Friday, May 21, 2010

காஃபி குடித்தல்!




நான் இராமகிருஷ்ணா மிஷன் ஹை ஸ்கூலில் படித்தபோது நடந்த சம்பவம் இது! இன்றைக்கும் இது மறக்கவில்லை! எப்போதும் மறக்காது என்றும் நினைக்கிறேன் ஏனென்றால் அப்படியாப்பட்ட சப்ஜக்ட் இது!

நான் ஒன்பதாவது படிக்கும்போது, தமிழ் வாத்தியார் ஒருவர் எங்களுக்கு அறிமுகமானார்! அவர் பெயர் அம்மையப்பன்! அப்போது அவருக்கு நாற்பது சொச்சங்கள் இருக்கும்! மற்ற வாத்தியார்களைப் போல
சிங்கியடித்துக்கொண்டு இருக்கவில்லை அவர்! சரியான பணக்காரர் என்று சொல்லிக்கொள்வார்கள்! தினமும் சஃபாரி டிரஸ்ஸில்தான் வருவார் என்றால் பார்த்துக்கொள்ளூங்கள்! ஜாலியாக பேசுவார்!
மாணவர்களை திட்டுவாரே தவிர, அடிக்கமாட்டார்!

சரி, விஷயத்துக்கு வருவோம்! நான் ஒன்பதாவது படிக்கையில், ஒரு க்வார்ட்டர்லி லீவில், அவர் ஒரு மாதம் லீவு எடுத்துக்கொண்டு சிங்கப்பூர், மலேஷியா, ஹாங்காங், ஜப்பான் போன்ற நாடுகளை சுற்றிப் பார்க்க போயிருந்தார்!

ஊரெல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டு ஒரு நாள் எங்கள் கிளாசுக்கு தமிழ் வகுப்பு எடுக்கவந்தார்! ஃபாரின் போய்விட்டு வந்த பிறகு அவரிடம் நிறையவே மாற்றம்! கைகளில் எக்ஸ்ட்ரா மோதிரங்கள், பிரேஸ்லெட், மற்றும் தடியான தங்கச் சங்கிலி! செண்ட் அடித்திருந்தார் என்று சொல்லவே வேண்டாம்!

அவர்தான் ஜாலி பேர்வழியாயிற்றே! கிளாஸில் ஒருவன் சும்மா இல்லாமல், “சார்! பாடம் அப்புறம் இருக்கட்டும் சார்! மொதல்ல உங்க பயண அனுபவத்தை சொல்லுங்க சார்!” என்று கேட்டான்!

அவ்வளவுதான்! மடை திறந்த மாதிரி சுமார் ஒரு மணி நேரத்துக்கு, எங்கேல்லாம் போனேன் என்று சொன்னார்!

சிங்கப்பூர், மலேஷியா போன்ற நாடுகளில் எப்படியெல்லாம் மனிதர்கள் இருக்கிறார்கள்! பழக்க வழக்கம், கலாச்சாரம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு இருந்தார்! திடீரென்று, ஜப்பானைப் பற்றி
ரொம்பவே புகழ ஆரம்பித்துவிட்டார்!

“அங்கெல்லாம் டி.வி., ரேடியோ, டேப் ரிக்கார்டர் எல்லாத்தையும் தெருவுல போட்டு கூறு கட்டி விக்குறான்! பாக்கவே நல்லா இருந்தது!” என்றெல்லாம் அளந்து கொண்டிருந்தார்! அப்படியே பேச்சு ஒரு விஷயத்துக்கு போய்விட்டது! அதான், செக்ஸ்!

“ஜப்பான்ல ஒரு வீதி பூராவும் அந்த மாதிரி பொம்பளைங்க இருக்காங்க! வேணுங்கறவன் அங்கே போகலாம்!” என்றெல்லாம் சொல்லிவிட்டு,
பூடகமாக, “ஜப்பானியர்களை பொறுத்தவரை கற்பு என்பது காஃபி குடிப்பது மாதிரி! அவங்களை பொருத்தவரை அது சாதாரணமான விஷயம்! எப்போ வேணும்னாலும் குடிப்பாங்க!” என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார்!

