! நாடகத்தில் கடைசியில், ஒருவர் சேகரிடம் கேட்பார்! “யாரு அந்த ஆளு? ஒவ்வொரு சீன்லேயும் வந்து கருத்து சொல்லிட்டுப் போறாரு” என்று! அதற்கு சேகர் “ஆமாய்யா! கே. பாலசந்தர் ஒரு பேட்டில சேகர் டிராமாவில் கருத்து சொல்றதில்லை அப்படீன்னு சொல்லியிருந்தாரு! அதுக்காகத்தான் நாங்க கருத்து சொல்றதுக்கு ஒரு ஆள போட்டிருக்கோம்” என்பார்! இதைக் கேள்விப்பட்ட கே.பி.க்கு பி.பி. எகிறியிருக்கும் என்று சொல்லவேண்டிய அவசியம் இல்லை!)

Okay, back to I was saying.... காதலன் படம் வெளிவந்த சமயத்தில் டைரக்டர் ஷங்கர் டி.வி.யில் ஒரு பேட்டி கொடுத்திருந்தார்! கமலைப் போல எவனுக்குமே புரியாத லெவலில் பேசியிருந்தார்! அதில் ஒன்று மட்டும் தெரிந்தது! ஷங்கர் சிறு வயதில் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறார் என்று! முக்கியமாக நன்றாக படித்தும் தனக்கு வசதி இல்லாததால் மேலே படிக்க வசதி இல்லாத விஷயத்தை சொல்லியிருப்பார்! அதை தன் படத்தில் காண்பிப்பது மட்டும் அல்லாமல், தன்னையே உருவகப்படுத்தி சில கதாபாத்திரங்களை காட்டியிருப்பார்!

ஜெண்டில்மேன்:

கிச்சாவிடம் (அர்ஜுன்) ஒரு பையன் வந்து முறுக்கு விற்பதற்கு சான்ஸ் கேட்பான்! கவுண்டமணி கேட்ட கேள்விக்கு பதிலாக கள்ள பூணூலை காண்பித்த்து “இதையாவது போட்டுட்டுபோய் விக்கறேன் சார்” என்று அழுதுகொண்டே சொல்லி கிச்சாவின் மனதைக் கரைப்பான்! அந்தப் பையன் தான் ஷங்கர், வேறு ஒரு உருவத்தில்! நல்லா படிச்சாலும் படிக்க வசதி இல்லை! அதனால பொய் சொல்றது தப்பில்லை என்பது ஷங்கரின் வாதம்!

காதலன்:

சொல்லவே தேவையில்லை! பிரவு தேவாதான் ஷங்கரின் உருவகம்! “தனக்கு தகுதி இல்லாததற்கு ஏன் ஆசைப்படவேண்டும்” என்று தந்தை (எஸ்.பி.பி.) கேட்டாலும் தான் நினைத்ததைஎப்படியாவது அடையும் சுபாவம்!

இந்தியன்:

சாட்சாத் இந்தியன் தாத்தாவே தான்! கஷ்டப்பட்டு வாங்கிய சுதந்திரத்தை இப்படி லஞ்சம் வாங்கி ஊழல் செய்து நாறடிக்கிறீர்களே என்று கேட்பது!

ஜீன்ஸ்:

மாதேஷ் கேரக்டர்! Green screen டெக்னிக்கில் தனக்கு உள்ள ஆர்வத்தை மாதேஷ் மூலமாக காண்பித்து இருப்பார்!

முதல்வன்:

இதில் புகழேந்தி ஒரு நாள் முதல்வராக இருந்துவிட்டு bad guys இடம் அடிவாங்கி வீட்டில் படுத்திருப்பார்! காலையில் எழுந்து பார்த்தால் வெளியில் ஒரே கூட்டம்! தன்னை அரசியலுக்கு வந்துவிடும்படி சொல்வார்கள்! ஆனால் அவர்கள் சொல்வதை கேட்காத புகழ், கால் இல்லமல் ஊனமாக இருக்கும் ஒருவர் சொல்லி முஷ்டியை உயர்த்துவார்! இதில் ஊனமாக வருபவர்தான் ஷங்கரின் உருவகம்!

பாய்ஸ்:

அந்த மணிகண்டன் கேரக்டர்! அடுத்தவர்களுக்கு ஐடியாவை அள்ளித்தந்துவிட்டு அவர்களை உயர்த்திவிட்டு தான் காணாமல் போவது! அது ஒருவகையான inferiority complex!