அப்போது, என் கிளாஸில் இருந்த விடாக்கண்டன் ஒரு கேள்வி கேட்டானே பாக்கலாம். “அப்போ, நீங்க எத்தனை காஃபி சார் குடிச்சீங்க?”!

அவனுக்கு அடி கெடச்சுதுன்னு நீங்க நெனெச்சாக்க தப்பு!

அந்த கேள்விக்கு அவர் சொன்ன பதில்தான் சூப்பர். இன்னைக்கும் நெனைவுல இருக்கு!

“நான் காஃபி குடிக்கறதில்ல! டீ தான் குடிப்பேன்”!

Thursday, April 29, 2010

இது என்ன புது கலாட்டா?

(நன்றி: ஆனந்த விகடன் Dated: 05-05-2010)

மேலே உள்ள படம் ஆ.வி.யில் வரும் லூசுப் பையனின் நையாண்டி பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது! உங்களுக்குத் தெரிந்திருக்கும்! வாராவாரம்
லூசுப்பையன் என்பவர்(கள்) ஆ.வி.யில் எல்லோரையும் அநியாயத்துக்கு கலாய்ப்பார்கள்!
போன வாரம் வரை ஜெ.வை கோபலலிதா என்றே ரெஃபர் செய்து கார்ட்டூன் போட்டுக்கொண்டிருந்தார்கள்! இந்த வாரம் என்ன ஆயிற்றோ தெரியவில்லை, கோபலலிதா போய் பயலலிதா ஆகிவிட்டார்!
ஒரு வேளை ஜெ. இப்போது கோபமெல்லாம் போய் ஆ.வி.யிடன் சமாதானாமாகிப் போய்விட்டாரா? இல்லை, ஆ.வி.க்கு ஜெ. மீது இருந்த பயம்
போய்விட்டதா? இல்லை அடுத்த ஆட்சி அவங்க ஆட்சி வந்துவிட்டால், ஏன் இந்த வம்பு என்று பயலலிதா ஆக்கிவிட்டார்களா?
இது என்ன புது கலாட்டா தெரியவில்லையே?
தெரிந்தால் சொல்லுங்களேன்!

Tuesday, April 27, 2010

சாருவைப் பாரு!

இன்று சாரு தன் பிளாக்கில் தன் உயிர்த் தோழி, சாருவின் கவிதைகளை
நினைத்துக்கொண்டே காரை ஓட்டி நடைபாதையில் ஏற்ற இருந்ததாகவும், இனிமேல் அந்தத் தோழி அப்படி செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொள்வதாகவும் சொல்லியிருக்கிறார்!

ஏன்யா! அவள் எந்த மாதிரியான தோழியாக இருந்துவிட்டுப் போகட்டும்! லூசு மாதிரி காரை ஓட்டி நடைபாதையில் ஏற்ற இருந்த (அல்லது, நடைபாதையில்
இருந்த யார் மீதாவது ஏற்ற இருந்த) ஒரு குடாக்கை, பளார்னு அறைய வேண்டாமா? அல்லது திட்டவேண்டாமா? அதையெல்லாம் விட்டுவிட்டு “கேட்டுக்கொள்கிறாராம்”.

என்னைக் கேட்டால், அந்த அன்புத் தோழியிடம் சாருவின் கவிதைகளை படிக்காமல் இருக்க கேட்டுக்கொள்ளவேண்டும்!

Friday, January 29, 2010

நோ காமெண்ட்ஸ்!




(நன்றி: விடுதலை 29th January 2010)




இந்த விளம்பரம் சனவரி 29த் தேதியட்ட “விடுதலை” ஏட்டில் வந்தது! அய்யா அவர்கள் நடத்தும் பத்திரிக்கை!