அந்நியன்:

சாட்சாத் அந்நியன் தான் ஷங்கர்! சமூகக் கொடுமைகளை நேரடியாக மக்களிடம் சொல்ல தைரியம் இல்லாமல் செல்லுலாய்டில் kick ass செய்வது போல காட்டியது!

சிவாஜி:

சந்தேகமே இல்லாமல் கடைசி சீனில் “ஐநூறு ரூபா! இன்னும் ரெண்டாயிரம் ரூபா கெடச்சா கேப்பிடேஷன் ஃபீயை சேத்துடலாம்” என்று சொல்லிக்கொண்டே சுமனின் கழுத்தை மிதிப்பானே ஒரு மாணவன்? அவன் தான் ஷங்கர்!
பி.கு.: மேலே உள்ள படத்தில் யார் ஷங்கர்னு கேக்காதீங்க, ப்ளீஸ்!

Wednesday, September 2, 2009

ஒண்ணுமே புரியல, ஒலகத்துல!

சில நாட்களுக்கு முன் கே. டி.வியில் ஸ்பைடர்மேன் பார்ட்-1 (தமிழில்) போட்டார்கள்! சாதாரணமாக தமிழ்ப் படுத்தப்பட்ட ஆங்கிலப் படங்களை பார்ப்பதில்லை! இருந்தாலும், அதற்கு ஓரிரண்டு நாட்களுக்கு முன் தான் நான் ஸ்பைடர்மேன் சீரீஸ் - மூன்று படங்களையும் - டி.வி.டி.யில் பார்த்திருந்தேன்! அதனால் மனதில் ஒரு குறுகுறுப்பு! எப்படித்தான் தமிழ்ப்படுத்துகிறார்கள் என்று பார்த்தேன்!

Long story short..... ஒரு சீனில் ஸ்பைடர்மேன் அவன் காதலியை காப்பாற்றுவான். அவளுக்கு ஸ்பைடர்மேன் தான் பீட்டர் பார்க்கர் என்று தெரியாமல் முத்தம் கொடுப்பாள்! இதில் என்ன தமாஷ் என்றால், அந்த முத்தக்காட்சியை கட் பண்ணிவிட்டார்கள்! அது பெரிய விஷயமில்லை!

ஆனால், கந்தசாமி படத்திலிருந்து “திரை மின்னல்கள்” நிகழ்ச்சியில் சில காட்சிகளை வெளியிடுகிறார்கள்! அதில் ஸ்ரேயா கண்டபடி உடைகளை கிழித்துக்கொண்டு கத்துவார்! அதற்கெல்லாம் சென்சார் கிடையாதாம்! அதே மாதிரி ”மியாவ் மியாவ்” பாட்டு போடுகிறார்கள்! அதெல்லாம் பக்திப் பாடல்களோ? என்ன எழவோ?

-----------------------

அதே மாதிரி, போனவாரம் ஞாயிற்றுக்கிழமை விநாயக சதுர்த்தி! அன்று டி.வி.யில் நிகழ்ச்சிகள் எல்லாம் “சிறப்பு விடுமுறை”க்காகவாம்! ஆனால், இன்று ஓணம் பண்டிகைக்கு மட்டும் ஸ்பெஷலாக “ஓணம் பண்டிகையை” முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள்!

சொந்த ஊரில்தான் தாத்தாவுக்கு கெட்ட பெயர்! அட்லீஸ்ட் பக்கத்து ஊரிலாவது நல்ல பெயர் எடுப்போம்னு கெளம்பிட்டார் போல!

-----------------------

திருவாளர் ப்ரேவ் பெல் இன்று தன் பத்திரிக்கையில் ஓணம் பத்திரிக்கையைப் பற்றி வறுத்தெடுத்துவிட்டார்! அதாவது ஓணம் பிறந்த கதை எல்லாம் கட்டுக்கதை! அதெல்லாம் பார்ப்பனர்களின் கைவேலை என்றெல்லாம் எழுதியிருக்கிறார்!

On a side note, தாத்தா இன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை அறிவித்துவிட்டார்! அடடா, அப்படியென்றால் தாத்தாவும் ஒரு பார்ப்பனரா? இல்லை பார்ப்பனர்களின் அடிவருடியா?