படத்தைப் பாருங்கள்! குறிப்பாக சிகப்பு வட்டமிட்ட இடத்தைப் பாருங்கள்!


இதற்குமேல் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை!






Tuesday, January 26, 2010

குரலில் ஒரு பயங்கரம்!

சாதாரணமாக, குரலில் இருக்கும் கம்பீரம் பல பேருக்கு உடலில் இருப்பதில்லை! ஃபோனில் ஒருவரின் குரலைக் கேட்டுவிட்டு, அவரைப் பற்றிய கண்ணோட்டத்துக்கு நாம் பலமுறை வெகுதூரம் போயிருக்கிறோம்!

இந்தியர்களின் தொண்டைக் கட்டு மேற்கத்தியர்களின் தொண்டையைப் போல இருப்பதில்லை! இதற்கு யாராவது அறிவியல் காரணம் கண்டுபிடித்திருந்தால் எனக்கு பின்னூட்டம் இடலாம்!

எனிவே, அமெரிக்கர்களின் தொண்டைக் கட்டு ரொம்பவே அடித்தளத்திலிருந்து வரும்! முக்கால்வாசி அமெரிக்கர்கள், பள்ளியில் படிக்கும்போதே குரல் உடையும்போது, ரொம்பவே உடைந்து பயமுறுத்தும் தோற்றத்தை நம் கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்தும்! நம்மூர்க்காரர்கள், என்னையும் சேர்த்து, குரலில் அந்த deep voice என்று சொல்லக்கூடிய விததில்
இருக்காது!

சரி, அட்லீஸ்ட், ஆண்கள் குரல் ஆண்கள் போலவும் பெண்களீன் குரம் பெண்மையின் நளினத்துடன் இருந்தபட்சத்தில் நோ பிராப்ளம்! நம்மூரில் பல ஆண்களுக்கு பெண் குரல் போலவும், பெண்களுக்கு ஆண்குரல் போலவும் இருப்பதில்தான் பிரச்சினையே! நம்மூரில் இப்போது பல ஆஸ்பத்திரிக்கைகளில் தொண்டை ஆபரேஷன் செய்து குரலை சரி செய்கிறார்கள்! அதெல்லாம் இப்போதுதான்!

நான் சொல்வது சுமார் 20 வருடங்களுக்கு முன்! நான் +2 படிக்கும்போது, என் வகுப்பில் ஒரு மாணவன் இருந்தான்! சுமார் ஐந்தடி உயரம், ஆள் பார்க்க, ச்சும்மா ஹீரோ போல டிரஸ் செய்துகொள்வான்! படிய வாரிய தலைமுடி, ட்ரிம் செய்த மீசை (ஆம், அவனுக்கு அப்போதே அடர்த்தியாக மீசை இருந்தது) டிப் டாப்பான உடை, விலை உயர்ந்த வாட்ச் போன்றவைகளுடன்
தகதகவென்று மின்னுவான்! ஆனால், பாவம்! வாயைத் திறந்தால் போச்சு! அப்படியே ஒரு பத்து வயது சிறுமி மாதிரி பேசுவான்! அவன் இப்போது என்ன செய்கிறான் என்று தெரியவில்லை! ஆனால் பள்ளியில் படிக்கும்போது அவனுக்கு ஏழரை நடந்திருக்கும் என்று சொல்லித்தான் தெரிவதில்லை!

நான் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் சென்னையில் ஒரு கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன்! அது “நானே ராஜா நானே மந்திரி” மாதிரியான ஒரு வேலை! நாவல் நெட்வர்க்கில் இம்ப்ளிமெண்ட்
செய்த - நானே கையால் எழுதிய - ஃபாக்ஸ் ப்ரோ பிரோகிராம்கள்தான் என் வாழ்க்கையின் ஆர்மபம்! அப்போது சும்மா இல்லாமல் சைட் பிஸினஸாக ரிப்பன் இங்க் மற்றும் ப்ரிண்டர் பேப்பர் ஆகியவைகளை
இடது கையில் வாங்கி வலது கையில் விற்பனை செய்துகொண்டிருந்தேன்!

அப்போது பழக்கமான ஒரு கம்பெனியில் ஒரு பெண்மணி இருந்தார்! அவர் ஜாதியில் பதினாறு வயதிலேயே கல்யாணம் செய்துகொடுத்துவிட்டார்கள்! கணவன் ஒரு மளிகைக் கடை ஓனர்! அந்த பெண்மணி, அவர் மூலமாக ரெண்டு குழந்தைகளை பெற்றெடுத்தார்! வீட்டில் சும்மா இல்லாமல், ஆங்கிலத்திலும் வரலாறிலும் எம்.ஏ. படித்திருந்தார்! தனக்கும் கணவணுக்கும்
சரியான அண்டர்ஸ்டாண்டிங் இல்லாததால்,. டைவர்ஸும் வாங்கியிருந்தார்! தானே வேலை செய்து இரண்டு குழந்தைகளையும் காப்பாற்றிக் கொண்டிருந்தார்!

விஷயம் என்னவென்றால், அவருக்கு ஆண் குரல்! அவர் பெயரும் ஆண்பிள்ளைத்தனமாகத் தான் இருக்கும்! பல சமயம் அவர் தன்னை பெண் என்றே சொல்லிக்கொள்ளாமல் தான் வேலை பார்த்துக்கொண்டிருந்த
கம்பெனியில் சீனியர் சேல்ஸ் மேனேஜராக ஆகியிருந்தார்!

ஒரு முறை, என் குடும்ப நண்பர் ஒருவர் அந்த பெண்மணி வேலை செய்யும் கம்பெனிக்கு ஃபோன் போட்டு அவரிடம் பேசியிருக்கிறார்! பெண்மணி தன்னை பெண் என்றே சொல்லவில்லை! நண்பர், தான் பேசியது ஆண் என்றே நினைத்துக்கொண்டிருந்தார்! ஒரு நாள் அந்த் பெண்மணியை - பெண் என்று தெரியாமல் - அவர் ஆஃபிஸுக்கே சென்று சந்திக்கப் போக, அந்த பெண்மணி நண்பரிடம் கையைக் குலுக்கு “நாந்தான் .....” என்று சொல்ல, நண்பர் விட்டார் ஓட்டம்!

பிறகு ஒரு நாள் நண்பர் என்னிடம் “ஏண்டா! உனக்குத் தான் தெரியுமே? ஏன் என்னிடம் சொல்லவில்லை?” என்று கடிந்துகொண்டார்! “சாரி!” என்று சொல்லி சமாளித்தேன்!

இப்போது சுமார் 15 வருடங்கள் ஓடிவிட்டன! எப்போது நினைத்தாலும் சிரிப்பை வரவழைக்கும் ஒரு நிகழ்ச்சி அது!

Tuesday, December 22, 2009

கவிதைகள்!










ஒற்றைப் பொரி!







பின் மதிய நேரத்தில்வெள்ளைக்காரியின் பசிக்கு



பொரித்து போடப்பட்ட சோளங்கள்



அவளும் சாப்பிட்டு அனைவரும் கை



அள்ளியதில் மிச்சமந்த ஒற்றைப் பொரி



அநாதை விடுதி குழந்தையின்



“என்னை தத்தெடுத்துக்கொள்ளேன்”



ஏக்கமிகு பார்வையில்!








கூச்சம்




“ஹாய்! திஸ் இஸ் ஆண்டர்சன் ஹியர்”


“திஸ் இஸ் சாண்ட்ரா ஸ்பீக்கிங்”


“மை நேம் இஸ் மைக்கேல்”


கால் செண்டர் பொய்களில் பழகாத


ஹெட் ஃபோன்கள் இனிமேலும்


சகிக்க முடியாத கூச்சத்தில்!




Friday, September 4, 2009

ஷங்கர் படத்தில் ஷங்கர்!