ரொம்பத்தான் brave, ப்ரேவ் பெல் அவர்கள்!
------------------------

Monday, August 31, 2009

தி. நகர் அதாவது மாம்பலம்!

நேற்று தினமணி பத்திரிக்கையில் “மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்” என்ற தலைப்பில் சுமார் நூறு வருடங்களில் மெட்ராஸ் எப்படியெல்லாம் மாறியிருக்கிறது, அதுவும் திருவல்லிக்கேணியை எப்படிஆங்கிலேயன் தன் கைப்பிடிக்குள் உருவிக்கொண்டான் என்பது முதற்கொண்டு எழுதியிருந்தார்கள்!

அதைப் படித்ததும், எனக்கு தி.நகர் தான் ஞாபகத்துக்கு வந்தது! நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் தி.நகரில் தான்! சுமார் 12 வயது இருக்கும்போதுதான் தி. நகரை விட்டு ந.நல்லூருக்குவந்தோம்! நான் சிறு சிறுவனாக இருந்தபோது தி. நகர்தான் எல்லாமே எனக்கு! நான் மட்டும் அல்ல என் அக்காக்கள் அனைவருக்கும் தி. நகர்தான் ஞாபகத்துக்கு வரும்! அவர்களை விடுங்கள்! என் சித்தப்பாககள் அவர்களின் இளமைப் பருவத்தில் ஆட்டம்போட்டது எல்லாமே தி. நகர் தான்!

அதிலும் என் தாத்தா நாற்பதுகளின் தொடக்கத்திலேயே தி. நகருக்கு வந்துவிட்டாராம்! அவர் கட்டிய முதல் வீடு பனகல் பார்க் எதிரில் இருந்தது! இப்போது “பிரமாண்டமாய்” இருக்கும்சரவணா ஸ்டோர்ஸ் இருந்த இடத்தில் தான் ஒரு பெரிய பங்களா இருந்தது! மார்வாடிக்கு சொந்தமானது! அந்த மார்வாடியும் என் தாத்தாவும் நண்பர்கள்! நண்பனுக்கு வீட்டை கட்டிக் கொடுப்பதற்கு சொல்ப சம்பளம் தான் வாங்கினாராம் தாத்தா! அதற்கு பிரதியுபகாராமாய் துரைசாமி பாலத்தின் அருகில் ஓரிரண்டு கிரவுண்டுகள் வாங்கித் தருகிறேன் என்றாராம்அந்த மார்வாடி! அதற்கு என் தாத்தா “அடப் போடா! இந்த இடத்துல எவண்டா வீடு கட்டுவான்?” என்றாராம்!

அவர் கேட்டதிலும் ஒரு நியாயம் இருந்தது! 40’களில் தி. நகர் உஸ்மான் ரோட்டில் ஆள் அரவம் இருக்காதாம்! அங்கே இங்கே என்று ஓரிரண்டு வீடுகள்! சீனிவாச்சாரி மருத்துவமனை இருந்தது (ராமனாதன் தெருவுக்கு பக்கத்தில்)! பிறகு அதற்குப் பக்கத்தில் சாரதா வித்யாலயாவின் (ராமகிருஷ்ண மடம்) சிறுவர் பள்ளி இருந்தது! அதை விட்டால் மாம்பலம் ரயில்வே ஸ்டேஷன் தான்! உஸ்மான் ரோட்டின் இரு பக்கத்திலும் மரங்கள் இருக்குமாம்! அங்கே பொழுது சாய்ந்த பிறகு யாரும் போக பயப்படுவார்களாம்!

இப்போது சொல்லுங்கள்! அங்கே மனை வாங்குவது ஒரு “திகில்” கிளப்பும் விஷயமாகத்தானே இருந்திருக்கும் என் தாத்தாவுக்கு? அதே மாதிரி, பழைய மாம்பலத்தில் ஒரு ஏரி இருந்ததாம்! அதனாலேயே அங்கு கொசு ரொம்பவே அதிகமாம்! துரைசாமி சப்வே வருவதற்கு முன்னால் அங்கு ரயில்வே கேட் தான்! என் தாத்தா “பழைய மாம்பலத்தில் எல்லாம் எப்படித் தான் மக்கள் வசிக்குறாங்களோ?” என்று நொந்து கொள்வாராம்!