என்னடா தலைப்பிலேயே பினாத்தறான்னு நெனெச்சிக்காதீங்க! நம்ம ஷங்கர் இருக்காரே, அவரு தன்னோட படத்துல எப்படியோ நடிச்சிடறாரு!

பொதுவா கதாசிரியரோ இல்லை டைரக்டரோ, தன்னை ஒரு நடுநிலையாளனாகவோ அல்லது ஒரு கதாபாத்திரத்தின் பார்வையில்/கோணத்தில்தான் கதை சொல்லமுடியும்! இல்லை, ஒரு கதையை மூன்றாம் மனிதன் நோக்கில் (பார்வையில்) காட்டமுடியும். இதைத்தான் பாயிண்ட் ஆஃப் வ்யூ (Point of View) என்று சொல்லி விகடனிலும் குமுதத்திலும் நம்ம டைரக்டர்கள் ஜல்லியடிப்பார்கள்!

அதே சமயத்தில் ”கெட்டவன் சாவான் நல்லவன் வாழ்வான்” அப்படீன்னும் poetic justic முறையில் வில்லனுக்கு தண்டனை கொடுப்பார்கள்! அதாவது வேலால் வயிறு கிழிந்து சாவது இல்லை தலையறுபட்டு சாவது என்று! இதில் இன்னொரு வகை, தன் இன்னொரு முகத்தை (alter ego) தன் படத்தில் ஒட்டாத ஒரு கேரக்டராக காண்பித்து அவனை வைத்து கதையை நகர்த்துவார்கள்! இல்லையெனில், கருத்து சொல்ல வைப்பார்கள்! தள விஜயின் தந்தை எஸ். ஏ. சி. படத்தில் கிழிந்த கோட்டு போட்டு லூசுத்தனமாக “ஆண்டிப் பண்டாரம்” ரேஞ்சில் தத்துப்பித்துவம் சொல்வது எஸ். ஏ. சி. தான்!

(இப்படித்தான் எஸ் வி. சேகர் நாடகமான் “வால் பையன்” நாடகத்தில் ஒவ்வொரு சீன் முடியும் முன் ஒரு ஆசாமி (ஜிப்பா, ஜோல்னா பை சகிதம்) வந்து கருத்து சொல்லிவிட்டுப் போவார் (ஏழுக்கு பக்கத்தில் ஆறு போட்டால் எழுபத்தாறு! அதையே ஆறுக்கு பக்கத்தில் ஏழு போட்டால் அறுபத்தேழு! அதனால வாழ்க்கையில் எப்பவும் கேர்ஃபுல்லா இருக்கணும்)! நாடகத்தில் கடைசியில், ஒருவர் சேகரிடம் கேட்பார்! “யாரு அந்த ஆளு? ஒவ்வொரு சீன்லேயும் வந்து கருத்து சொல்லிட்டுப் போறாரு” என்று! அதற்கு சேகர் “ஆமாய்யா! கே. பாலசந்தர் ஒரு பேட்டில சேகர் டிராமாவில் கருத்து சொல்றதில்லை அப்படீன்னு சொல்லியிருந்தாரு! அதுக்காகத்தான் நாங்க கருத்து சொல்றதுக்கு ஒரு ஆள போட்டிருக்கோம்” என்பார்! இதைக் கேள்விப்பட்ட கே.பி.க்கு பி.பி. எகிறியிருக்கும் என்று சொல்லவேண்டிய அவசியம் இல்லை!)

Okay, back to I was saying.... காதலன் படம் வெளிவந்த சமயத்தில் டைரக்டர் ஷங்கர் டி.வி.யில் ஒரு பேட்டி கொடுத்திருந்தார்! கமலைப் போல எவனுக்குமே புரியாத லெவலில் பேசியிருந்தார்! அதில் ஒன்று மட்டும் தெரிந்தது! ஷங்கர் சிறு வயதில் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறார் என்று! முக்கியமாக நன்றாக படித்தும் தனக்கு வசதி இல்லாததால் மேலே படிக்க வசதி இல்லாத விஷயத்தை சொல்லியிருப்பார்! அதை தன் படத்தில் காண்பிப்பது மட்டும் அல்லாமல், தன்னையே உருவகப்படுத்தி சில கதாபாத்திரங்களை காட்டியிருப்பார்!

ஜெண்டில்மேன்:

கிச்சாவிடம் (அர்ஜுன்) ஒரு பையன் வந்து முறுக்கு விற்பதற்கு சான்ஸ் கேட்பான்! கவுண்டமணி கேட்ட கேள்விக்கு பதிலாக கள்ள பூணூலை காண்பித்த்து “இதையாவது போட்டுட்டுபோய் விக்கறேன் சார்” என்று அழுதுகொண்டே சொல்லி கிச்சாவின் மனதைக் கரைப்பான்! அந்தப் பையன் தான் ஷங்கர், வேறு ஒரு உருவத்தில்! நல்லா படிச்சாலும் படிக்க வசதி இல்லை! அதனால பொய் சொல்றது தப்பில்லை என்பது ஷங்கரின் வாதம்!

காதலன்:

சொல்லவே தேவையில்லை! பிரவு தேவாதான் ஷங்கரின் உருவகம்! “தனக்கு தகுதி இல்லாததற்கு ஏன் ஆசைப்படவேண்டும்” என்று தந்தை (எஸ்.பி.பி.) கேட்டாலும் தான் நினைத்ததைஎப்படியாவது அடையும் சுபாவம்!

இந்தியன்:

சாட்சாத் இந்தியன் தாத்தாவே தான்! கஷ்டப்பட்டு வாங்கிய சுதந்திரத்தை இப்படி லஞ்சம் வாங்கி ஊழல் செய்து நாறடிக்கிறீர்களே என்று கேட்பது!

ஜீன்ஸ்:

மாதேஷ் கேரக்டர்! Green screen டெக்னிக்கில் தனக்கு உள்ள ஆர்வத்தை மாதேஷ் மூலமாக காண்பித்து இருப்பார்!

முதல்வன்:

இதில் புகழேந்தி ஒரு நாள் முதல்வராக இருந்துவிட்டு bad guys இடம் அடிவாங்கி வீட்டில் படுத்திருப்பார்! காலையில் எழுந்து பார்த்தால் வெளியில் ஒரே கூட்டம்! தன்னை அரசியலுக்கு வந்துவிடும்படி சொல்வார்கள்! ஆனால் அவர்கள் சொல்வதை கேட்காத புகழ், கால் இல்லமல் ஊனமாக இருக்கும் ஒருவர் சொல்லி முஷ்டியை உயர்த்துவார்! இதில் ஊனமாக வருபவர்தான் ஷங்கரின் உருவகம்!

பாய்ஸ்:

அந்த மணிகண்டன் கேரக்டர்! அடுத்தவர்களுக்கு ஐடியாவை அள்ளித்தந்துவிட்டு அவர்களை உயர்த்திவிட்டு தான் காணாமல் போவது! அது ஒருவகையான inferiority complex!

அந்நியன்:

சாட்சாத் அந்நியன் தான் ஷங்கர்! சமூகக் கொடுமைகளை நேரடியாக மக்களிடம் சொல்ல தைரியம் இல்லாமல் செல்லுலாய்டில் kick ass செய்வது போல காட்டியது!

சிவாஜி:

சந்தேகமே இல்லாமல் கடைசி சீனில் “ஐநூறு ரூபா! இன்னும் ரெண்டாயிரம் ரூபா கெடச்சா கேப்பிடேஷன் ஃபீயை சேத்துடலாம்” என்று சொல்லிக்கொண்டே சுமனின் கழுத்தை மிதிப்பானே ஒரு மாணவன்? அவன் தான் ஷங்கர்!
பி.கு.: மேலே உள்ள படத்தில் யார் ஷங்கர்னு கேக்காதீங்க, ப்ளீஸ்!