அதற்குப் பிறகு ஐம்பதுகளில் சென்னை பிக்கப் ஆகும் சமயத்தில், கோடம்பாக்கம் பிரசித்தி பெறத்துவங்கியது! அப்போது ரங்கராஜபுரம் ஏரியாவில் மனை வாங்கச்சொன்னபோது, “அங்கே எல்லாம் எவன் போக முடியும்? மழைக் காலத்தில் மாட்டு வண்டி சேற்றில் மாட்டிக்கும்! நான் அங்கேயெல்லாம் வீடு வாங்கமாட்டேன்” என்றெல்லாம் உதார்விட்டு கடைசி வரை வாடகை வீட்டில் வாடகை கொடுக்கமுடியாமல் உயிர் விட்டார்!

சொல்லப்போனால், எழுபதுகளில் கூட, துரைசாமி ரோட்டில் நாங்கள் போக மாட்டோம்! அங்கே ஒரே இருட்டாக இருக்கும்! ஆறு மணிக்குப் பிறகு “ஓ” வென்று இருக்கும்! தவிரவும், அங்கே ஒரு விறகுக் கடை இருந்தது! என்னமோ எங்களுக்கு விறகுக் கடை மேல் ஒரு பயம்! அதனால் பகலிலேயே அந்தப் பக்கம் போகாமல் எதிர் வாடையில் நடப்போம்!

அதே போல, வெங்கடநாராணா ரோட்டில் சாதாரணமாகவே போகமாட்டோம்! அப்போதெல்லாம், சாலையின் இரு பக்கமும் மரங்கள் ஓங்கி வளர்ந்திருக்கும்! அதனால் பகலிலேயே வெளிச்சம் இருக்காது! அதுவே ஒரு அமானுஷ்யமாக தென்படும் எங்களுக்கு! வீடு! இல்லை ராமகிருஷ்ணா ஸ்கூல்! இதுதான் எனக்கு அப்போதெல்லாம்!

இன்னொன்றும் சொல்ல மறந்துவிட்டேனே? பனகல் பார்க்கின் வடக்குப் பகுதியான (கோடம்பாக்கம் ரோட்டை இணைக்கும் உஸ்மான் ரோட்டின் ஸ்ட்ரெட்ச்) இடத்தில் “ஓ” வென்று இருக்கும்! நான் ஸ்கூலில் படித்தபோது என் கூட படித்த ஒரு ஸ்னேகிதியின் வீடு அங்கேதான் இருந்தது! அவளின் சகோதரியும் என் அக்காவின் கிளாஸ்மேட் ஆதலால், அவ்வப்போதுபோய் வருவோம்! எங்கே என்றால், தற்போது “இசை ஞானி” என்று சொல்லப்படும் “மொட்டையின்” வீடு இருக்கிறதே முருகேச முதலி தெரு! அங்கேதான்! சாரதா ஸ்கூலில் இருந்துஒரு இரண்டு நிமிஷம் நடந்தால் அவர்கள் வீடு வந்துவிடும்! ஆனால், அதற்கே ஒரே ஓட்டமாக ஓடுவோம்! தவிரவும் அங்கே ஒரு பெரிய்ய்ய தூங்கு மூஞ்சி மரம் இருந்தது! அதை கணக்காக எடுத்துக்கொண்டு இரண்டு மூச்சில் ஓடிப்போய்விட்டு வருவோம்! ஏன் அந்த மரத்தடியில் ரெஸ்ட் என்றால், அங்கே ஒரு பெட்டிக் கடை இருந்தது! தவிரவும் சினிமா ஆசையில் சென்னைக்கு வந்த நபர்கள் எல்லாம் அந்தக் கடை வாசலில்தான் டீ குடித்துக்கொண்டு இருப்பார்கள்! அதனால் ஒரு சேஃப்டி!

இப்போது என்னடானா, உஸ்மான் ரோட்டில் நடந்து போவதற்கே மூச்சு வாங்குகிறது! தி. நகரை நகை வாங்குவதற்கு ஒரு குறியீடாக பயன்படுத்துகிறார்கள்! அதை விடுங்கள்! மாம்பலம் என்பதையே தி. நகர் என்று மாற்றிவிட்டாரக்ள்!

Tuesday, August 25, 2009

வெந்த புண்ணுக்கு கொஞ்சம் மருந்து போடுவோமா? கண்டிப்பாக 18+ ஒன்லி!

அடுப்புல வெந்த சாமியைப் பாத்துட்டு என் நண்பன் நேத்து ஃபோன் பண்ணி “என்னடா தூங்கும்போதெல்லாம் ஒரே விஷ்க் விஷ்க்குன்னு கனவுல சத்தமா வருது”ன்னு பொலம்பினான்! எனக்கு அந்த அளவுக்கு பாதிப்பு இல்லைன்னாலும் ஓரளவுக்கு சரி செய்யலாம்னு தோணிச்சு! அதான் இந்தப் பதிவு!


கொஞ்சம் இம்போர்ட்டட் சரக்குதான்! எக்குத்தப்பா இருக்கும், ஜாக்கிரதை!

----------------------------
மூணு அமெரிக்கா காரங்க சவுதிக்குப் போனாங்களாம்! அங்கே பாலைவனத்தில் நடந்து போயிட்டிருக்கும்போது ஒரு பெரிய மாளிகை கண்ணுல பட்டதாம்! உள்ளே போய் விசாரிச்சா ஒரு ஷேக்கோட அந்தப்புரமாம்! சும்மா ஒரு 100 ராணிங்க இருந்தாங்களாம் அங்க! நம்ம ஆளுங்களுக்கு ஒடனே பரபரன்னுச்சு! உள்ளே போய் பொண்ணுங்களை நோட்டம் விட ஆரம்பிச்சிட்டானுங்க! அதுக்குள்ள காவலாளிங்க மூணு பேரையும் பிடிச்சு கட்டிப்போட்டு வெச்சிட்டாங்க! அப்போதான் ஷேக்கு உள்ளே நுழையறாரு கொலை வெறியோட!

இந்த மூணு பேரைப்பத்தி விசாரிச்சதும் வெறி ஜாஸ்தியாயுடுச்சு அவருக்கு!
ஒவ்வொருத்தருக்கும் தண்டனைய புதுமையா தரணும்னு முடிவு பண்ணாரு ஷேக்கு! மொதல் ஆசாமிய கூப்பிட்டு “என்ன வேலைல பாக்குறே” அப்படீன்னுருக்காரு! அதுக்கு அவன் போலிஸ் வேலைல இருக்குறதாச் சொன்னான்! ஒடனே ஷேக்கு அந்தப்புரத்துல இருக்குற ஒரு ராணிய கூப்பிட்டு அவனுக்கு “அந்த” இடத்துல சுட்டுக்கொல்லணும்னு உத்தரவு போடறாரு!

அடுத்த ஆசாமிய கூப்பிட்டு இதே கேள்விய கேக்க, அவன் தான் ஃபையர் சர்வீஸ்ல இருக்கேன்னுருக்கான்! ஒடனே அவரு அவனுக்கு “அந்த” இடத்துல நெருப்பால எரிச்சு கொல்லணும்னு இன்னொரு ராணிய கூப்பிட்டு உத்தரவு போடறாரு!

கடைசியா இருந்தவன் இதெல்லாத்தையும் பாத்துட்டு கெக்கெ பிக்கேன்னு சிரிச்சிக்கிட்டு இருந்தான்! ஷேக்குக்கு கோவம் பொத்துட்டு வந்தது! “என்னடா திமிரா? சாகப்போற உனக்கு சிரிப்பா இருக்குதா”ன்னு கேக்குறாரு! அதுக்கு அவன் சொல்றான்!

“நான் லாலி பாப் சேல்ஸ் பண்றேன்”!

--------------------------------------

நம்மாளுங்க மூணு பேரு செத்தப்புறம் மேல் லோகத்துக்கு போறானுங்க! வாசல்ல எல்லா பேத்தையும் செக் பண்ணிட்டிருக்கிற சித்திரகுப்தன் மூணு பேரையும் விசாரிக்கிறான்! மொதல் ஆசாமிய பாத்து “நீ எப்படி? மனைவிக்கு துரோகம் செஞ்சியா” அப்படீன்னு கேக்குறாரு (அவருக்குத்தான் நோட் புக்குல எல்லா விஷயமும் இருக்குன்னு அதிகப் பிரசங்கித்தனமா கேக்கக்கூடாது! அப்புறம் இந்த ஜோக்குக்கு அர்த்தமே இருக்காது சாமி!). அதுக்கு அவன் “நான் கடைசி வரைக்கும் வேற பொண்ண ஏறெடுத்தும் பாக்கல! மனைவி செத்தப்புறம் கூட இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலைன்னா பாத்துக்கோங்க!” அப்படீங்கறாரு! ஒடனே சித்திரகுப்தன் சொர்க்க வாசல தெறந்து ”உள்ளே போங்க! அதோ நிக்குதே லம்பார்க்கினி! அத எடுத்து சொர்க்கத்துக்குள்ளே ஓட்டி எஞ்ஜாய் பண்ணுங்க” சொல்லி அனுப்பிடறாரு!

அடுத்த ஆசாமிய இதே கேள்வி கேக்க அவரு அதுக்கு “நான் சின்ன வயசு! அப்படி இப்படீன்னு இருந்துட்டேன்! ஆனா கடைசி காலத்துல மனைவி மேல ரொம்ப அன்பா இருந்தேன்” அப்படீங்குறாரு! ஒடனே சி.கு. கேட்டத் தெறந்து உள்ளே இருக்கும் ஒரு அம்பாசடரை எடுத்துக்கோங்க! சொர்க்கத்துல ஓட்டி எஞ்ஜாய் பண்ணுங்க” சொல்லி அனுப்பிடறாரு!

மூணாவதா வந்த ஆசாமிய இதே கேள்விய கேக்க அவன் ஜூ.வி.யில் வரும் “இவர்தான் உங்கள் ஹீரோவில்” வரும் ரேஞ்சுக்கு தன்னோட லீலைகள சொல்றாரு! சி.கு.க்கு ஒரே கோவம்! ஒரு ஓட்டை உடைசல் சைக்கிள கொடுத்து இதுதான் உனக்கு சொர்க்கத்துக்குள்ள ட்ரான்ஸ்போர்ட்ன்னு சொல்லி அனுப்பிடறாரு!

கொஞ்ச நாள் கழிச்சு சி.கு. ரவுண்ட்ஸ் போகும்போது லம்பார்க்கினி ஆசாமிய பார்க்குறாரு! அவன் என்னடான்ன வண்டிய ஓட்டி எஞ்ஜாய் பண்ணாம டிக்கிக்கு மேல ஒக்காந்துட்டு அழுதுட்டு இருந்தானாம்! ஏண்டா ஒனக்குத்தான் நல்லவண்டிதானே கொடுத்திருக்கேனே! அப்புறமும் ஏண்டா அழுவுறேன்னு சி.கு. கேட்டாராம்! அதுக்கு அவன் சொன்னான்:

“என் பொண்டாட்டி இப்பத்தான் ஸ்கேட்டிங் பண்ணீட்டு போறத பார்த்தேன்!”

----------------------------------------------------

குட்டிப்பய கோவிந்து ஸ்கூல் விட்டு வீட்டுக்குள்ளே நுழையறான்! தாவிப் பிடிச்ச அம்மாக்காரி என்னடா ரொம்ப சோகமா இருக்கேன்னு கேக்குறாங்க! அதுக்கு கு.கோ. “காத்தால பஸ்ல போகும்போது அப்பா நான் ஒக்காந்துட்டு இருக்குற சீட்ட ஒரு பொண்ணுக்கு கொடுக்கச் சொல்லிட்டாரு” அப்படீன்னு சொல்றான்! அதுக்கு அம்மாக்காரி “அதுல என்னடா தப்பு? பொம்பளைங்களுக்கு இடம் தந்தா தப்பில்லையே” சொல்றா! கோவிந்து கோவமா மொகத்த வெச்சிக்கிட்டு “அப்பா சொன்னது அவரோட மடி” அப்படீன்னு சொல்லிட்டு ஓடிப்போயிட்டான்!

---------------------------------------------------

“என்ன டார்லிங் நம்ம மேரேஜ் சர்ட்டிஃபிக்கேட்டையே நாலு மணிநேரமா பாத்துட்டு இருக்கீங்க! அதுல என்ன இருக்கு?” அப்படீன்னு பொண்டாட்டி கேக்குறாங்க! அதுக்கு கோவாலு சோகமா “எல்லாம் இருக்கு இதுல! ஆனா எக்ஸ்பைரி டேட் போட்டுருக்கானான்னு பாக்குறேன்”!

-----------------------------------------------------